<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>சிறு-வெளியீடு &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://en.wordpress.com/tag/சிறு-வெளியீடு/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "சிறு-வெளியீடு"</description>
	<pubDate>Fri, 24 May 2013 12:26:36 +0000</pubDate>

	<generator>http://en.wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின் ]]></title>
<link>http://rsyf.wordpress.com/2012/04/22/lenin-birthday-lenin-book-part13-17/</link>
<pubDate>Sun, 22 Apr 2012 04:06:49 +0000</pubDate>
<dc:creator>புமாஇமு</dc:creator>
<guid>http://rsyf.wordpress.com/2012/04/22/lenin-birthday-lenin-book-part13-17/</guid>
<description><![CDATA[ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன் ரசியப் புரட்சியால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப]]></description>
<content:encoded><![CDATA[<p style="text-align:justify;">
<h3 style="text-align:justify;"><span style="color:#ff0000;">ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்</span></h3>
<div style="text-align:justify;"></div>
<div id="post-body-6266146914870916493" style="text-align:justify;">ரசியப் புரட்சியால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் போன்று ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் பயந்து நடுங்கினர். அவர்கள் தங்களுடைய நாடுகளில் ஏழைகளைக் கடுமையாகச் சுரண்டினார்கள். சோவியத் யூனியனைப் பார்த்து தங்கள் நாட்டு மக்களும் புரட்சி செய்வார்கள் என்று பயந்தனர். இப்படிப்பட்ட சூழலில் சோவியத் யூனியனே, இவர்கள் இந்தியா போன்ற நாடுகளை அடிமையாக (காலனி) வைத்து கொள்ளையடித்ததை எதிர்த்தது. ஆகவே அதை ஒழித்துக் கட்ட முடிவு செய்தனர்.எதிரிகளின் படைகள் சோவியத் யூனியனை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டன. தலைநகரத்தை நோக்கி வேகமாக முன்னேறின. பிடிபட்ட இடங்களில் எல்லாம் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன. ஏழை உழவர்களும், தொழிலாளர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டது. குழந்தைகள் கூட ஈவு இரக்கமின்றி சுடப்பட்டனர். உழவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவை பழைய பண்ணையார்களிடம் ஒப்படைக்ககப்பட்டது. அதே போல் தொழிற்சாலைகளில் முதலாளிகளின் சுரண்டல் மீண்டும் தொடங்கியது.</p>
<p>விரைவில் தலைநகரை கைப்பற்றி லெனினைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர், எதிரிகள். அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் ரசியாவை பங்கு போட்டுத் கொள்வதைப் பற்றி பகிரங்கமாக பேரங்கள் நடத்திக் கொண்டு இருந்தன. உலகின் முதல் சோசலிச நாடு அழிந்து விடுமோ என்ற அச்சம் உலக மக்களைக் கவ்விக்கொண்டது.</p>
<p><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/lenin.jpg" alt="" align="left" hspace="5" />இந்த அபாயகரமான சூழலில் லெனினுடைய முழக்கம் கணீரென எழுந்தது. சோசலிச தாய்நாடு ஆபத்தில் இருக்கிறது. தொழிலாளர்களே, விவசாயிகளே நாட்டைப் பாதுகாக்க படையில் சேருங்கள்.</p>
<p>எதிரிகள் வெற்றி பெற்றால் சோசலிசப் புரட்சி அளித்திருந்த உரிமைகள் அனைத்தும் பறிபோகும் என்று ரசிய உழைக்கும் மக்கள் புரிந்துக் கொண்டனர். அவர்கள் மீண்டும் பழையபடி வறுமையில் வாட விரும்பவில்லை. தங்களின் விடுதலையைப் பாதுகாக்க உழைக்கும் மக்களின் படையில் சேர்ந்தனர். அது செம்படை என்று அழைக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் படையில் சேர்ந்தனர்.</p>
<p>உக்கிரமான போர் தொடங்கியது. செம்படையை விட எதிரிகளிடம் பெரிய படை இருந்தது. நவீனமான ஆயுதங்கள் இருந்தன. ஏகாதிபத்தியங்கள் போரில் வெற்றி பெற பணத்தை வாரி இறைத்தன. எதிரிகள் டாங்குகள், பெரிய பீரங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் தூப்பாக்கிகள், போர்விமானங்கள் போர்க்கப்பல்கள் முதலியவற்றைக் கொண்டு தாக்கினர். செம்படையிடமோ பழங்காலத்து துப்பாக்கிகளும் கத்திகளும் தான் இருந்தன. ஆனால் அவர்கள் மன உறுதியுடனும், வீரத்துடனும் போரிட்டனர். அந்த மன உறுதியை மக்களுக்கு ஊட்டியவர் தோழர் லெனின்.</p>
</div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;">
<h3>எதிரிகளை வீழ்த்திய செம்படை</h3>
<div></div>
<div id="post-body-2247228162312321431">லெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப்படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.ஒருநாள் லெனின் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசி முடித்தப் பின் அரகங்த்தை விட்டு வெளியேறி வந்தார். திடீரென துப்பாக்கி சத்தம் பேரிடி போல் ஒலித்தது. கணநேரம் தான், மூன்று குண்டுகள் லெனினுடைய உடலைத் துளைத்தன. சுட்ட துரோகியை மக்கள் வளைத்துப் பிடித்தனர். ஆனால், லெனினுடைய நிலைத்தான் மிகமோசகமாக இருந்தது. கழுத்தில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ஏராளமான இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப் போனார்கள். லெனின் பதறவில்லை. உண்மையான வீரனுக்குரிய துணிவோடு தானே நடந்து சென்று காரில் உட்கார்ந்தார். கார் மருத்துவமனைக்கு பறந்தது.</p>
<p>அவருடைய உடல்நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்வது அவசியம். ஆனால் அறுவையின் போது உயிர் போய்விட்டால்? மருத்துவர்கள் பயந்தார்கள். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த லெனின் மருத்துவர்களுக்கு தைரியம் கூறினார். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு உள்ளேயே தங்கிவிட்டன.</p>
<p><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/have_you_volunteered_for_the_red_ar.jpg" alt="" align="right" hspace="5" />தங்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திய சோசலித்தை வீழ்த்தவே லெனின் சுடப்பட்டார் என்ற உண்மை மக்களுக்குப் புரிந்தது. லெனின் மீதான தாக்குதலுக்கு பழி வாங்க மக்கள் சபதம் ஏற்றனர். சோசலிசத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் எதிரிகளை பழிவாங்க முடியும். ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டியப் பொருட்களை ஆறு மாதத்தில் உற்பத்தி செய்யப் போவதாக தொழிலாளர்கள் உறுதி பூண்டனர். எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பிறகு மேலும் நான்கு மணி நேரம் இலவசமாக, சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர்.<br />
எதிரிப் படைகளை முறியடிக்க செம்படை உறுதி பூண்டது. மேலும் அதிக வீரத்துடன் போரிட்டது. லெனின் சுடப்பட்ட அடுத்த நாள் அவருடைய சொந்த ஊரான சிம்பிர்ஸ்க் நகரம் மீட்கப்பட்டது. செம்படையின் வெற்றி துவக்கியது.</p>
</div>
<div>
<h3></h3>
<h3></h3>
<h3></h3>
<h3><span style="color:#ff0000;">பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்</span></h3>
<div></div>
<div id="post-body-2299932119990125176">
<img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/communist-leaders.jpg" alt="" align="center" hspace="5" />போரினால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தலைநகரில் உணவு தானியம் மிக அரிதாகவே கிடைத்தது. உணவுப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க லெனின் அமைச்சரவையைக் கூட்டினார். அந்த கூட்டம் நடந்து கொண்டு இருந்த போதே உணவுத்துறை அமைச்சர் மயங்கி விழுந்தார். காரணம் அவர் கடந்த எட்டு நாட்களாக ஒரு வாய் உணவு கூட அருந்தவில்லை. தன் கட்டுபாட்டில் இருந்த உணவை குழந்தைகள், நோயாளிகள், பெண்கள், முதியவர் ஆகியோருக்கு விநியோகித்தார். நாட்டு மக்கள் வயிறார சாப்பிடும் போதுதான் தானும் வயிறார சாப்பிடப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார். சோசலிச சோவியத் யூனியனில் மந்திரிகள் அப்படித்தான் இருந்தனர்.</p>
<p>அந்த தோழர் மட்டும் அல்ல லெனினும் பலநாள் பட்டினி தான். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை. சோசலிசத்தைப் பாதுகாக்க இரவு பகலாக உழைத்தார். அவர் இராணுவத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. உணவுப் பிரச்சினையை தீர்க்க வேண்டியிருந்தது. கல்வி, தொழில் வளர்ச்சிக்கான திட்டம் இடுதலை நிறைவேற்ற வேண்டியிருந்தது. பொதுவுடைமைச் சமுதாயத்தை நோக்கி நாட்டை வழி நடத்த வேண்டியிருந்தது. உள்ளுக்குள் இருந்து சதி செய்த சதிகாரங்களை களையெடக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் தோன்றின. அனைத்தையும் லெனினே முன்னின்று தீர்க்க வேண்டியிருந்தது.</p>
</div>
</div>
<div></div>
<div>
<h3><span style="color:#ff0000;">மக்களின் மகத்தான தலைவர் லெனின்</span></h3>
<div></div>
<div id="post-body-5777825468144489499">லெனின் பட்டினி கிடப்பது கிராமங்களில் இருந்த மக்களுக்கு தெரிய வந்தது. அதேநேரத்தில் அவருடைய பிறந்த நாளும் நெருங்கியது. லெனினுக்கு உழவர்கள் பரிசளிக்க தங்களால் இயன்ற உணவுப் பொருட்களைத் திரட்டினார்கள். ஆனால் தலைநகர் எதிரிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. உழவர்களின் பிரதிநிதிகள் காட்டு வழியே நடந்தனர். எதிரியின் வளையத்தை தந்திரமாக உடைத்துக் கொண்டு தலைநகரை அடைந்தனர்.ஏராளமான உணவுப் பொருட்கள் அவர் வீட்டின் முன் குவிந்தது. லெனின் உழவர்களுக்கு நன்றி சொன்னார். ஆனால் உணவுப் பொருட்களைத் தொடவில்லை. பள்ளியில் பயிலும் குழந்தைக்களுக்கு அவற்றை விநியோகிக்கும்படி உத்தரவிட்டார். தான் எப்போதும் சாப்பிடுவதும் போல கால் வயிறு கூட நிரம்பாத அளவுக்கு உப்புசப்பற்ற கஞ்சி குடித்தார்.</p>
<p><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/leninlives.jpg" alt="" align="right" hspace="5" />லெனினுக்கு பரிசாக வந்த உணவுப் பொருட்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காத்தது. அனைத்தையும் விட குழந்தைகளின் நலனே முக்கியமானது என்ற லெனின் அடிக்கடி கூறுவார் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சி செய்ததும், அதை பாதுகாக்க போர் செய்வதும், எதிர்காலத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்பதற்காகத்தான் என்பதை அடிக்கடி நினைவுபடுத்துவார்.</p>
<p>கடும் பஞ்சத்திலும், போருக்கும் நடுவே ஆயிரக்கணக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டன. குழந்தைகள் அறிவாளிகளாக வளர்க்கப்பட்டனர். கல்விமுறை ஜனநாயகப்படுத்தப்பட்டது. மனப்பாடக் கல்வி ஒழிந்தது. மாணவர்களின் திறன்களை வளர்க்கும் கல்வி மலர்ந்தது. வளமான வருங்காலத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.</p>
<p>கடின காலம் மெதுவாக அகலத் தொடங்கியது. விவசாய உற்பத்தியும், தொழில் உற்பத்தியும் பெருகியது. இதே நேரத்தில் போர் முனையில் இருந்து வெற்றிச் செய்திகள் குவியத் தொடங்கின உழைக்கும் மக்கள் காட்டிய வீரத்தின் முன் எதிரிகள் கூலிப்படை தோற்று ஓடியது. 21 நாடுகளின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் பிரான்சும் வாலைச் சுருட்டிக் கொண்டு ஒடுங்கின.</p>
<p>ஆனால், இந்த வெற்றி சாதாரணமாக கிடைக்கவில்லை. நான்கு வருடங்கள் போர் நடந்தது. முப்பது லட்சம் செம்படை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.</p>
</div>
<div>
<h3><span style="color:#ff0000;">லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை</span></h3>
<div></div>
<div id="post-body-577437785178321086">போருக்கு பிறகு பூமியில் சொர்க்த்தை படைக்கும் முயற்சி தொடங்கியது ஆம் சோசலிசம் என்பது பூமியில் சொர்க்கத்தை ஏற்படுத்தும் முயற்சிதான். இதற்கு லெனின் திட்டம் தீட்டினார். நாடு முழுவதும் தொழிற்சாலைகள் தோன்றின. புதிய நகரங்கள் எழுந்தன. உற்பத்தி பல மடங்கு பெருகியது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. பட்டினி, வறுமை என்பவை பழைய வசயங்களாகி விட்டன. ஏழைகளே இல்லாத ஒரே நாடாக சோவியத் யூனியன் விளங்கியது.இந்த நேரத்தில்தான் அந்த பேரிடி இறங்கியது. லெனின் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் படுத்த படுக்கை ஆனார். ஓய்வறியாத உழைப்பே இதற்கு காரணம். அவர் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது, வேலை செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. தான் இதுவரை செய்த வேலையை இனி யார் செய்வார் எனக் கவலைப்படத்தொடங்கினார்.</p>
<p><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/lenin-and-stalin.jpg" alt="" align="left" hspace="5" />ஆனால் அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. லெனினுடைய நெருங்கிய தோழரான ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். லெனினுடைய திட்டங்களை முறையாக அமல்படுத்தினார். லெனினைப் போலவே உழைக்கும் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்தார். விரைவிலேயே உலகின் முதல் வளர்ச்சி அடைந்த நாடாக சோவியத் யூனியனை மாற்றினார்.</p>
<p>ஸ்டாலினுடைய வேலைகள் லெனினுக்கு மன நிம்மதியைக் கொடுத்தன. ஆனால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமானது. கை, கால்கள் செயலிழந்து விட்டன. ஒவ்வொரு உறுப்பாக வேலை செய்வதை நிறுத்தியது. அவருடைய உடல்நிலை சீரடையும் என்று மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.</p>
<p>1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் லெனின் மரணம் அடைந்தார். அவருடைய உடல் முதல்முறையாக ஓய்வு கொண்டது. இறுதியாக அவரது உடலைக் காண பல இலட்சம் மக்கள் திரண்டனர். உலக நாடுகளின் தொழிலாளர்களும் ஏராளமாக வந்தனர்.</p>
<p><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/embalmedlenin.jpg" alt="" align="right" hspace="5" />சோவியத் மக்கள் ஒரு முடிவு எடுத்தனர். உலகின் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்திய லெனினது உடலை அழியவிடக்கூடாது. சோவியத் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விவாதித்தனர். இரசாயனங்களின் உதவியுடன் ஒரு கண்ணாடி பேழையில் அவரது உடலைப் பாதுகாக்க முடிவு செய்தனர். நீண்ட நாட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த அவரது உடல் சமீபத்தில் தான் அகற்றப்பட்டது. வியர்வை சிந்தி உழைக்கும் கடைசி மனிதன் இருக்கும் வரை லெனினது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.</p>
<p><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/lenin-among-children-salute_1918may.jpg" alt="" align="left" hspace="5" />உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளாகிய நாம் மார்க்கிய ஆசான் லெனின் வழியை பின்பற்றுவோம். பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் அணி திரள்வோம் மார்க்சிய -லெனினிய &#8211; மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! நம் நாட்டிலும் ஒரு புரட்சியை நடத்தி முடிப்போம். சமூக மாற்றத்தை நிகழ்த்தி காட்டுவோம்! நவம்பர் -7 புரட்சி தினத்தில் உறுதியேற்போம்.</p>
</div>
</div>
</div>
<div>
<p>தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் லெனினைத் தேடி வந்தனர். உழைக்கும் மக்களின் மன்றமான சோவியத்தை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி நடத்துவது என்று அவரிடம் கேட்டு அறிந்தனர். அவர் ஒரு நாளைக்கு இருபத்திரண்டு மணி நேரம் உழைத்தார். இந்தக் கடினமான உழைப்பினாலும், உணவுப் பற்றாக்குறையாலும் லெனினுடைய உடல்நிலை மோசமடைந்தது.</p>
</div>
</div>
<div style="text-align:justify;"></div>
<div>
<h3 style="text-align:justify;"><a href="http://rsyf.wordpress.com/2012/04/15/lenin-birthday-lenin-book-part12/" target="_blank">இவர் தான் லெனின் பகுதி 1</a></h3>
<h3 style="text-align:justify;"><a href="http://rsyf.wordpress.com/2012/04/16/lenin-birthday-lenin-book-part3-6/" target="_blank">இவர் தான் லெனின் பகுதி 2</a></h3>
<h3 style="text-align:justify;"><a href="http://rsyf.wordpress.com/2012/04/18/lenin-birthday-lenin-book-part7-9/" target="_blank">இவர் தான் லெனின் பகுதி 3</a></h3>
<h3 style="text-align:justify;"><a href="http://rsyf.wordpress.com/2012/04/20/lenin-birthday-lenin-book-part10-12/" target="_blank">இவர் தான் லெனின் பகுதி 4</a></h3>
<h2 style="text-align:justify;">தொடர்புடைய பதிவுகள்:</h2>
<div>
<h2 style="text-align:justify;"><a title="ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்" href="http://rsyf.wordpress.com/2011/11/06/russia-periyar-told/" rel="bookmark">ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்</a></h2>
<h3 style="text-align:justify;"><a href="http://blackboards.blogspot.in/2007/04/blog-post_6993.html" target="_blank">&#8220;லெனின்&#8221;- புகைப்படங்கள்</a></h3>
<p><a href="http://poarmurasu.blogspot.com/2007/07/blog-post_09.html">லெனின் &#8211; ஓவியங்களில்</a></p>
</div>
</div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி]]></title>
<link>http://rsyf.wordpress.com/2012/04/20/lenin-birthday-lenin-book-part10-12/</link>
<pubDate>Fri, 20 Apr 2012 03:27:59 +0000</pubDate>
<dc:creator>புமாஇமு</dc:creator>
<guid>http://rsyf.wordpress.com/2012/04/20/lenin-birthday-lenin-book-part10-12/</guid>
<description><![CDATA[ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி  லெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர் என்றனர]]></description>
<content:encoded><![CDATA[<h3 style="text-align:justify;"><span style="color:#ff0000;"><strong>ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி</strong></span></h3>
<div style="text-align:justify;"> லெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர் என்றனர். ஏழை நாடுகளை அடிமையாக்குவதன் மூலம் அவற்றைச் சுரண்டி பணக்கார நாடுகளின் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள். தொழிலாளர்களுக்கு இதில் நன்மை ஏதுமில்லை. மேலும் அதற்கான போரில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் வீணாக உயிரை இழக்க நேரிடும். இதற்கு பதிலாகத் தங்களை இதுவரை சுரண்டிக் கொழுத்துள்ள சொந்த நாட்டு முதலாளிகளுடன் போரிட்டால், தொழிலாளர் வாழ்வில் விடியல் பிறக்கும் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் ஒரே மாதிரிதான் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒன்றுபட வேண்டும். புரட்சி செய்ய வேண்டும் என்று லெனின் கூறினர்.</div>
<div id="post-body-5994482874861267780" style="text-align:justify;">
ஆனால் போர் வெறி யூட்டப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் காதுகளில் இது ஏறவே இல்லை. போர் மேலும் மேலும் உக்கிரமடைந்த போதுதான் அவர்களுக்கு இது உறைத்தது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சம் தலைவிரித்தாடியது. எங்கும் பசி பட்டினி, தொழிலாளர்கள் ஜாருக்காக சண்டையிட்டு மடிந்து கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தனர். இந்தக் கஷ்டம் தொழிலாளர்களுக்குத் தான் முதலாளிகளோ போரைப் பயன்படுத்தி எல்லா பொருட்களுக்கும் விலை ஏற்றினர். கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.</p>
<p><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/lenin-signature.jpg" alt="" align="right" hspace="5" />லெனினுடைய வார்த்தைகள் எவ்வளவு சரியானவை என்ற மக்கள் புரிந்து கொண்டனர். இந்தக் கொள்ளைக்காரப் போரை நிறுத்தும்படி படைவீரர்களும், தொழிலாளர்களும் கொடுத்த மனுக்கள் குப்பையில் வீசப்பட்டன. மக்களின் கோபம் எல்லை மீறியது. 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரட்சி வெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தை முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.</p>
<p>வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த லெனின் ரசியாவிற்கு விரைந்து வந்தார். பெத்ரோகிராடு ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் முன்னே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நின்றனர். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அவர்கள் ஓடோடி வந்திருந்தனர்.</p></div>
<div>
<h3 style="text-align:justify;"><span style="color:#ff0000;"><strong>சதியை முறியடித்த லெனின்</strong></span></h3>
<div style="text-align:justify;"> ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு லெனின் பேசத் தொடங்கினார். தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் ஜாரை வீழ்த்திவிட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடையவில்லை. ஜாரின் அதிகாரத்தை முதலாளிகளும், பண்ணையார்களும் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைக்களைச் சுரண்டுவதையே இவர்கள் ஆதரிப்பார்கள். பிற நாடுகளைக் கொள்ளையடிக்க போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு. தொடர்ந்து முன்னேறுங்கள் என்று அறைகூவினார்.</div>
<div id="post-body-2146716086958543240" style="text-align:justify;">
லெனினுடைய வார்த்தைகளை நம்பிய தொழிலாளர்கள் சிறுபான்மையினராகவே இருந்தனர். பெரும்பாலானவர்கள் முதலாளிகளுடைய நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது. புதிய அரசு போரில் உழைக்கும் மக்கள் வீணாக சாவதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. ஏழைகள் பட்டினியால் மாண்டனர். பணக்காரர்கள் தேசத்தின் செல்வத்தை உறிஞ்சிக் கொழுத்தனர். நாடாளுமன்றத்தில் அடிதடியும் ரகளையும் தான் நடந்தது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்தனர். லெனினுடைய கருத்துக்களே சரியானவை என ஏற்கத் தொடங்கினர்.</p>
<p>மக்களை ஒடுக்குவதற்காக புதிய அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. லெனினைக் கொலை செய்யும்படி படைகளுக்கு கட்டளையிடப்பட்டது. மீண்டும் ஒரு முறை லெனின் தலைமறைவாக செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இந்தமுறை அவர் பெத்ரோகிராடை விட்டு வெகுதூரம் செல்லவில்லை. எப்படியும் புரட்சி வெடிக்கும் என்று நம்பினார். அதனால் பெத்ரோகிடின் அருகிலேயே தங்கினார்.</p>
<p><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/lenin-in-disguise1917.jpg" alt="" align="left" hspace="5" />புல் அறுப்பவராக, கூலி விவசாயியாக, என்ஜின் டிரைவராக மாறுவேடம் பூண்டு வெவ்வேறு இடங்களில் தங்கினார். ஹெல்சிங்கி நகரில் லெனின் தங்கியிருப்பதாக அரசு சந்தேகப்பட்டது. அந்தநகரின் மூலைமுடுக்குகளெல்லாம் வலைவீசித் தேடியது. ஒரு இளம் காவல் துறை அதிகாரியிடம் லெனினைப் பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், அந்த அதிகாரியின் வீட்டில் லெனின் பாதுகாப்பாகத் தங்கியிருந்தார். ஒரு தொழிலாளியின் மகனான அந்த இளம் காவல் அதிகாரி கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார்.</p>
<p>மக்களின் கோரிக்கைகளான போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம் போன்றவற்றை கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே செயல்படுத்த முடியும் என மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினர். ரசியாவெங்கும் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. புரட்சிக்கான காலகட்டம் நெருங்கிவிட்டது. என லெனின் உணர்ந்து கொண்டார். உடனடியாக தொழிலாளர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் கட்சி அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் அவர் கூறியதைக் கட்சியின் மையக் குழு ஏற்றுக் கொண்டது.</p>
<p>ஆனால் மைக்குழுவில் இருந்த பயந்தாங்கொள்ளிகள் இத்திட்டத்தை எதிர்த்தனர். அதுமட்டுமல்ல, மிக இரகசிமான இந்த திட்டத்தை பத்திரிகைகளுக்கு வெளிப்படுத்தி துரோகம் செய்தனர். ஆகவே திட்டத்தில் குறிப்பிட்டிருந்த நாளுக்கு முன்பாகவே நவம்பர் 7-ம் தேதி புரட்சியைத் தொடங்க முடிவு செய்தார் லெனின். இத்தகவல் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்களுக்கு ரகிசயமாக கொண்டு செல்லப்பட்டன.</p></div>
<div>
<h3 style="text-align:justify;"><strong><span style="color:#ff0000;">சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி</span></strong></h3>
<div style="text-align:justify;"></div>
<div id="post-body-4027378646066502368" style="text-align:justify;"><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/hammer-sickle.jpg" alt="" align="right" hspace="5" />1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது. அந்த நாளில் தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது. அந்த நாளில்தான். அன்றுதான் உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.</p>
<p>அன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.</p>
<p>ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும், வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.</p>
<p>உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தை நடத்தின. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழவும் தேர்ந்தெடுக்கப்படும். நிர்வாகக் குழ உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம் நடைபெறும். அதில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படும். திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஊழல் புகார் எழுந்தாலும் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். அதுமட்டுமல்ல நீதிமன்றங்களாக செயல்படும் அதிகாரமும் சோவியத்துகளுக்கு இருந்தது.</p>
<p>மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமல்படுத்தி, மக்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சி முறை. லெனினால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி முறைதான் உண்மையான, ஜனநாயகம். இதில் மக்களே சர்வ அதிகாரம் படைத்தவர்கள்.</p>
<p>தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. இதுவரை தனிப்பட்ட முதலாளிகளின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. புரட்சிக்குப் பின்னர் மக்களுக்கு எவ்வளவு பொருட்கள் தேவையோ அவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொருக்கும் திறமைக்கேற்ற வேலை வழங்கப்பட்டது. வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் நொடியில் மறைந்தது.</p>
<p>நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில். இதை மனதில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளில் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாட கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அறிவு மற்றும் திறமைகளின் வளரச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.</p>
<p>அதுமட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரசியா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழுவிடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார்.</p>
<p>தொழிற்சாலை உற்பத்தி, விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது. அப்போதுதான் அந்தக் கொடுமை நடந்தது. ஒரு இளம் குழந்தையைக் குத்திக் குதற 22 கழுகுகள் பாய்ந்தன. சோவியத் யூனியன் மீது 21 பணக்காரநாடுகள் படையெடுத்தன.</p></div>
<div style="text-align:justify;">
<h3><span style="color:#ff0000;"><a href="http://rsyf.wordpress.com/2012/04/15/lenin-birthday-lenin-book-part12/" target="_blank"><span style="color:#ff0000;">இவர் தான் லெனின் பகுதி 1</span></a></span></h3>
<h3><span style="color:#ff0000;"><a href="http://rsyf.wordpress.com/2012/04/16/lenin-birthday-lenin-book-part3-6/" target="_blank"><span style="color:#ff0000;">இவர் தான் லெனின் பகுதி 2</span></a></span></h3>
<h3><span style="color:#ff0000;"><a href="http://rsyf.wordpress.com/2012/04/18/lenin-birthday-lenin-book-part7-9/" target="_blank"><span style="color:#ff0000;">இவர் தான் லெனின் பகுதி 3</span></a></span></h3>
<h2>தொடர்புடைய பதிவுகள்:</h2>
<div>
<h2><a title="ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்" href="http://rsyf.wordpress.com/2011/11/06/russia-periyar-told/" rel="bookmark">ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்</a></h2>
</div>
<h2><a title="கிராவ் நம்முடன் இருக்கிறார்! அவரது நீட்டிய கரம் போராட அழைத்துக்கொண்டே இருக்கிறது!" href="https://rsyf.wordpress.com/2011/12/01/longlive-sergei_kirov/" rel="bookmark">கிராவ் நம்முடன் இருக்கிறார்! அவரது நீட்டிய கரம் போராட அழைத்துக்கொண்டே இருக்கிறது!</a></h2>
<h2><a title="சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்" href="https://rsyf.wordpress.com/2011/11/23/russia-judgement-periyar/" rel="bookmark">சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்</a></h2>
</div>
</div>
</div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்]]></title>
<link>http://rsyf.wordpress.com/2012/04/18/lenin-birthday-lenin-book-part7-9/</link>
<pubDate>Wed, 18 Apr 2012 03:40:46 +0000</pubDate>
<dc:creator>புமாஇமு</dc:creator>
<guid>http://rsyf.wordpress.com/2012/04/18/lenin-birthday-lenin-book-part7-9/</guid>
<description><![CDATA[ சைபீரியச் சிறைவாசம்  1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது செய்யப்பட்ட]]></description>
<content:encoded><![CDATA[<h3><strong><span style="color:#ff0000;"> சைபீரியச் சிறைவாசம்</span></strong></h3>
<div style="text-align:justify;"> 1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்கு ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீரியாவிற்கு அனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீரியா என்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும். எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும். ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி விடும். அங்கே அவர்கள் குளிரில் விறைத்து இறந்து போவார்கள்.</div>
<div id="post-body-8327107984417085168" style="text-align:justify;">
ஆனால் சைபீரியக் குளிரை லெனின் தோற்கடித்தார். அவருடைய உறுதியான உடற்கட்டையை உருக்குலைக்க சைபீரியப் பனிப் பிரதேசத்தால் இயலவில்லை. அதுமட்டுமல்ல லெனின் தான் காதலித்த கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத் திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீரியாவிற்கு நாடு கடத்தியிருந்தது ஜார் அரசு.</p>
<p><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/lenin-reading-newspaper.jpg" alt="" align="left" hspace="5" />சைபீரியாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள் எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும் புத்தகங்கள். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்திரிக்கை அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்த முடியாது. அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிக்கையை வெளியிட முடிவு செய்தார். பத்திரிக்கையின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில் கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புரட்சியை வழி நடத்தமுடியாது.</p>
<p>1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். இஸ்கரா என்ற முதல் கம்யூனிச பத்திரிகை வெளிவந்தது.</p></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div>
<h3 style="text-align:justify;"><strong><span style="color:#ff0000;">மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்</span></strong></h3>
<div style="text-align:justify;"></div>
<div id="post-body-5983015057117143809" style="text-align:justify;">லெனினுடைய கருத்துக்களை ஆதரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்திரிக்கையை நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்தனர் தொழிலாளர்கள். லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி காட்டியது. அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.</p>
<p>அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன. கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது.<br />
தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினார்..</p>
<p><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/blacksunday.jpg" alt="" align="right" hspace="5" />1905-ஆம் ஆண்டு ஜாரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வறுமை நிலையை ஜாரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயாரித்தனர். அதை ஜாரிடம் கொடுக்க பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினர். ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள் அதிர்ந்தன. பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்</p>
<p>கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போரிட தொழிலாளர்கள் துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது. வெளிநாட்டில் இருந்த லெனின் புரட்சிக்குத் தலைமை ஏற்க பெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார். இருந்ததும் முதல் ரசியப் புரட்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர வில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப்படுத்தினார். தோல்வியில் இருந்து பாடம் கற்போம். தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே என்றார்.</p>
<p>புரட்சியை ஒடுக்கிய ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன் படைகளுக்கு உத்தரவிட்டான். அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டை விட்டுத் தலைமறைவாக வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அது மிகவும் ஆபத்தான வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல் வழியாக பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார். அது குளிர் காலமாதலால் கடலின் மேற்பரப்பு பனிக்கட்டி பாளமாக மாறியிருந்தது. கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்த நேரத்தில்தான் லெனின் துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீது நடந்து செல்வதே அம்முடிவு.</p>
<p>அது மிகமிக அபாயகரமான திட்டம் பனிப்பாளம் பல இடங்களில் மிக மெல்லியதாக இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளே நடுக்கடலில் விழுந்தால் மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, அச்சுமூட்டும் பனிப்புயலும் வீசிக் கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாது கடல் மீது நடக்கத் தொடங்கினார்.</p></div>
<div style="text-align:justify;">
<h3><span style="color:#ff0000;"><strong>அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்</strong></span></h3>
<div> 1905-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோதனையான கால கட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர்; சித்திரவதை செய்யப்பட்டனர். லெனினுடைய குடும்பமும் சித்திரவதைக்கு உள்ளானது. இந்தத் தாக்குதல்கள் கம்யூனிஸ்ட் கட்சியை கலைக்கும்படி கூறினர்.</div>
<div id="post-body-3034041961521469283">
<img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/leninlives.jpg" alt="" align="left" hspace="5" />இந்தக் கோழைக்களுக்கு லெனின் சரியான பதிலடி கொடுத்தார். புரட்சியில் தொழிலாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே அதற்கு வழிகாட்ட முடியும் என்றும் சான்றுகளுடன் நிரூபித்தார். தொழிலாளர்களின் மனக்கலக்கத்தைப் போக்கினார். மீண்டும் அவர்களை அணிதிரட்டினார்.</p>
<p>இதே நேரத்தில் ஏகாதிபத்திய நாடுகள் உலகப்போருக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தன. பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா முதலிய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைத் தம் அடிமையாக (காலனியாக) வைத்திருந்தன. இந்த நாடு பிடிக்கும் போட்டியில் தாமதமாக குதித்தன ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, துருக்கி முதலிய நாடுகள். இவை பழைய ஏகாதிபத்தியங்களிடம் உலகைப் பிரித்து தமது பங்கைக் கொடுக்குமாறு கேட்டன. இக்கோரிக்கை மறுக்கப்பட்டது உலகை ஏற்கெனவே கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிரிட்டன், அமெரிக்கா, பிரான்சு ஒருபுறமும், புதிதாக கொள்ளையடிக்கப் புறப்பட்ட ஜெர்மனி முதலான நாடுகள் மறுபுறமாக 1914-ஆம் வருடம் போரில் ஈடுபட்டன. இதுவே முதல் உலகப் போரானது. இதில் ரசியா, பிரிட்டனை ஆதரித்து ஜெர்மனிக்கு எதிராகப் போரில் குதித்தது.</p></div>
<p>அவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச் கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பாதிதூரம் கடந்துவிட்டனர்.</p>
<p>அப்போதுதான் அந்த விபத்து நடந்தது. லெனின் கால் வைத்த இடத்தில் இருந்த பனிப்பாளம் உடைந்தது. அவர் தொப்பென கடலுக்குள் விழுந்தார். உள்ளே எலும்பை உறைய வைக்கும் குளிர். உடையின் பாரம் கீழ் நோக்கி இழுத்தது. லெனினுடைய உறுதியான உடல் போராடியது. இறுதியாக உடைந்த பனிப்பாளத்தின் விளிம்பை பிடித்தார். மேலே நின்று கொண்டிருந்த மூன்று தோழர்களும் கை கொடுத்து தூக்கி விட்டனர். லெனினுடைய மன உறுதிக்கு இது மேலும் ஒரு சான்று.</p></div>
</div>
<div></div>
<div>
<div>
<h3 style="text-align:right;"><a href="http://rsyf.wordpress.com/2012/04/15/lenin-birthday-lenin-book-part12/" target="_blank">இவர் தான் லெனின் பகுதி 1</a></h3>
<h3 style="text-align:right;"><a href="http://rsyf.wordpress.com/2012/04/16/lenin-birthday-lenin-book-part3-6/" target="_blank">இவர் தான் லெனின் பகுதி 2</a></h3>
</div>
<div>
<h2>தொடர்புடைய பதிவுகள்:</h2>
<div>
<h2><a title="ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்" href="http://rsyf.wordpress.com/2011/11/06/russia-periyar-told/" rel="bookmark">ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்</a></h2>
</div>
<h2><a title="கிராவ் நம்முடன் இருக்கிறார்! அவரது நீட்டிய கரம் போராட அழைத்துக்கொண்டே இருக்கிறது!" href="https://rsyf.wordpress.com/2011/12/01/longlive-sergei_kirov/" rel="bookmark">கிராவ் நம்முடன் இருக்கிறார்! அவரது நீட்டிய கரம் போராட அழைத்துக்கொண்டே இருக்கிறது!</a></h2>
<h2><a title="சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்" href="https://rsyf.wordpress.com/2011/11/23/russia-judgement-periyar/" rel="bookmark">சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்</a></h2>
</div>
</div>
<div></div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[லெனின் தேர்வு செய்த பாதை  போராட்டமே வாழ்க்கையாக...! ]]></title>
<link>http://rsyf.wordpress.com/2012/04/16/lenin-birthday-lenin-book-part3-6/</link>
<pubDate>Mon, 16 Apr 2012 09:03:41 +0000</pubDate>
<dc:creator>புமாஇமு</dc:creator>
<guid>http://rsyf.wordpress.com/2012/04/16/lenin-birthday-lenin-book-part3-6/</guid>
<description><![CDATA[துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்  லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில்]]></description>
<content:encoded><![CDATA[<h3 style="text-align:justify;"><strong><span style="color:#ff0000;">துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன் </span></strong></h3>
<div id="post-body-246714391467114945" style="text-align:justify;"><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/child-lenin-with-sister.jpg" alt="" align="left" hspace="5" />லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாக பணி புரிந்தார். நேர்மையான மனிதர். தாயார் மரியா உல்யானவ் அன்பே வடிவானவர். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதிரிகள் லெனினுடைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும், பண்புடையவர்களாகவும் வளர்த்தனர். மேலும் தங்கள் சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான கதைகளைச் சொல்வார்.சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.</p>
<p><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/young-lenin.jpg" alt="" align="right" hspace="5" />அவர்தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகம். சகோதரர்கள் இருவரும், உலகம் எப்படி தோன்றியது? உயிர் எப்படி தோன்றியது? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க விவாதிப்பார்கள். நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமான விசயங்கள் தெரிந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும் அறிவாளியாக வேண்டுமென்று லெனின் தீர்மானித்துக் கொண்டார். அதற்காக கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தார்.</p>
<p>இப்படி மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்வில் முதல் இடி விழுந்தது. திடீரென ஒருநாள் தந்தை இறந்து போனார். அந்த அடியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த இடி தாக்கியது. ரசியாவில் கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனைக் கொல்ல முயற்சி செய்ததற்காக அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த செய்தியால் குடும்பம் நிலைகுலைந்து போனது.</p>
<p><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/lenin-brother-alexander.jpg" alt="" align="left" hspace="5" />அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப் பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமான துக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்ற மனவலிமைக்கு ஒரு சான்று.</p>
</div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div>
<h3 style="text-align:justify;"><span style="color:#ff0000;">வக்கீல் உருவில் ஒரு போராளி!</span></h3>
<div style="text-align:justify;"></div>
<div id="post-body-2938849627325901135" style="text-align:justify;"><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/lenin-law-student.jpg" alt="" align="right" hspace="5" />லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகரின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராக மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். ஜார் தேசத்தின் வளங்களை சூறையாடி ஆடம்பரமாக செலவு செய்தான். மக்களையோ வறுமையில் தள்ளினான். அவர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தான். மன்னன் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக ஆட்சி நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை.மாணவர்களின் போராட்டத்தை வன்முறையால் ஒடுக்கினான் ஜார். மாணவர்கள் குற்றவாளிகளைப் போல கண்காணிக்கப்பட்டனர். கசான் பல்கலைக்கழகம் சிறைச்சாலை போல மாற்றப்பட்டது. மாணவர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. தன்மானமுள்ள மாணவர்கள் இதை எதிர்க்கத் தீர்மானித்தனர். ஒட்டு மொத்தமாக பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறினர். லெனினும் வெளியேறினார்.</p>
<p>பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய லெனின், ஜார் ஆட்சியின் கொடுமைகளை அனுபவத்தின் மூலம் புரிந்துகொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடத் தீர்மானித்தார். வழக்கறிஞர் தொழிலின் மூலம் அதை செய்யத் திட்டமிட்டார். எனினும் சட்டக்கல்லூரியில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தனர். லெனின் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். வீட்டில் இருந்தே படித்தார். நான்கு வருட சட்டக்கல்வியை ஒன்றரை ஆண்டில் படித்து முடித்துப் பட்டம் பெற்றார். அதிலும் மாநிலத்தில் முதலாவதாக.</p>
<p>அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு துக்க செய்தி அவரது தங்கை ஓல்கா நோயினால் மரணமடைந்தார். லெனினுடைய தாயார் மனமுடைந்து போனார். லெனின் பெத்ரோகிராடு நகரில் வழக்கறிஞர் தொழில் மேற்கொள்ள சென்றார். அவருடைய குடும்பம் மாஸ்கோ நகரில் குடியேறியது.</p>
</div>
<div>
<h3 style="text-align:justify;"><span style="color:#ff0000;">லெனின் தேர்வு செய்த பாதை</span></h3>
<div style="text-align:justify;"> லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே நடத்தினரர். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. ஏனெனில் தொழிலாளர்கள் மிக வறியச் சூழலில் வாழ்ந்தனர். ஜார் ஆட்சிக்கு முடிவு கட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை உணர்ந்து கொண்டார் லெனின். அது குறித்து தீவிரமாகச் சிந்தித்தார். ஏராளமாகப் படித்தார். அப்படித் தான் அவர் காரல்மார்க்ஸ் என்பவர் எழுதிய மூலதனம் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. லெனினை அந்தப் புத்தகம் வெகுவாக ஈர்த்தது.</div>
<div id="post-body-2834390242930451140" style="text-align:justify;"><img src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/karlmarx.jpg" alt="" align="left" hspace="5" />மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு பொருளின் மூலமே நிறைவேறுகின்றது. இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப் பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம். மனிதர்கள் உழைப்பதனால்தான் செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்த செல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர். உழைப்பாளிகளுக்கோ கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவே வறுமைக்குக் காரணம். உழைக்கும் மக்கள் இதை புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடினால், அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம், சிறைச்சாலை, சட்டம் போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர். இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக்கானது. வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம்.உழைக்கும் மக்கள் ஒரு புரட்சியின் மூலம் பழைய அரசையும், அநீதியான சட்டங்களையும் வீழ்த்த வேண்டும். அந்த இடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கான புதிய அரசையும், சமத்துவத்திற்கான சட்டங்களையும் இயற்ற வேண்டும்.</p>
<p>இதுதான் அந்தப் புத்தகத்தின் சாரம். இந்தக் கருத்துக்கள் கம்யூனிச தத்துவம் என அழைக்கப்படுகிறது. அடுத்ததாக காரல் மார்க்கம் அவருடைய நண்பர் எங்கெல்சும் எழுதிய அனைத்து நூல்களையும் படித்து முடித்தார். அதிலிருந்து ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட தொழிலாளர்களின் புரட்சி ஒன்றுதான் வழி என்று தீர்மானித்தார். அந்தப் புரட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதிலிருந்து கம்யூனிஸ்டாக மாறினார்.</p>
</div>
<div>
<h3 style="text-align:justify;"><span style="color:#ff0000;">போராட்டமே வாழ்க்கையாக&#8230;!</span></h3>
<div style="text-align:justify;"></div>
<div id="post-body-3577522869638169865"><img class="aligncenter" src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/leninsecretlabourmeetings.jpg" alt="" align="right" hspace="5" /></div>
<div style="text-align:center;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;">லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணத்தை விளக்கினார். அதை ஒரு புரட்சியின் மூலம் மாற்றும் சக்தி தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு என்றார். இக்கூட்டங்கள் அனைத்தும் இரகசியமாகவே நடந்தன. ஏனெனில் வெளிப்படையாக கூட்டம் நடத்தினால் ஜாரின் போலீசு அனைவரையும் சிறையில் தள்ளிவிடும்.</div>
<div id="post-body-3577522869638169865" style="text-align:justify;">
<p>லெனினுடைய பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருந்தது. அவருடைய கருத்துக்கள் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்கள் அனைவரையும் சென்று அடைந்தன. தொழிலாளர்கள் மெதுவாக விழிப்புணர்வு பெற்றனர். தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் 16 மணிநேரம் முதலாளிகளுக்கு உழைத்துக் கொட்ட வேண்டியிருந்தது. கூலியோ மிகமிகக் குறைவு. இதற்கெதிராகப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.</p>
<p>இந்த போராட்டங்களை வழிநடத்தும் தலைவர் யார் என்று தெரிந்து கொள்ள இயலாமல் ஜார் அரசு மண்டையைச் குடைந்து கொண்டிருந்தது. லெனின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை கையும் களவுமாகப் பிடிக்க ஏராளமான உளவாளிகள் அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.</p>
<p>லெனின் அவர்களை ஏமாற்றிவிட்டு ரகசிய கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார். வலிமையான உடற்கட்டும் புத்திக் கூர்மையும் இதற்கு உதவின. ரயிலில் செல்லும்போது அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிடும். ரயில் நிற்கும். ஆனால் அவர் இறங்கமாட்டார். கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஆழ்ந்து படிப்பது போல் இருப்பார். ரயில் கிளம்பி வேகமெடுக்கும். அப்போது அவர் மிக விரைவாக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிப்பார். ஒரு கணநேரத்தில் மாயாஜால வித்தை போல தங்கள் கண்ணெதிரே லெனின் தப்பி ஓடுவதைக் கண்டு உளவாளிகள் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள். இதுபோல் பலமுறை உளவாளிகள் ஏமாந்து போனதுண்டு.</p>
</div>
<div style="text-align:justify;"><strong><strong></strong></strong></p>
<h3 style="text-align:right;"><a href="http://rsyf.wordpress.com/2012/04/15/lenin-birthday-lenin-book-part12/" target="_blank">இவர் தான் லெனின் பகுதி 1</a></h3>
</div>
<div style="text-align:justify;">
<h2>தொடர்புடைய பதிவுகள்:</h2>
<div>
<h2><a title="ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்" href="http://rsyf.wordpress.com/2011/11/06/russia-periyar-told/" rel="bookmark">ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்</a></h2>
</div>
<h2><a title="கிராவ் நம்முடன் இருக்கிறார்! அவரது நீட்டிய கரம் போராட அழைத்துக்கொண்டே இருக்கிறது!" href="https://rsyf.wordpress.com/2011/12/01/longlive-sergei_kirov/" rel="bookmark">கிராவ் நம்முடன் இருக்கிறார்! அவரது நீட்டிய கரம் போராட அழைத்துக்கொண்டே இருக்கிறது!</a></h2>
<h2><a title="சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்" href="https://rsyf.wordpress.com/2011/11/23/russia-judgement-periyar/" rel="bookmark">சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்</a></h2>
</div>
</div>
</div>
</div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்]]></title>
<link>http://rsyf.wordpress.com/2012/04/15/lenin-birthday-lenin-book-part12/</link>
<pubDate>Sun, 15 Apr 2012 09:31:24 +0000</pubDate>
<dc:creator>புமாஇமு</dc:creator>
<guid>http://rsyf.wordpress.com/2012/04/15/lenin-birthday-lenin-book-part12/</guid>
<description><![CDATA[ஏபரல் 22 &#8211; தோழர் லெனின் பிறந்த தினத்தையொட்டி புமாஇமு வெளியீடான “இவர் தான் லெனின்” என்ற சிறுவெள]]></description>
<content:encoded><![CDATA[<p style="text-align:justify;"><strong>ஏபரல் 22 &#8211; தோழர் லெனின் பிறந்த தினத்தையொட்டி புமாஇமு வெளியீடான “இவர் தான் லெனின்” என்ற சிறுவெளியீட்டினை ஒரு சில பதிவுகளாக வெளியிட முடிவு செய்து உள்ளோம். அதன் முதல் பதிவினை பிரசுரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். </strong></p>
<h3 style="text-align:justify;"><span style="color:#ff0000;">லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்</span></h3>
<p style="text-align:justify;"><img class="alignleft" src="http://rsyf.files.wordpress.com/2011/11/leninlives.jpg?w=468" alt="" /><br />
1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன.</p>
<p style="text-align:justify;">அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன.</p>
<p style="text-align:justify;">சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p style="text-align:justify;">உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது. சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?</p>
<h3 style="text-align:justify;"></h3>
<h3 style="text-align:justify;"> <span style="color:#ff0000;">வறுமையை ஒழித்த லெனின்</span></h3>
<p style="text-align:justify;">எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள். அதுபோலவே ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால், 100 பேர் ஏழைகள். இந்த ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். உழைக்கும் மக்கள் மேலும் மேலும் வறுமையில் வாடிக்கிடப்பார்கள். ரசியாவிலும் ஒரு காலத்தில் மக்கள் அப்படித்தான் துன்பத்தில் உழன்றனர்.</p>
<p style="text-align:justify;"><img class="alignleft" src="http://www.vinavu.com/wp-content/uploads/2009/11/nov7-copy.jpg" alt="" width="288" height="192" /><br />
இந்த அநியாயத்தை ஒழித்துக் கட்டியவர்தான் லெனின். அவருடைய தலைமையில் 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற புரட்சியினால் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. உலகில் முதன்முறையாக தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அந்த தொழிலாளர்களின் ஆட்சிதான் உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது. மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. அவை அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும், வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. சமத்துவச் சமூகம் படைக்கப்பட்டது.</p>
<p style="text-align:justify;">இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடந்தது. இதன் மூலம் தன்னுடைய நாட்டில் வறுமையை ஒழித்துக் கட்டினார். மற்ற நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களின் கவனம் சோவியத் ரசியாவை நோக்கித் திரும்பியது. லெனினுடைய வழியைப் பின்பற்றினால் மட்டுமே தங்களின் வறுமை ஒழியும் என்று அவர்கள் நம்பினர். தங்களின் நல்வாழ்விற்காக போராடத் தயாராக இருந்த உலகத் தொழிலாளர்களுக்கு லெனின் சரியான வழி காட்டினார். ஆனால் ரசிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி உலகத்திலுள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கு முன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.</p>
<p style="text-align:justify;">இதனால்தான் அவருடைய மரணத்துக்கு உலகமே அழுதது. உலகின் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற நன்றியும், மீதி நிலப்பரப்பில் அதை நிறைவேற்றும் முன்னரே இறந்து விட்டாரே என்ற துக்கமும்தான் உலகத் தொழிலாளர்களை கண்ணீர் சிந்த வைத்தது.</p>
<h2>தொடர்புடைய பதிவுகள்:</h2>
<div>
<h2><a title="ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்" href="http://rsyf.wordpress.com/2011/11/06/russia-periyar-told/" rel="bookmark">ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்</a></h2>
</div>
<h2><a title="கிராவ் நம்முடன் இருக்கிறார்! அவரது நீட்டிய கரம் போராட அழைத்துக்கொண்டே இருக்கிறது!" href="https://rsyf.wordpress.com/2011/12/01/longlive-sergei_kirov/" rel="bookmark">கிராவ் நம்முடன் இருக்கிறார்! அவரது நீட்டிய கரம் போராட அழைத்துக்கொண்டே இருக்கிறது!</a></h2>
<h2><a title="சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்" href="https://rsyf.wordpress.com/2011/11/23/russia-judgement-periyar/" rel="bookmark">சோசலிச ரஷியாவின் நீதி வழங்கும் முறை – தந்தை பெரியார்</a></h2>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஆதிக்க அணு உலை    அடங்காது... இடிந்தகரை! ]]></title>
<link>http://rsyf.wordpress.com/2012/03/06/koodangulam-ds-kavithai-book/</link>
<pubDate>Tue, 06 Mar 2012 03:46:31 +0000</pubDate>
<dc:creator>புமாஇமு</dc:creator>
<guid>http://rsyf.wordpress.com/2012/03/06/koodangulam-ds-kavithai-book/</guid>
<description><![CDATA[  பொய்யிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதுவழி ஒன்றிருந்தால் நாராயணசாமி வாயிலிருந்தே நாலாயிரம் மெகாவ]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://rsyf.files.wordpress.com/2012/03/koodangulam-kavithai-book.jpg"><img class="aligncenter size-full wp-image-3857" title="koodangulam-kavithai-book" src="http://rsyf.files.wordpress.com/2012/03/koodangulam-kavithai-book.jpg?w=468&#038;h=488" alt="" width="468" height="488" /></a></p>
<p><strong> </strong></p>
<p style="text-align:right;"><span style="color:#ff0000;">பொய்யிலிருந்து</span><br />
<span style="color:#ff0000;">மின்சாரம் தயாரிக்கும்</span><br />
<span style="color:#ff0000;">புதுவழி ஒன்றிருந்தால்</span><br />
<span style="color:#ff0000;">நாராயணசாமி வாயிலிருந்தே</span><br />
<span style="color:#ff0000;">நாலாயிரம் மெகாவாட்டும்</span><br />
<span style="color:#ff0000;">அப்துகலாம் வாயிலிருந்து</span><br />
<span style="color:#ff0000;">ஆராயிரம் மெகாவாட்டும்</span><br />
<span style="color:#ff0000;">தமிழகத்திற்கு கிடைக்கும்.</span></p>
<p style="text-align:right;"><span style="color:#ff0000;">அன்றாடம் இவர்கள்</span></p>
<p style="text-align:right;"><span style="color:#ff0000;">அவிழ்க்கும் பொய்கள்</span><br />
<span style="color:#ff0000;">அணுவுக்கே அடுக்காது…</span><br />
<span style="color:#ff0000;">அணுக்கழிவே சகிக்காது.</span></p>
<p style="text-align:right;"><span style="color:#ff0000;"><strong>வ</strong>ளர்ச்சி என்பதற்காய்</span><br />
<span style="color:#ff0000;">புற்று நோயை ஏற்க முடியுமா ?</span><br />
<span style="color:#ff0000;">அறிவியல் சுகம் அடைவதற்காய்</span></p>
<p style="text-align:right;"><span style="color:#ff0000;">மின்சாரத்தை முத்தமிட முடியுமா ?</span></p>
<p style="text-align:right;">- நூலில் இருந்து</p>
<p style="text-align:right;">***************</p>
<p style="text-align:left;"><strong>தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதை நூல்</strong></p>
<p style="text-align:left;"><em><strong>விலை: ரூ. 10</strong></em></p>
<p style="text-align:left;">நூல் கிடைக்குமிடங்கள்:</p>
<p style="text-align:left;">புதிய கலாச்சாரம்,<br />
16, முல்லை நகர் வணிக வளாகம்,<br />
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.<br />
பேச : 044-23718706</p>
<p style="text-align:left;">புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,<br />
110,63, என்.எஸ்.கே. சாலை,<br />
கோடம்பாக்கம், சென்னை – 600 024.<br />
பேச : 94453 84519</p>
<p style="text-align:left;">கீழைக்காற்று வெளியீட்டகம்,<br />
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,<br />
சென்னை – 600 002.<br />
பேச : 044-28412367</p>
<p style="text-align:left;">தொடர்புடைய பதிவுகள்:</p>
<h2 style="text-align:left;"><a title="கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!" href="http://rsyf.wordpress.com/2012/03/06/koodankulam-chennai-meeting-karuthupadangkal/" rel="bookmark">கருத்துப்படங்கள்: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!</a></h2>
<p style="text-align:left;"><strong> </strong></p>
<p style="text-align:left;">
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[கூடங்குளம் அணு உலையை மூடு! - சிறு வெளியீடு!]]></title>
<link>http://rsyf.wordpress.com/2012/02/09/close-kudangulam-nuclear-plan/</link>
<pubDate>Thu, 09 Feb 2012 11:52:07 +0000</pubDate>
<dc:creator>புமாஇமு</dc:creator>
<guid>http://rsyf.wordpress.com/2012/02/09/close-kudangulam-nuclear-plan/</guid>
<description><![CDATA[மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://rsyf.files.wordpress.com/2012/02/mullai.jpg"><img class="aligncenter size-full wp-image-3682" title="kudangulam book" src="http://rsyf.files.wordpress.com/2012/02/mullai.jpg?w=468&#038;h=370" alt="" width="468" height="370" /></a></p>
<p style="text-align:right;"><em><strong><span style="color:#ff0000;">மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் </span></strong></em></p>
<p style="text-align:right;"><em><strong><span style="color:#ff0000;">உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு !</span></strong></em></p>
<p style="text-align:right;"><span style="text-decoration:underline;"><em><strong>விலை: ரூ. 5</strong></em></span></p>
<p>இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்<br />
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!</p>
<p>அணுஉலை = பல்நோய் உற்பத்திக் கூடம் + பேரழிவு ஆயுதக் கிடங்கு!</p>
<p>பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி<br />
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு<br />
பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்<br />
அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்!</p>
<p>அணு மின்சாரத்தை விட மலிவான, ஆபத்தில்லாத,<br />
சுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,<br />
சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப் போராடுவோம்!</p>
<p>42% கிராமங்களுக்கு மின்னிணைப்பே இல்லை!<br />
சிறு- குறுந்தொழில்கள், விவசாயத்துக்கோ என்றைக்கும் மின்வெட்டு!<br />
நாட்டின் மின் உற்பத்தியை விழுங்குவது<br />
டாடா, அம்பானிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளே!<br />
அணு மின்சாரம் அவனுக்கு, புற்றுநோய் சாவு எங்களுக்கா?</p>
<p>அணு உலைகளால் அறவே ஆபத்து இல்லையென்றால்<br />
அப்புறம் எதற்கு அணுஉலை விபத்து காப்பீட்டுச் சட்டம்?</p>
<p>தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்<br />
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்<br />
எட்டு இலட்சம் கோடிக்கு அணு உலை வாங்க<br />
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு – இதுதான் தேசத்துரோகம்!</p>
<p>பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு<br />
இந்திய மக்களை பலியிடாதே!</p>
<p>‘வளர்ச்சி – வேலைவாய்ப்பு – வல்லரசு’ என்று ஆசை காட்டி<br />
தேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுபட்டிருக்கும்<br />
காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!<br />
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்-<br />
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!</p>
<p>நூல் கிடைக்குமிடங்கள்:</p>
<p>புதிய கலாச்சாரம்,<br />
16, முல்லை நகர் வணிக வளாகம்,<br />
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை – 600 083.<br />
பேச : 044-23718706</p>
<p>புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,<br />
110,63, என்.எஸ்.கே. சாலை,<br />
கோடம்பாக்கம், சென்னை – 600 024.<br />
பேச : 94453 84519</p>
<p>கீழைக்காற்று வெளியீட்டகம்,<br />
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,<br />
சென்னை – 600 002.<br />
பேச : 044-28412367</p>
<p>தொடர்புடைய பதிவுகள்:</p>
<h1><a href="http://www.vinavu.com/2012/02/09/feb-11-blockade/">கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!</a></h1>
<p><img src="http://www.vinavu.com/wp-content/uploads/2012/02/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.jpg" alt="கூடங்குளம்-மறியல்" /></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ முல்லை பெரியாறு - சிறு வெளியீடு!]]></title>
<link>http://rsyf.wordpress.com/2012/01/27/mullai-periyar-book/</link>
<pubDate>Fri, 27 Jan 2012 09:13:03 +0000</pubDate>
<dc:creator>புமாஇமு</dc:creator>
<guid>http://rsyf.wordpress.com/2012/01/27/mullai-periyar-book/</guid>
<description><![CDATA[அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதார தடை போடு! விலை: ரூ. 5 பக்கங்கள் : 16 தமிழக உழைக்கும் மக்களே! * ம]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://rsyf.files.wordpress.com/2012/01/mullai_periyaru_pala.jpg"><img class="aligncenter size-full wp-image-3637" title="mullai_periyaru_pala" src="http://rsyf.files.wordpress.com/2012/01/mullai_periyaru_pala.jpg?w=468&#038;h=724" alt="" width="468" height="724" /></a></p>
<p>அணையை மீட்க எல்லையை மூடு!<br />
பொருளாதார தடை போடு!</p>
<p>விலை: ரூ. 5</p>
<p>பக்கங்கள் : 16</p>
<p>தமிழக உழைக்கும் மக்களே!</p>
<p>* முல்லை பெரியாறில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும்,<br />
5 மாவட்டங்கள் பாலைவனமாகாமல் தடுக்கவும் ஊர் தோறும்<br />
அணைப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்!</p>
<p>* கேரள எல்லைகளை முற்றுகையிடுவோம்!<br />
பொருளாதாரத் தடையை அமுலபடுத்துவோம்!</p>
<p>* அச்சுதானந்தன், உம்மன்சாண்டி போன்ற<br />
மலையாள இனவெறியர்களின் சதியை முறியடிப்போம்!</p>
<p>* கேரளத்தில் மலையாள இனவெறி, தமிழகத்தில் முல்லைபெரியாறுக்கு<br />
அடையாள ஆதரவு &#8211; என்று இரட்டை வேஊட்ம்<br />
தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் தேசியக்கட்சிகளான<br />
காங்., பா.ஜ.க, சிபிஎம், சிபிஐ கட்சிகளை விரட்டியடிப்போம்!</p>
<p>* கேரள அரசின் அடாவடித்தனங்களுக்குத் துணைபோகும்<br />
மத்திய அரசின் அலுவலங்களை இழுத்துப்பூட்டுவோம்!</p>
<p>* தமிழக எம்பிக்களை ராஜினாமா செய்யக்கோரி முற்றுகையிடுவோம்!</p>
<p>தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்</p>
<p>வெளியீடு :</p>
<p>மக்கள் கலை இலக்கிய கழகம்<br />
விவசாயிகள் விடுதலை முன்னணி<br />
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி<br />
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி<br />
பெண்கள் விடுதலை முன்னணி</p>
<p>நூல் கிடைக்குமிடங்கள்:</p>
<p>புதிய கலாச்சாரம்,<br />
16, முல்லை நகர் வணிக வளாகம்,<br />
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை &#8211; 600 083.<br />
பேச : 044-23718706</p>
<p>புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,<br />
110,63, என்.எஸ்.கே. சாலை,<br />
கோடம்பாக்கம், சென்னை &#8211; 600 024.<br />
பேச : 94453 84519</p>
<p>கீழைக்காற்று வெளியீட்டகம்,<br />
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,<br />
சென்னை &#8211; 600 002.<br />
பேச : 044-28412367</p>
<p>தொடர்புடைய பதிவுகள்:</p>
<h2><a title="முல்லைப் பெரியாறு: அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத்தடை போடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!" href="http://rsyf.wordpress.com/2012/01/19/revolutionaries-mullai-periyar-protest-tamilnadu/" rel="bookmark">முல்லைப் பெரியாறு: அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத்தடை போடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!</a></h2>
<p><a href="http://rsyf.files.wordpress.com/2012/01/prasuram-mullai-periyar.jpg"><br />
<img title="Prasuram Mullai Periyar" src="http://rsyf.files.wordpress.com/2012/01/prasuram-mullai-periyar.jpg?w=468&#038;h=323#38;h=323" alt="" width="468" height="323" /></a></p>
<h2><a href="http://www.vinavu.com/2012/01/10/revolutionaries-mullai-periyar-protest-tamilnadu/">முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்!</a></h2>
<p><strong>தொடர்புடைய பதிவுகள்:</strong></p>
<p><img src="http://www.vinavu.com/wp-content/uploads/2012/01/mullai-periyar.jpg" alt="முல்லைப் பெரியாறு : தேசியக் கட்சிகளின் துரோகம் " width="287" height="325" /></p>
<h3></h3>
<h3></h3>
<h3></h3>
<h3><a href="http://www.vinavu.com/2012/01/05/national-parties-traitors-mullai-periyar/">முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!</a></h3>
<p>*********************************************</p>
<p><a href="http://www.vinavu.com/2012/01/09/cpim-treachery-mullai-periyar/" target="_blank"><img src="http://www.vinavu.com/wp-content/uploads/2012/01/cpm-mulla-priyar-cartoon.jpg" alt="முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!" width="288" height="173" /></a></p>
<h3></h3>
<h3></h3>
<h3></h3>
<h3><a href="http://www.vinavu.com/2012/01/09/cpim-treachery-mullai-periyar/">முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!</a></h3>
<p>****************************</p>
<ul>
<li></li>
<li><strong><a href="http://www.vinavu.com/2011/12/01/2009/12/24/mullai-periyar-dmk-cpim/" target="_blank">முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!</a></strong></li>
<li><strong><a href="http://blog.tamilsasi.com/2011/11/mullai-periyaru-environmental-impact-of.html" target="_blank">Mullai Periyaru – Environmental impact of Dams and Kerals’s PR Machine</a></strong></li>
<li>
<h3><a href="http://www.vinavu.com/2011/12/01/mullai-periyar-video/">முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!</a></h3>
</li>
</ul>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்!]]></title>
<link>http://rsyf.wordpress.com/2011/11/06/longlivelenin-nov7-2011/</link>
<pubDate>Sun, 06 Nov 2011 10:06:27 +0000</pubDate>
<dc:creator>புமாஇமு</dc:creator>
<guid>http://rsyf.wordpress.com/2011/11/06/longlivelenin-nov7-2011/</guid>
<description><![CDATA[1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த]]></description>
<content:encoded><![CDATA[<p style="text-align:justify;"><img class="alignleft" src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/lenin3.jpg" alt="" />1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன.</p>
<p style="text-align:justify;">அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன.</p>
<p style="text-align:justify;">சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p style="text-align:justify;"><img style="margin-left:5px;margin-right:5px;" src="http://i198.photobucket.com/albums/aa274/suunapaana/embalmedlenin.jpg" alt="" width="287" height="182" align="left" hspace="5" />உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது. சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?</p>
<p style="text-align:justify;"><span style="color:#ff0000;"><strong>இது குறித்து புமாஇமு வெளியிட்ட “இவர் தான் லெனின்” என்ற சிறு வெளியீட்டு இதோ:</strong></span></p>
<p style="text-align:justify;"><a href="http://rsyf.wordpress.com/2011/11/06/longlivelenin-nov7-2011/leninlives/" rel="attachment wp-att-2658"><img class="alignright size-full wp-image-2658" title="leninlives" src="http://rsyf.files.wordpress.com/2011/11/leninlives.jpg?w=238&#038;h=350" alt="" width="238" height="350" /></a></p>
<div>
<div id="BlogArchive1_ArchiveList">
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/2.html"><strong>வறுமையை ஒழித்த லெனின்</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/3.html"><strong>துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/4.html"><strong>வக்கீல் உருவில் ஒரு போராளி!</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/5.html"><strong>லெனின் தேர்வு செய்த பாதை</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/6.html"><strong>போராட்டமே வாழ்க்கையாக…!</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/7.html"><strong>சைபீரியச் சிறைவாசம்</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/8.html"><strong>மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/9.html"><strong>அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/10.html"><strong>ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/11.html"><strong>சதியை முறியடித்த லெனின்</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/12.html"><strong>சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/13.html"><strong>ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்…</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/14.html"><strong>எதிரிகளை வீழ்த்திய செம்படை</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/15.html"><strong>பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/16.html"><strong>மக்களின் மகத்தான தலைவர் லெனின்</strong></a></p>
<p><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/17.html"><strong>லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்ல…</strong></a></p>
<h2><span style="text-decoration:underline;">*************************</span></h2>
<h2><span style="text-decoration:underline;">தொடர்புடைய பதிவுகள்:</span></h2>
<div>
<h2><span style="text-decoration:underline;"><a title="ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்" href="http://rsyf.wordpress.com/2011/11/06/russia-periyar-told/" rel="bookmark">ருசியாவின் வெற்றி- தந்தை பெரியார்</a></span></h2>
<p><a style="font-size:20px;font-weight:bold;" title="நண்பனுக்கு ஓர் கடிதம் !" href="http://rsyf.wordpress.com/2011/11/06/kavithai1-nov7-2011/" rel="bookmark">நண்பனுக்கு ஓர் கடிதம் !</a></p>
</div>
<h3><a style="font-size:20px;" title="வெற்றிகரமான 7வது பதிப்பில்  “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!" href="http://rsyf.wordpress.com/2011/09/09/7th-edition-stalin-dvd/" rel="bookmark">வெற்றிகரமான 7வது பதிப்பில் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்!</a></h3>
<h3><a href="http://puthagapiriyan.blogspot.com/2007/08/blog-post_4583.html">“ஸ்டாலின் சகாப்தம்”</a></h3>
<div>
<p><a href="http://puthagapiriyan.blogspot.com/2007/08/blog-post_24.html">வரலாற்று நோக்கில் ” ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் “</a></p>
<div>
<div> <a href="http://vrinternationalists.wordpress.com/2009/10/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/" target="_blank">ஸ்டாலின் சர்வாதிகாரி தான்! யாருக்கு ?</a></div>
</div>
</div>
<h3></h3>
<p><a href="http://senkodi.multiply.com/journal/item/48/48" rel="bookmark">நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்</a></p>
<h3></h3>
<h3><a title="Permanent Link to ”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்" href="http://athikalai.wordpress.com/2010/11/04/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/" rel="bookmark">”அக்டோபர்” – சோவியத் திரைப்படம்</a></h3>
<h3></h3>
<h3><a title="Permalink to “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!" href="http://www.vinavu.com/2010/11/07/nov-7-3/" rel="bookmark">“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!</a></h3>
<h3></h3>
<h3><a title="Permalink to நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்" href="http://www.vinavu.com/2010/11/06/nov7-2/" rel="bookmark">நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்</a></h3>
<h3></h3>
<h3><a title="Permanent Link to நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்" href="http://athikalai.wordpress.com/2010/11/07/nov-7/" rel="bookmark">நவம்பர் புரட்சி சோவியத் யூனியன் புகைப்படங்கள்</a></h3>
<h3><span style="font-size:x-small;"><span class="Apple-style-span" style="font-weight:normal;"><br />
</span></span></h3>
</div>
</div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[வணிகமயக் கல்வி - இலவசக் கல்வி குறித்த கேள்விகளும் பதில்களும்! - இளஞ்செழியன்]]></title>
<link>http://rsyf.wordpress.com/2011/07/19/kalvi-katturai/</link>
<pubDate>Tue, 19 Jul 2011 03:40:14 +0000</pubDate>
<dc:creator>புமாஇமு</dc:creator>
<guid>http://rsyf.wordpress.com/2011/07/19/kalvi-katturai/</guid>
<description><![CDATA[தனியார்பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்காக பெற்றோர்களும், மாணவர்களும் தினந்தினம் சித்தரவதைக்குள்ளாக்கப்பட]]></description>
<content:encoded><![CDATA[<p style="text-align:justify;">தனியார்பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்காக பெற்றோர்களும், மாணவர்களும் தினந்தினம் சித்தரவதைக்குள்ளாக்கப்படுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தனியார் கல்விதான் தரமானது, அரசு கல்வி தரங்கெட்டது  என்று ஒரு மாயையை உருவாக்கி இச்சமூகத்தின் பெருவாரியான ஏழை மாணவர்களுக்கு கல்வியை மறுத்துவரும் இந்தக் கொடிய ஏற்றத்தாழ்வுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு ”சமச்சீர்” கல்வி இச்சமூகத்திற்கு அவசியம் வேண்டும்.</p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி; சமச்சீர் கல்வி என்றால் என்ன?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong><span style="text-decoration:underline;"> </span></strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்;</strong> ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு இன்றியும், கொடிய சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்றியும் அனைவரும் ஒரே பள்ளியில் படிக்கும் பொதுப்பள்ளி முறை, தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள பள்ளியில் எந்த ஒரு மாணவரும் சேரும் உரிமை, பொதுப்பாடத்திட்டம், பொதுப்பாடநூல், ஒரே மாதிரியான தேர்வு முறை, ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:30 க்கு மிகாமல் இருப்பது, கற்றல் &#8211; கற்பித்தல் முறை, மாணவர்களின் சுயசிந்தனையை வளர்ப்பதற்கு ஏற்ற கலைத்திட்டம் (Curriculum) , கற்பதற்கான ஆரோக்கியமான வகுப்பறைச் சூழல்,தாய்மொழி வழிபயிற்றுவிப்பு, பாடத்திட்டத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்குபெறுவதற்கான ஜனநாயகம், போதுமான அடிப்படைக் கட்டுமான வசதி போதிய நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை மாநகரம், நகரம், கிராமம் என்ற பாகுபாடு இன்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமாக, ஒரே சீராக செய்து கொடுக்க வழிவகை செய்வதுதான் உண்மையில் “சமச்சீர் கல்வியின்” முழுப் பரிமாணமாகும்.</p>
<p style="text-align:justify;">இத்தகையதொரு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அடிப்படையில் தனியார் கல்வியை ஒழித்துக்கட்ட வேண்டும். கல்வியை முழுவதுமாக அரசே கொடுக்க வேண்டும், இப்படி ஒரு நோக்கம் எந்த ஓட்டுக்கட்சி அரசாங்கங்களுக்கும் இல்லை. இருக்கப்போவதுமில்லை.</p>
<p style="text-align:justify;"><strong> </strong></p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி;</strong> <strong>இதுதான் சமச்சீர் கல்வியின் அர்த்தம் என்றால் </strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>         கடந்த தி.மு.க அரசால் அமுல்படுத்தப்பட்டது என்ன?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>      </strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்;</strong>   நம் நாட்டில் தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் பள்ளிக்கல்வியில் மத்திய அரசு பாடத்திட்டம் (CBSE), மாநிலப்பாடத்திட்டம்(State Board) என்ற இரண்டு வகையான பாடத்திட்டங்கள் தான் நடைமுறையில் உள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் மாநில பாடத்திட்டம், மெட்ரிக், ஓரியண்டல் (கீழ்திசை மொழி பள்ளிகள் எனப்படும் உருது, கன்னடம் போன்ற குறிப்பிட்ட மொழிப்பள்ளிகள்), ஆங்கிலோ-இந்தியன் என நான்கு வகையான பாடத்திட்ட முறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த வேறுபட்ட பாடத்திட்டமுறைகளை தங்கள் உடைமையாக்கிக் கொண்டுதான் தனியார் கல்வி வணிகர்கள் ‘உயர்வான, தரமான’ கல்வியை தருவதாகக் சொல்லி வரன்முறையின்றி கட்டணக்கொள்ளை அடித்து வருகின்றனர்.</p>
<p style="text-align:justify;">     இது சமீப ஆண்டுகளில் தலைவிரித்தாடியது. ‘தனியார் கல்விதான் தரமானது’ என்ற பிரச்சாரத்தில் மயங்கி  அரசுக்கல்வி, தரமானதாக கிடைக்கப் போராடாமல் அதை புறக்கணித்து சென்ற பெற்றோர்கள் ’விட்டில்’ பூச்சியாய் தவித்தனர். தன்னெழுச்சியாகப் போராடவும் தொடங்கினர். இந்நிலையில் கல்வியாளர்கள் நீண்ட காலமாக தமிழகத்திலுள்ள நான்கு வகையான பாடத்திட்டங்களை ஒன்றாக இணைத்து பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்ததும் சேர்ந்து கொள்ளவே, போராடும் பெற்றோர்களை சமரசப்படுத்துதற்காக கடந்த கருணாநிதி அரசு கொண்டு வந்த திட்டம்</p>
<p style="text-align:justify;">தான் <strong>சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டமுறை</strong>. இது சமச்சீர் கல்வியில் ஒரு அம்சம்தான். இதுவே சமச்சீர்கல்வியின் முழுப் பரிமாணம் ஆகிவிடாது. முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் தி.மு.க அரசால் அமைக்கப்பட்ட சமச்சீர் கல்விக்கான குழுவின் பரிந்துரைப்படி பார்த்தால் கூட இது நான்கு வகையான பாடத்திட்டங்களை ஒன்றாக இணைக்கும் பொதுப்பாடத்திட்டம், பொதுப்பாடநூல் ஒரே மாதிரியான தேர்வுமுறை என்ற ஒரு அம்சத்தை மட்டும்தான் நடைமுறைப்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align:justify;">ஆக, இது ஒருவகையான சீர்திருத்தம் அவ்வளவுதான். இதுவே தனியார்பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவுகட்டும் உண்மையான சமச்சீர் கல்வி ஆகிவிடாது.</p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி; இந்த சீர்திருத்தத்தை தனியார்பள்ளி முதலாளிகளும் </strong><strong>–</strong></p>
<p style="text-align:justify;"><strong>         ஜெயலலிதாவும் எதிர்ப்பது ஏன்?</strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்;</strong> தனியார்மயக் கல்விக்கொள்கையை முற்றிலும் ஒழித்துக்கட்டிவிடாத சிறிய சீர்திருத்தம் தான் பொதுப்பாடதிட்டம் என்றாலும், ‘அரசுக்கல்வியை விட உயர்வானது, ஆங்கில வழி பயிற்சி’ என்ற அடிப்படையை வைத்து வரன்முறை இன்றி பகற்கொள்ளையடித்து வருவதற்கு இது ஒரு இடையூறாக, ஒரு வரைமுறைக்கு வருவதாக அமைந்துவிடக்கூடும், அதாவது தங்கள் கொள்ளை லாபத்தில் ஒரு சதம் குறையும் என்ற அச்சத்தால்தான் தனியார்பள்ளி முதலாளிகள் இந்த சீர்திருத்தத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தனர். ஆட்சி மாற்றம் அவர்கள் நினைத்ததை நிறைவு செய்தது.</p>
<p style="text-align:justify;">       தனியார்மயக் கொள்கையை எல்லா ஓட்டுக்கட்சிகளைப் போலவே மனமுவந்து ஏற்றுக்கொண்ட பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதா அதை நடைமுறைப்படுத்த தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்ததும் தனியார்மயக் கொள்கைக்கு எதிரான, <strong>சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்ட முறையை ரத்து செய்வதையே</strong> இந்த ஆட்சியின் முதல் சட்டமாக கொண்டு வந்து தனது தீவிர விசுவாசத்தை மீண்டும் நிரூபித்துக்கொண்டுள்ளார்.</p>
<p style="text-align:justify;">    பொதுப்பாடத்திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்ததாலேயே, ஜெயலலிதா ரத்து செய்கிறார் என்று ஒரு அரசியலற்ற வாதத்தை முன்வைக்கின்றனர். இது உண்மையல்ல. தான் மனமுவந்து ஏற்றுக்கொண்ட “<strong>உலகமயமாக்கல் கொள்கைக்கேற்ப இந்த பொதுப்பாடத்திட்டம் அமையவில்லை</strong>” அதனால்தான் ரத்து செய்கிறோம் என்று சட்டமன்றத்தில் போட்டு உடைத்தார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். பொதுப்பாடத்திட்டத்தை ஜெயா எதிப்பதற்கு இதுதான் உண்மையான காரணம்.</p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி; உலகமயமாக்கல் கொள்கைக்கேற்ப பொதுப்பாடத்திட்டம் </strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>         அமையவில்லை என்று ஜெயா சொல்வது புரியவில்லை, விளக்க முடியுமா?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong> </strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்;</strong> தற்போது நான்கு வகைப் பாடத்திட்டங்களை ஒன்றாக  இணைத்து 150 கல்வியாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டமும், பாடநூல்களும், கற்றல் – கற்பித்தல் என்ற முறையிலும், மாணவர்களின் சுயசிந்தனையை வளர்ப்பதற்கான அடிப்படையையும் கொண்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மையே. சுய சிந்தனையே இல்லாத அடிமைகளை உருவாக்கத் துடிக்கும் தனியார்மயக் கல்வி கொள்கைக்கு அடிப்படையில் இது எதிரானது. மேலும் <strong>வெளிநாட்டுக் கம்பெனிகளுக்குத் தேவையான மலிவான ஆட்களை (அடிமைகளை) உருவாக்குவதற்கான பாடத்திட்டங்களைத்தான் உலகத்தரத்திற்கான பாடத்திட்டம் என்கின்றனர்.</strong> இது தான் சமச்சீர்கல்விக்கான பொதுப்பாடத்தில் இல்லை என்கின்றார் ஜெயா. அதாவது,  உலகத் தரம் இல்லை என்கிறார்.இந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அறிவியல்,வரலாறு,சமூக அறிவியல் ஆகியவற்றை ஒழித்துக்கட்டி விட்டு பன்னாட்டுக்கம்பெனிகளுக்குத் தேவையான ஆட்களை உருவாக்கவும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் தேவையை பூர்த்திசெய்வதற்கான ஆய்வுகளை செய்வதற்குமான படிப்புகளை பள்ளிக்கல்வியிலிருந்தே கொண்டுவர வேண்டுமென உலகவங்கி உத்தரவு போடுகிறது. ஜெயலலிதா ஆடுகிறார், அதைத்தான் தற்போது பார்த்து வருகின்றோம். <strong>இன்றும் புரியவில்லையா?</strong> கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ரேசன் அரிசி விலையை உயர்த்தியபோது ஏன் விலை உயர்வு என்று கேட்டதற்கு “உலகவங்கி சொன்னது அதைத்தான் செய்தேன்” என்று சட்டமன்றத்தில் பகிரங்கமாகவே சொன்னதை நினைவுபடுத்தி பார்த்தால் தற்போது தெளிவாகப் புரியும்.</p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி; பெற்றோர் சங்கங்கள், கல்வியாளர்கள் போன்றோர் </strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>         நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்களே </strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>         இனியும் சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை </strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>’ </strong><strong>ஜெயா</strong><strong>’</strong><strong> முடக்கிவிட முடியுமா?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்;</strong> பெற்றோர் சங்கங்கள், கல்வியாளர்கள் பலர் வழக்கு தொடர்ந்திருந்தாலும், மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அதன் தலைமையிலான மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம் ஆகியவைதான் ஆரம்பத்திலிருந்தே சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை ரத்துசெய்யக் கூடாது, உடனே அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் உறுதியாகப் போராடி வருகின்றது. வெளியில் போராடுபவர்களை போலீசை வைத்து தடி கொண்டு தாக்கி, கைது, சிறை என்று அடக்குமுறையை ஏவும் ஜெயலலிதா, நீதிமன்றத்தை கொள்கையால் வளைத்துப்போடுகிறார். வழக்கு என்று ஒன்று போட்ட உடனயே அரசுக்கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தனியார் பள்ளி முதலாளிகள் அறிக்கை விட்டு எடுத்துக் கொடுக்கிறார்கள். முதலில் சென்னை உயர்நீதிமன்றமோ சமச்சீர்கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை இவ்வாண்டே அமல்படுத்த வேண்டும் என்று கூறிய போதும் அதிலுள்ள எந்தப் பகுதியையும் நீக்கவும், வெட்டிச்சுருக்கவும் தாராள அனுமதியையும் சேர்த்துத்தான் வழங்கியது. இதைவிட மொத்த பாடத்திட்டத்தையுமே ரத்து செய்வதுதான் நோக்கம் என்பதில் குறியாக இருந்த ‘ஜெயா’ உச்சநீதிமன்றம் சென்றார். அதற்கு எதிராக மனித உரிமை பாதுகாப்பு மையமும்  சென்றது. அந்தப் பார்ப்பனிய உச்சிக்குடுமி மன்றமோ 1வது மற்றும் 6வது வகுப்புக்கு இவ்வாண்டே சமச்சீர்கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்தலாம்.</p>
<p style="text-align:justify;">2வது முதல் 10வது வரையிலான பாடத்திட்டத்தை கல்வித்துறை நிபுணர்களைக்கொண்ட 9 பேர் குழு அமைத்து மறு ஆய்வு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கட்டப் பஞ்சாயத்து செய்து முடித்தது. இந்த தீர்ப்பு கேட்ட பின்பு சிலர்     இப்படி பேசிக்கொண்டார்கள். ”1வது மற்றும் 6வதுக்கும்  உருவாக்கியது போன்ற பாடத்திட்டத்தைதானே, 2வது முதல் 10வரையும் கல்வியாளர்கள் உருவாக்கி இருப்பார்கள் இது கூடவா உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பொதுபுத்திக்கு தெரியாது என்று”  இது ஒன்றும் அவர்களுக்கு தெரியாதா, புரியாத விசய்மல்ல.பார்ப்பன கும்பல் மீதும் , தனியார் பள்ளி முதலாளிகள் மீதும் உள்ள வர்க்கப் பாசத்தால் சமச்சீர் பாடத்திட்டத்தை முடக்க செய்யப்பட்டது தான் இந்த கட்டப்பஞ்சாயத்து. தனியார்மயக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதை உத்தரவாதப்படுத்துவதில்  ஓட்டுக்கட்சிகளுக்கும் நீதிமன்றத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன என்பதற்கு உதாரணம்தான் இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு. (ஒன்பது பேர் கொண்ட பாடத்திட்ட மறு ஆய்வுக்குழு-வின் யோக்கியதைப் பற்றியும், அவர்கள் கொடுத்த அறிக்கையை பற்றியும் கல்வியாளர் அ.கருணானந்தனும்,வினவு தளமும் விரிவாக அம்படுத்தியுள்ளதைப் பார்க்கவும்)</p>
<p style="text-align:justify;">தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்துள்ள நிலையில் சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை 1வது முதல் 10வது வரை இவ்வாண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.இது <strong>நீதிமன்றத்திற்குள் போராடிய மனித உரிமைப் பாதுகாப்புப் மையம்</strong> மற்றும் <strong>ம.க.இ.க</strong><strong>–</strong><strong>பு.மா.இ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! </strong>ஆனால் முழுமையான வெற்றியாக இல்லை.காரனம் ஜெயா அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது.</p>
<p style="text-align:justify;">எப்படியாவது இந்த சமச்சீர் கல்விக்கான பொதுப் பாடத்திட்டத்தை முடக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்.இதை முறியடிக்க வேண்டும் என்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்காக்கூடாது கல்வியாலர் திரு.ராஜகோபாலன் சொன்னது போல் ”ரேசன் கடையில் அரிசி,மண்ணென்னை கிடைக்கவில்லை என்றால் வீதியில் இறங்கிப் போராடுவதைப் போல்“லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு போராட வேண்டும்.</p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி: பழைய  பாடத்திட்டம் தொடருவதாலோ, </strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>சமச்சீர் பாடத்திட்டம் முடக்கப்படுவதாலோ </strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் என்ன பாதிப்பு?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்:</strong><strong></strong></p>
<p style="text-align:justify;">       நமது சமுதாயம் வர்க்க சமுதாயமாக மட்டும் இல்லாமல், சாதிய ஒடுக்குமுறைகளும், சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்த சமுதாயமாகும். இவை மிகக் கொடூரமாக அரங்கேற்றப்பட்டு ஆண்டாண்டு காலமாக பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுவந்துள்ளது. ஒரு காலத்தில் ’சூத்திரனுக்கு கல்வி இல்லை’ என்றது பார்ப்பன மனுநீதி. இன்றோ ’காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை’ என்கிறது உலக வங்கியின் புதிய மனுநீதி. இப்படி பார்ப்பனியமும், தனியார்மயமும் ஒரு நாணயத்தின் இரண்டுபக்கங்களாக செயல்பட்டு உழைக்கும் மக்களை புறக்கணிப்பது கல்வியில் இன்று பட்டவர்த்தனமாக அம்பலமாகிறது. பழைய பாடத்திட்டம் தொடர்ந்தால், நான்குவகையான பாடத்திட்டங்களும் தொடரும், வரன்முறை இன்றி சுருட்டும் தனியார்பள்ளிகளின் கட்டணக் கொள்ளையும் கேள்வி கேட்பாறின்றித் தொடரும், பார்ப்பனிய குலக்கல்வி முறையைப் போல இன்று ஆங்கில வழி பயிற்சி, தரமானக்கல்வி என்ற போர்வையில் புகுத்தப்படும் புதிய பார்ப்பனியக் கல்வி முறை பரவலாக்கப்படும். இதன் மூலம் நீடித்துவரும் ஏற்றத் தாழ்வுகளும் வர்க்க வேறுபாடுகளும் மேலும், மேலும் ஆழமாகும் பெருவாரியான ஏழை மாணவர்களுக்கு கல்வி முற்றிலுமான மறுக்கப்பட்டு ஒரு சமூகமே தற்குறியாகும் அபாயம் இதில் நிறைந்துள்ளது.</p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி:இது இந்த அரசுகளுக்குத் தெரியாதா?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்:</strong><strong></strong></p>
<p style="text-align:justify;">    நன்றாகத் தெரியும்! தெரிந்தேதான் இதை நடைமுறைப்படுத்துகிறார்கள். நாட்டின் சுயசார்பான வளர்ச்சிக்கும், நாகரிகமான மனிதனை உருவாக்குவதற்கும், அனைவருக்கும் கல்வி கட்டாயமாக –இலவசமாக – அறிவியல்பூர்வமாகவும் இதைக் கொடுப்பதுதான் ‘மக்கள் நல அரசுகளின்’  கடமையாகவும் இருக்க முடியும். ஆனால் நமது அரசு மக்கள் நல அரசு இல்லை என்பது மீண்டும் மீண்டும் அம்பலப்பட்டு வருகின்றது. மத்திய-மாநில அரசுதான் அரசுக்கல்வி கட்டமைப்பையே திட்டமிட்டு சீர்குலைத்து வருகின்றன. நாடு முழுவதும் உள்ள 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளில் சுமார் 3 கோடி பேர் பள்ளி வாசனையே அறியாதவர்கள். நாட்டில் 40% பள்ளிகளில் கட்டிட வசதிகளே இல்லை, சுமார் 32 ஆயிரம் பள்ளிகளில் கரும்பலகைக் கூட இல்லை. 1,21,728 தொடக்கப்பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக செயல்படுகின்றன. அங்கு பாடங்களே நடப்பதில்லை. இது எல்லாம் அரசே தரும் புள்ளி விவரங்கள்தான்.</p>
<p style="text-align:justify;">மாணவர்களுக்கு ’இலவச லேப்டாப்’ வழங்கப்போகும் தமிழகம் இதற்கெல்லாம் வதிவிலக்கு அல்ல. இதுவரை சுமார் 35 ஆயிரம் பள்ளிகள் 5 ஆசிரியர்கள் பள்ளிகளில் தர ஈராசிரியர் பள்ளிகளாக தரம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2000 பள்ளிகள் இருந்து மூடப்பட்டுள்ளன. கடந்த 2010-ல் சென்னையில் மட்டும் 30 மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் காலியிட எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியதே தவிர நிரப்பப்படவில்லை. இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.</p>
<p style="text-align:justify;"><strong> </strong></p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி; அரசுக்கல்வியை திட்டமிட்டே சீர்குலைப்பதற்கு என்ன காரணம்?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்:</strong><strong></strong></p>
<p style="text-align:justify;">தனியார் கல்வியை ஊக்குவிப்பதற்காகத்தான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழ்கத்தில் 1970 -களில் தனியார் கல்வியா என்று ஆச்சரியப்பட்ட நிலைமாறி இன்று பல ஆயிரக்கணக்கில் புற்றீசல்  போல பெருகி அதிச்சியடைய வைத்துள்ளன. “ஒரு பெட்டிக்கடை வைப்பதென்றால் கூட சிறு முதலீடும் அரசின் அனுமதியும் கண்டிப்பாக வேண்டுமாம். ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்க மட்டும் இவை எதுவுமே தேவை இல்லை. சில நூறு ரூபாய்கள் கூட செலவாகாத மழலையர் கல்விக்கு (PRE KG, LKG,UKG )  2 லட்சங்கள் வரை வசூலிக்கின்றன டி.ஏ.வி, வேலம்மாள், த பப்ளிக் போன்ற பராசுரப் பள்ளிகள், அரசுக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இன்ஞ்னியரிங் படிக்க சில ஆயிரங்கள் மட்டுமே செலவாகும் போது சாராய ரவுடி ஜேப்பியாரின் சத்யபாமா, சாதிக்கட்சி ரவுடி பச்சைமுத்துவின் SRM போன்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பல லட்சங்களை சுருட்டுகின்றன. இப்படி தாங்கள் வைத்ததே சட்டம், நிர்ணயித்தே கட்டணம் என்று தனி சாம்ராஜ்ஜியமே நடத்துகிறார்கள் தனியார் கல்வி வணிகர்கள்.</p>
<p style="text-align:justify;">       தமிழக அரசின் “கோவிந்தராஜன், ரவிராஜன் பாண்டியன் எந்தக்கமிட்டி கட்டணத்தையும் ஏற்க முடியாது, நோட்டு, புத்தகம், சீருடை அனைத்தையும் தங்களிடம் தான் வாங்க வேண்டும், சுமார்ட் கிளாஸ், பேருந்து இவைகளுக்கு கட்டாயக் கட்டணம். மீறும் மாணவர்களை வெயிலில் நிற்க வைப்பது, முட்டிபோட வைப்பது, தனியாக உட்காரவைத்து தீண்டாமையை கடைபிடிப்பது என்று மாணவர்களை சித்ரவதை செய்கிறார்கள் கல்வி வணிகர்கள். கமிட்டிகளின் தலைவர்களோ கட்டணம் நிர்ணயித்த கையோடு பதவி விலகி விடுவார்கள். பள்ளிக் கலவித்துறை அதிகாரிகளோ, தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நழுவுகிறார்கள். தமிழ்க முதல்வர் ஜெயலலிதாவோ “இது கட்டணம் நிர்ணயித்த கமிட்டிக்கும் பெற்றோர்களுக்குமான பிரச்சனை இதில் அரசு தலையிடாது” என்று தனியார் பள்ளிகளுக்கு  துணை நிற்கிறார். ‘கல்வி வணிகம்’ எனும் பகற்கொள்ளை படுஜோராக நடக்கிறது. ”பேருந்தில் பிட்பாக்கெட் அடிப்பவன் பிடிபட்டால் உள்ளே தள்ளி நிமிர்த்தும் போலீசும், சட்டமும் பிள்ளைகளை பிணையக் கைதிகளாக வைத்து பணம் பறிப்பது பகிரங்கமாக தெரிந்தும் தனியார் பள்ளிகள்முன் காவல் நிற்கின்றன, எதிர்த்து போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகின்றன. காரணம், இவையெல்லாம் சட்ட விரோதமானது அல்ல சட்டபூர்வமாகவே நடைபெறும் பகற்கொள்ளை இதுதான் அரசின் கொள்கை.</p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி; கொள்ளைக்கு வழிவகுப்பது அரசின் கொள்கையா?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்:</strong><strong></strong></p>
<p style="text-align:justify;">ஆம், 1994 க்குபிறகு ‘காட்’ ஒப்பந்தப்படி நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் நீர், நிலம், காடு, மலைகள், அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) என அனைத்து இயற்கை வளங்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு சட்டப்பூர்வமாகவும், அரசுக்கொள்கை முடிவுகளின் படியுமே திறந்துவிடப்பட்டன.விளைவு நாடே சூறையாடப்படுகின்றது. இதன் தொடர்ச்சிதான் ‘காட்ஸ்’ ஒப்பந்தம்.இதன்படி கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத்துறைகளும் வியாபாரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளன. விளைவு “கல்வி”  சட்டப்படியும், அரசுக் கொள்கை முடிவுகளின் படியுமே வணிகமயமாக்கப்பட்டுவருகின்றது.</p>
<p style="text-align:justify;"><strong>உலகவங்கி உத்தரவுபடி,</strong></p>
<p style="text-align:justify;">1994-95 இல் மாநில ஆரம்பக்கல்வித் திட்டம் (District Primary Education Programme – DPEP)  என பள்ளிக்கல்வியை அரசுக்கொள்கைப்படியே தனியார்மயப்படுத்தும் நடவடிக்கை அரசுத்தொடங்கியது.</p>
<ul style="text-align:justify;">
<li><strong>பிள்ளையை படிக்க வைப்பது பெற்றோர்கடமை,</strong><strong></strong></li>
<li><strong>காசு கொடுத்து படிக்க வேண்டும்</strong><strong></strong></li>
<li><strong>கல்வி நிறுவனத்தை உபயோகப்படுத்துவதற்கான கட்டணம்</strong><strong></strong></li>
<li><strong>கல்விக்கான அரசு மான்யங்களை , சலுகைகளை வெட்டிச் சுருக்குவது </strong><strong></strong></li>
</ul>
<p style="text-align:justify;"><strong>       இறுதியில் முற்றிலுமாக நிறுத்துவது</strong><strong></strong></p>
<p style="text-align:justify;">என்பதை தீவிரமாக நடைமுறைப்படுத்தி கல்வி கொடுக்கும் கடமையிலிருந்து அரசு மெல்ல, மெல்ல விலகி வருகின்றது.</p>
<p style="text-align:justify;">அரசுக்கல்வியை சீர்படுத்த தபஸ்மஜீம்தார் குழு கொடுத்த அறிக்கையை குப்பையில் போட்ட அன்றைய பி.ஜே.பி அரசு பிர்லா-அம்பானி அசோசம், பிக்கி போன்ற முதலாளிகள் சங்கங்கள் கொடுத்த அறிக்கைகளை சட்டமாக இயற்றின. கார்ப்பரேட் நிறுவனங்கள் பள்ளிகளை தொடங்கவும், நடத்தவும் சட்ட விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. வரிச்சலுகைகளும் வாரி வழங்கப்படுகின்றன. இதன்பிறகுதான் டெல்லியில் கோகோ கோலாவும், கர்நாடத்தில் விப்ரோவும் பல பள்ளிகளை குத்தகை எடுத்து தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியுள்ளன.</p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி: எங்கே செல்கிறது கல்வி?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்:</strong><strong></strong></p>
<p style="text-align:justify;">“குழந்தைகளின் இலவசக் கட்டாய கல்வி உரிமைக்கான சட்டம் 2009” கொண்டு வந்து நாட்டு மக்களின் 60 ஆண்டு கால கனவை நிறைவேற்றி விட்டதாக நாடகமாடுகிறது கள்ளுளிமங்கன் மன்மோகன் அரசு. ஆனால் அந்தப் பேனா மை காய்வதற்குள்ளாகவே மே,2010-ல் உலகவங்கி ஆணைப்படி வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இங்கு வந்து கடைபோடவும் பாராளுமன்றங்களால் கூட கட்டுப்படுத்த முடியாதபடி ‘நிகரில்லா அதிகாரங்களைப் பெறும் கல்வி தீர்ப்பாயங்களை உருவாக்குவது உள்ளிட்ட உயர்கல்விக்கான 16 வகையான மசோத்தாக்கள் அறிமுகம் செய்து  வைக்கப்பட்டுள்ளன. இப்படி கல்வியை மத்தியப்படுத்தப்பட்ட ஒரு தீர்ப்பாயத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படுவதோடு கல்வியை மொத்தமாக கார்ப்பரேட் மயமாக்கும் அபாயம் காத்திருக்கிறது. இதற்காகத்தான் பெயரளவிற்கு இருந்துவந்த ”1986 ஆம் ஆண்டு தேசியக் கல்வி கொள்கையை புதிய உலகார்ந்த வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது பொருந்தவில்லை என்று தூக்கி எரிந்தது உலகவங்கி கைக்கூலி காங்கிரசு அரசு” .இன்று தமிழகத்திலோ ”சமச்சீர் கல்விக்கான பொதுப் பாடத்திட்டம் உலகமயக் கொள்கைகேற்ப அமையவில்லை என்று சட்டம் போட்டு ரத்து செய்கிறது” பார்ப்பன பாசிஸ்டு ஜெயா தலைமையிலான அ.தி.மு.க அரசு.</p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி: </strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>அப்படி</strong><strong> </strong><strong>என்றால்</strong><strong>, </strong><strong>கல்விக்கொள்கை</strong><strong> </strong><strong>நமக்காக</strong><strong> </strong><strong>இல்லையா</strong><strong>?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>வேறு</strong><strong> </strong><strong>யாருக்கு</strong><strong> </strong><strong>சேவை</strong><strong> </strong><strong>செய்கிறது</strong><strong>?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்:</strong></p>
<p style="text-align:justify;">இதை புரிந்து கொள்வது ஒன்றும் கடினம் இல்லை. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைக்கு சேவை செய்வதுதான் நமது கல்விக் கொள்கையின் வேலையாக மாற்றப்பட்டுள்ளது.</p>
<p style="text-align:justify;"><strong>என்ன</strong><strong> </strong><strong>புரியவில்லையா</strong><strong>?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;">                ஐடி பார்க்குள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், பன்னாட்டுக் கம்பெனிகள் போன்றவற்றின் உயர்பதவிகளுக்கு பணக்கார-மேட்டுக்குடி வர்க்கத்திலிருந்து ஒரு சிறு கும்பலை என்ன்ஞ்னியர்களாக, மருத்துவர்களாக உருவாக்கி அனுப்புவதும், இந்த சிறு கும்பலுக்கு சேவை செய்யும் உதவியாளர், டிரைவர், மெக்கானிக்குகள், செக்யூரிட்டிகளாக பெருவாரியான உழைக்கும் மக்களை நவீன கொத்தடிமைகளாக்குவதும்தான் இன்றைய மறுகாலனியாக்க சூழலில் கல்வியின் பாத்திரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தான், கல்லூரிகளுக்கு தன்னாட்சி(Autonoums) , பாடத்திட்டம், புதிய துறைகள், புதிய படிப்புகள் தொடங்க சுதந்திரம், செமஸ்டர் தேர்வு முறை, ஒருமைப் பல்கலைக்கழகங்கள் என கல்வி சூழலை மாற்றுகிறார்கள். இதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதென்று நினைக்காதீர்கள். இதுதான் அரசின் கல்விக் கொள்கை. இது பன்னாட்டு முதலாளிகளின் தேவைக்கான கொள்கை.</p>
<p style="text-align:justify;"><strong>ஆதாரம்</strong><strong> </strong><strong>வேண்டுமா</strong><strong>?</strong></p>
<p style="text-align:justify;">                பிக்கி (FICCI) என்னும் பன்னாட்டு முதலாளிகள் சங்கத்தின் செகரட்டரி செனரல் டாக்டர் அமித்மித்ரா பன்னாட்டு முதலாளிகளின் விருப்பம் என்ன என்பதை ஒரு கருத்தரங்கில் பின்வருமாறு சொல்கிறார்.</p>
<p style="text-align:justify;">“இந்தியா, ஆங்கிலம் பேசும் திறந்த பொருளாதாரத்துடன் கூடிய பன்முகத் தன்மை கொண்ட சமூகம் என்ற அடிப்படையிலும், மில்லியன் கணக்கில் பட்டப்படிப்பாளர்களையும், லட்சக்கணக்கில் பொறியியலாளர்களையும், மருத்துவர்களையும் விஞ்ஞானிகளைய்ம் உருவாக்குவதன் அடிப்படையிலும் இந்தியாதான் அமெரிக்காவுடன் நீண்ட நாள் அடிப்படையில் பங்குதாரராய் இருக்க முடியும்” என்கிறார். சுருக்கமாக சொன்னால், பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆள் சப்ளை செய்யும் வேலைதான் இந்திய அரசின் கல்விக் கொள்கையின் வேலை என்கிறார்.</p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி: </strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>கல்வியின்</strong><strong> </strong><strong>உண்மையான</strong><strong> </strong><strong>பாத்திரம்</strong><strong> </strong><strong>தான்</strong><strong> </strong><strong>என்ன</strong><strong>?</strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்:</strong><strong></strong></p>
<p style="text-align:justify;">மனிதனை விலங்கிலிருந்து நாகரீகமான உயர்ந்த நிலைக்கு மாற்றியதும் &#8211; அன்பு, கருணை, நட்பு பாராட்டகூடிய சமுதாய மனிதனாக உயர்த்தியதுமான மகத்தான பாத்திரத்தை வகித்ததுதான் “கல்வி”.</p>
<p style="text-align:justify;">இத்தகைய கல்வியை வேலைக்கான ஒரு கருவியாக, சந்தைக்கான ஒரு சரக்காக மாற்றியதன் மூலம், இந்நாட்டு மக்களை சுய சிந்தனையோ, மனிதத் தன்மையோ இல்லாத மிருகங்களாக, மனித உணர்வின் அடிப்படையான இதயத்தையும், ‘ஆன்மா’வையும் உருவி எடுத்த ‘எந்திரனாக’ (ரோபாட்டாக) மாற்றி வருகிறார்கள். இப்படி ஒரு சமூகத்தையே அழிக்கும் அபாயம் ‘லைலா’ புயலைவிட  வேகமாக எதிர் வருகின்றது.</p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி:</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>இதெல்லாம்</strong><strong> </strong><strong>இங்கு</strong><strong> </strong><strong>இருக்கும்</strong><strong> </strong><strong>அரசியல்</strong><strong> </strong><strong>கட்சிகளுக்குதெரியாதா</strong><strong>?</strong><strong> </strong></p>
<p style="text-align:justify;"><strong>இக்கட்சிகள்</strong><strong> </strong><strong>என்ன</strong><strong> </strong><strong>செய்கின்றன</strong><strong>?</strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்:</strong></p>
<p style="text-align:justify;">                அரசியல் கட்சிகள் என்றால் யாரைச்சொல்லுகிறீர்கள். ஓட்டுப்பொறுக்கி கட்சிகளையா?</p>
<p style="text-align:justify;">கேள்வியைத் தெளிவாகக் கேளுங்கள். வெயிலில் கால்கடுக்க நின்றும், துப்பாக்கி முனையிலும், ஜனநாயகம் இல்லாமல் ஓட்டுப்போட்ட மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். வெள்ளை வேட்டி, சட்டை மடிப்பு களையாமல் ஸ்கார்ப்பியோ காரில் வலம் வந்து ஓட்டுப்பொறுக்கிச் சென்ற கோடீஸ்வர சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது நன்குத் தெரியும்.</p>
<p style="text-align:justify;">                அதனால்தான், கடந்த ஜீன் 7 ந்தேதி சமச்சீர்கல்விக்கான பொதுப்பாடத்திட்டதை ரத்து செய்யும் சட்டத்திருத்தத்தை பாசிச ஜெயா சட்டமன்றத்தில் கொண்டு வந்த போது எந்த ஓட்டுக்கட்சிகளும் அதை எதிர்க்கவில்லை. மாறாக மேசையை தட்டி வரவேற்றார்கள். இந்த அநீதிக்கு எதிராக இன்று வரை அமைதியாகவே உள்ளார்கள். தே.மு.தி.க விஜயகாந்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பாசிச ஜெயாவிற்கு சற்றும் சளைத்தவர் அல்ல, தனியார்மயத்திற்கு சேவை செய்ய தனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டதால் பன்னாட்டு -உள்நாட்டு கம்பெனி முதலாளிகளுக்கு செருப்பாகத் தேய்வார். சமச்சீர் கல்வியின் நாயகனாக வருணிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு மகள் கனிமொழியை காப்பாற்றுவதும், கட்சியைக் காப்பாற்றுவதுமே பெரிய பிரச்சனையாக உள்ளது என்று அனுதாபத்தை தேடுகிறார். உண்மை என்னவென்றால் ஜெயலலிதாக்கு  ஓட்டுப்போட்ட மக்கள் அனுபவிக்கட்டும் என்று ஏழைகள் மீது வக்கிரத்தை கக்குகிறார்.</p>
<p style="text-align:justify;">                பாமக, விசி, மதிமுக இவர்களைபோன்ற ’வாய்வீச்சு வீரர்களைப் ’பற்றி சொல்லவேத் தேவையில்லை பத்திரக்கைகளில் அறிக்கைவிட்டு ஓட்டுவங்கியை தக்கவைப்பதைத்தவிர ஜெயலலிதாவுக்கும் இவர்களுக்கும் வேறு ஒரு கொள்கைப் பிரச்சனையும் இல்லை.இந்த ரகங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பெருவாரியான மாணவர்களுக்கு எதிரானவர்கள் என்று பளிச்சென்று  தெரிந்து விட்டனர். சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டதை எங்களால்தான் கொண்டு வந்தார்கள் என்று மார்தட்டிக்கொண்ட போலி கம்யூனிஸ்டுகள் மேலே சொன்ன ரகங்களை விட ஆபத்தானவர்கள், சட்டமன்றத்திற்கு வெளியே ரத்து செய்யப்பட்ட சமச்சீர் கல்வி பொதுப்பாடதிட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும்,சட்டமன்றத்திற்குள் ஜெயா வின் சட்டத்திருத்தத்தை சமூக நீதிக்கானது என்று வரவேற்றும் பேசும் அயோக்கியதனத்தை இனங்காண வேண்டியது மிகவும் அவசியமானது.</p>
<p style="text-align:justify;">(இவர்களின் இந்த இரட்டை நிலையைப் பற்றி வினவு தளத்தில் விரிவாக அம்பலப்படுத்தியதைப் பார்க்கவும்) இதற்கு மேலும்  நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், இந்த சமச்சீர்கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை திமுக அரசு அறிவித்த பின்பு உடனே அமல்படுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI)  முற்றுகையிட்டபோது   அடி, உதைபட்ட அந்த உண்மையான SFI தொண்டர்கள் அன்று இருந்த  அதே தன்மான உணர்வுடன் தங்கள் தலைமை கேள்வி எழுப்பவேண்டும். அவர்கள் அதற்கு நேர்மையாக பதில் சொல்லவில்லை என்றால் அந்த உண்மையானத் தொண்டர்கள், தங்கள் இழப்பு, தியாகங்களை இழிவுபடுத்தப்படுவதை சகித்துக் கொண்டு சகவாழ்வு நடத்தாமல்,உண்மையில் “சமச்சீர் கல்வியை” அமல்படுத்த வேண்டும் என்று களம் கானும் புரட்சிகர அமைப்புகள் பக்கம் நிற்பதுதான் தன்மானம். இது  அறிவுரை அல்ல &#8211; தோழைமை உணர்வு.</p>
<p style="text-align:justify;"><strong>கேள்வி:</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>இந்தப்</strong><strong> </strong><strong>பிரச்சனைக்குத்</strong><strong> </strong><strong>தீர்வுதான்</strong><strong> </strong><strong>என்ன</strong><strong>?</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong>பதில்:</strong><strong></strong></p>
<p style="text-align:justify;"><strong> </strong></p>
<p style="text-align:justify;">முதலில் இதை ஜெயலலிதாவுக்கும்-கருணாநிதிக்குமான பிரச்சனையாகவோ, தனியார் பள்ளிகளுக்கு &#8211; கட்டண நிர்ணய கமிட்டிக்கும் -பெற்றோர்களுக்குமான பிரச்சனையாகவோ பார்க்கக்கூடாது. இது ஒரு சமூகத்தையே சீர்குலைக்கும் மறுகாலனியாக்கக் கல்விக் கொள்கைப்பிரச்சனை என்பதை உணர வேண்டும். நாம் தொடங்க வேண்டியதும் இதை வேறறுக்கும் போராட்டத்தைத்தான். சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்டத்தை மட்டுமல்லாது, உண்மையான “சமச்சீர்” கல்வியையும் அமல்படுத்துவதற்கான போராட்டத்தில் இந்த சமூகத்தின் ஓவ்வொரு உறுப்பினரும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். அத்தகையதோர் போராட்டம்தான் தனியார்பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கும், கல்வி வணிகர்களின் கொட்டத்திற்கும் முடிவு கட்டும்.</p>
<p style="text-align:justify;">உயிர்வாழும் உரிமையான கல்வி இன்று கடைச்சரக்காகி உள்ளது. கல்வி வணிகர்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் ‘கல்வி வள்ளல்களாக’ வலம் வருகிறார்கள். இவர்கள் காலடியில் மண்டியிடும் ஓட்டுப்பொறுக்கிகளும், அவர்கள் தலைமையில் நடைபெறும் அரசாங்கங்கலும் இப்பிரச்சனைக்கு முடிவு கட்டாது.</p>
<p style="text-align:justify;">தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடும் என்று பணத்தையும் உயிரையும் பறிகொடுத்தது போதும். பாதிக்கப்படும் சமுதாயத்தின் பிரதிநிதி என்ற முறையில் இந்த அநீதிக்கு எதிராக தன்மானத்தோடு கிளர்ந்தெழ வேண்டும். அனைத்துத்தரப்பு மக்களும் களத்தில் நிற்கும் நக்சல்பாரிகளின் பாதையில் புரட்சிகர அமைப்புகளின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும். மறுகாலனியாக்கக் கல்விகொள்கைக்கு முடிவு கட்டுவதன் மூலமே உழைக்கும் மக்கள் அனைவருக்கும் காட்டாயமாக -இலவசமாக &#8211; அறிவியல் பூர்வமாக &#8211; தாய்மொழியில் கல்விபெறுவதற்கான உரிமையை நிலைநாட்டமுடியும்.</p>
<p style="text-align:justify;" align="center"><strong> - இளஞ்செழியன்</strong></p>
<p style="text-align:justify;" align="center"><strong> </strong></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இவர் தான் லெனின்]]></title>
<link>http://rsyf.wordpress.com/2009/03/15/%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/</link>
<pubDate>Sun, 15 Mar 2009 12:49:40 +0000</pubDate>
<dc:creator>புமாஇமு</dc:creator>
<guid>http://rsyf.wordpress.com/2009/03/15/%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/</guid>
<description><![CDATA[1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார் 2. வறுமையை ஒழித்த லெனின் 3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மன]]></description>
<content:encoded><![CDATA[<p class="date-header"><a href="http://rsyf.files.wordpress.com/2009/03/lenin.jpg"><img class="aligncenter size-large wp-image-250" title="lenin" src="http://rsyf.files.wordpress.com/2009/03/lenin.jpg?w=300&#038;h=400" alt="lenin" width="300" height="400" /></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/1.html"><span style="color:#ff0000;"><strong>1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/2.html"><span style="color:#ff0000;"><strong>2. வறுமையை ஒழித்த லெனின்</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/3.html"><span style="color:#ff0000;"><strong>3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/4.html"><span style="color:#ff0000;"><strong>4. வக்கீல் உருவில் ஒரு போராளி!</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/5.html"><span style="color:#ff0000;"><strong>5. லெனின் தேர்வு செய்த பாதை</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/6.html"><span style="color:#ff0000;"><strong>6. போராட்டமே வாழ்க்கையாக&#8230;!</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/7.html"><span style="color:#ff0000;"><strong>7. சைபீரியச் சிறைவாசம்</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/8.html"><span style="color:#ff0000;"><strong>8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/9.html"><span style="color:#ff0000;"><strong>9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/10.html"><span style="color:#ff0000;"><strong>10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/11.html"><span style="color:#ff0000;"><strong>11. சதியை முறியடித்த லெனின்</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/12.html"><span style="color:#ff0000;"><strong>12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/13.html"><span style="color:#ff0000;"><strong>13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்&#8230;</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/14.html"><span style="color:#ff0000;"><strong>14. எதிரிகளை வீழ்த்திய செம்படை</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/15.html"><span style="color:#ff0000;"><strong>15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/16.html"><span style="color:#ff0000;"><strong>16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்</strong></span></a></p>
<p class="date-header"><a href="http://longlivelenin.blogspot.com/2007/05/17.html"><span style="color:#ff0000;"><strong>17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்ல&#8230;</strong></span></a><span style="color:#ff0000;"><strong> </strong></span></p>
<div class="post hentry uncustomized-post-template"><a name="1562705502925892570"></a></div>
<h3 class="post-title entry-title" style="text-align:right;"><span style="text-decoration:underline;">வெளியீடு:<br />
</span>புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி<br />
சென்னை<a href="http://rsyf.blogspot.com/2008/04/blog-post_04.html"></a></h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பகத்சிங் -ஒரு அறிமுகம்]]></title>
<link>http://rsyf.wordpress.com/2009/03/15/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/</link>
<pubDate>Sun, 15 Mar 2009 08:19:18 +0000</pubDate>
<dc:creator>புமாஇமு</dc:creator>
<guid>http://rsyf.wordpress.com/2009/03/15/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/</guid>
<description><![CDATA[பகத்சிங் -ஒரு அறிமுகம் இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக (காலனியாக) இருந்த காலம் அது. ஆங]]></description>
<content:encoded><![CDATA[<p style="text-align:justify;"><a href="http://rsyf.files.wordpress.com/2009/03/bhakathsing-arimugam.jpg"><img class="aligncenter size-large wp-image-201" title="bhakathsing-arimugam" src="http://rsyf.files.wordpress.com/2009/03/bhakathsing-arimugam.jpg?w=339&#038;h=500" alt="bhakathsing-arimugam" width="339" height="500" /></a><span style="font-size:130%;color:#ff0000;"><strong><span style="font-size:medium;">பகத்சிங் -ஒரு அறிமுகம்</span></strong></span></p>
<div style="text-align:justify;">இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக (காலனியாக) இருந்த காலம் அது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டு வளங்களை சுரண்டிக் கொள்ளையடித்தனர். மக்கள் வறுமையில் வாடினர். இதைப் புரிந்து கொண்ட மக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை ஒழிக்க போராடத் துணிந்தனர். போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறை ஏற்பட்டது.</div>
<div style="text-align:justify;">..</div>
<div style="text-align:justify;">1919 ஏப்ரல் 14 ஆம் நாள் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ரவுலத் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. திடீரென ஜெனரல் டயரின் தலைமையில் ஒரு படைப்பிரிவு கூட்டத்தைக் சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக் கொன்றது. நாடெங்கும் மக்கள் கோபத்தால் பழிவாங்கத் துடித்தனர். ஆனால் எவருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. ஒரு (11 வயதுடைய) சிறுவன் மட்டும் ரத்த சேறான மைதானத்திற்கு சென்று ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வீட்டில் வைத்தான். தியாகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணின் மீது ஆங்கிலேயர்களை பழிவாங்குவதாக சபதம் செய்தான். அச்சிறுவனின் பெயர் தான் பகத்சிங்.</div>
<div style="text-align:justify;">..</div>
<div style="text-align:justify;">நாட்டின் விடுதலையை தன் இலட்சியமாக ஏற்றுக் கொண்டான். அதை எப்படி அடைவது என ஆராயத் தொடங்கினான். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த பிறகு ஏராளமான புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் இருந்து, ரஷ்ய நாட்டில் 1917 சோசலிச புரட்சிக்குப் பின்னர் அனைத்து மக்களும் அனைத்து வளங்களையும் சரிசமமாக பகிர்ந்து கொண்டு செழிப்பாக வாழ்வதைப் பற்றி அறிகிறார்.</div>
<div style="text-align:justify;">..</div>
<div style="text-align:justify;">அதற்கு காரணமான தலைவர் லெனினைப் பற்றியும் அறிகிறார். சோசலிசத் தத்துவத்தை தன் இலட்சியமாக ஏற்கிறார். காந்தியின் அகிம்சையால் இந்தியா விடுதலை அடைய முடியாது என அவருக்கு புரிகிறது. வெள்ளையர்களுக்கு துணையாக இந்தியாவிலுள்ள பண்ணையார்களும், முதலாளிகளும் இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாக்க போலீசும், இராணுவமும் உள்ளது. இவற்றை ஒழித்துக்கட்டி சுதந்திர இந்தியாவை உருவாக்க மக்கள் ஆயுதம் ஏந்தி புரட்சியில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்தார்.</div>
<div style="text-align:justify;">..</div>
<div style="text-align:justify;">1925-ஆம் ஆண்டு தன்னைப் போன்ற கருத்துடைய இளைஞர்களை ஒன்று திரட்டி ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு கட்சி என்ற புரட்சிகர அமைப்பைத் தொடங்குகிறார். விவசாயிகள், தொழிலாளிகளிடையே பிரச்சாரம் செய்து, அவர்களை ஒன்று திரட்டுகிறார். ஆயிதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவை விடுதலையடையச் செய்வதே அக்கட்சியின் திட்டம்.</div>
<div style="text-align:justify;">..</div>
<div style="text-align:justify;">1928 ஆம் ஆண்டு தேசத் தலைவர் லாலாபஜபதிராயை போலீசார் அடித்து கொன்றனர். நாளுக்கு நாள் வெள்ளையரின் அட்டூழியம் அதிகரித்தது. காந்தியின் அகிம்சையால் ஒன்றும் உருப்படியாக செய்ய முடியவில்லை. மக்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். பத்திரிக்கையோ, பணபலமோ இல்லாததால் பகத்சிங்கால் மக்களிடைய பரவலாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை.</div>
<div style="text-align:justify;">..</div>
<div style="text-align:justify;">இந்திய மக்கள் அனைவருக்கும் தங்கள் கொள்கைகளைத் தெரிவிப்பதற்கு எதுவாக கைதாகி நீதிமன்றத்தில் இருந்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றத்தின் எவரும் இல்லாத வெற்றிடத்த்தில் குண்டு வீசி பகத்சிங்கும், பதுகேஷ்வர் தத்-தும் கைதாகினர்.</div>
<div style="text-align:justify;">..</div>
<div style="text-align:justify;">எதிர்பார்த்தபடியே பத்திரிக்கைகள் இவ்வழக்கு பற்றி ஏராளமாக எழுதின. நீதிமன்றத்தில் பகத்சிங் பேசிய பேச்சுக்களால் மக்கள் விழிப்படைந்தனர். சிறையிலும் தங்கள் உரிமைகளை பாதுகாக்க பகத்சிங்கும் இதர தோழர்களும் போராடினர். நாடு முழுவதும் சுதந்திர தாகம் கொண்ட இளைஞ்ர்கள் பகத்சிங்கின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டனர். ஒருசில நாட்களிலேயே பகத்சிங் காந்தியை விடப் பெரிய தலைவராக உயர்ந்தார். பகத்சிங்கை விடுதலை செய்யக் கோரி நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதைக் கண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பயந்து நடுங்கியது. பகதிங்கால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் புரட்சியில் ஈடுபட்டால் இந்தியா விடுதலையாவதை எவராலும் தடுக்க முடியாது என உணர்ந்தது. அதைத் தடுக்க பகத்சிங்கை கொலை செய்ய முடிவு செய்தது. 1931 மார்ச் 23 ஆம் நாள் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவை தூக்கிலிட்டு கொன்றது. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட இளைஞர் பட்டாளம் தொடர்ந்து போராடியது. ஆயுதப் போராட்டம் வளர்ந்தது. 1947 ஆக 15இல் நம்மை ஆண்ட வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். இதற்கு காரணமான தோழர் பகத்சிங்கை நாம் ஒருபோதும் மறக்கலாகாது..</div>
<div style="text-align:right;"><strong>வெளியீடு:</strong></div>
<div style="text-align:right;">புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி</div>
<div style="text-align:right;">சென்னை</div>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
