<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>jaffna-dramma &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://en.wordpress.com/tag/jaffna-dramma/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "jaffna-dramma"</description>
	<pubDate>Tue, 01 Dec 2009 05:19:40 +0000</pubDate>

	<generator>http://en.wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[திரை மெல்லத் திறக்கிறது]]></title>
<link>http://koothharangam.wordpress.com/2007/10/02/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81/</link>
<pubDate>Tue, 02 Oct 2007 16:14:07 +0000</pubDate>
<dc:creator>Theva</dc:creator>
<guid>http://koothharangam.wordpress.com/2007/10/02/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81/</guid>
<description><![CDATA[கிராம மட்டத்தில், நிகழ்வுகளில் நாடகம் மேடையேற்றுவதற்காக தாவடி தெற்கில் ஓர் நாடகக் குழு தனது பணியை மே]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p align="right"><img align="left" src="http://koothharangam.wordpress.com/files/2007/10/thirai-copy.jpg" alt="thirai-copy.jpg" /></p>
<p>கிராம மட்டத்தில், நிகழ்வுகளில் நாடகம் மேடையேற்றுவதற்காக தாவடி தெற்கில் ஓர் நாடகக் குழு தனது பணியை மேற்கொண்டு வருகிறது. “சிறி காளியம்பாள்” சனசமூக நிலையத்தில் “அம்பாள் நாடக மன்றம்” என்ற பெயரில் 60களில் இருந்து இயங்கி வரும் இந்நாடகக் குழு சனசமூக நிலைய நிகழ்வுகள், கோயிற் திருவிழாக்கள், பண்டிகைகளில் நாடகத்தை மேடையேற்றி வருகிறது.</p>
<p>இம்மன்றத்தின் நாடகச் செயற்பாடுகளிற்கு திரு. முருகர் அப்பையா (64), திரு. ஆறுமுகம் தெய்வேந்திரம் (56), திரு. முருகேசு இரத்தினசிங்கம் (50) என்பவர்கள் உறுதுணையாக இருப்பதோடு, ஆறுமுகம் தெய்வேந்திரம், தேசிங்கராஜா செல்வக்குமார் (23) ஆகியோர் நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்து வந்துள்ளார்கள். தமது நாடகங்களை “சமூக நாடகங்கள்” எனக் கூறும் இவர்கள், பெரும்பாலும் சமகால ஊர்ப் பிரச்சினைகளை நாடகக் கதையாக அமைத்துக் கொள்கிறார்கள். இவற்றுள் “வித்தியா சமானவள்”, “கதிரை யாருக்கு?” போன்ற நாடகங்களைக் குறிப்பிடத்தக்கவை எனத் தெரிவிக்கிறார்கள்.</p>
<p>அத்தோடு இவர்கள் வீதி நாடகங்கள் அளிக்கை செய்வதிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். கலை பண்பாட்டுக்கழக ஆதரவுடன் பல்வேறு வீதி நாடகங்களை அளிக்கை செய்துள்ளார்கள். “மாவீரர் வாரம்”, “மண்ணுக்காக&#8230;&#8230;”, “போர் மண்ணில் மீண்டும் போர்”, “தீச்சுவாலை”, “நச்சுக் காற்று” என்பன தமது வீதி நாடகங்கள் எனத் தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். இந்த வீதி நாடகங்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்டம் சம்பந்தமாகவும், யுத்த அவலங்கள் சம்பந்தமாகவும், தென்னிலங்கை அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பேசுவதாக அமைந்திருந்தன.</p>
<p><!--more-->பெரும்பாலும் இளந் தலைமுறையினரின் ஈடுபாடு அதிகம் காணப்படும் இந்நாடக மன்றத்தில் பெண்கள் மேடையேறுதல் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக இருக்க ஸ்ரீவில்லை. கடந்த மாதம் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் நடத்திய &#8216;வேரடி&#8217; மண் பாரம்பரிய கலை விளையாட்டு விழாவிலும் பெண்கள் மட்டும் பங்குகொண்ட &#8216;வித்தியாசமானவள்&#8217; எனும் நாடகம் மேடையேற்றப்பட்டமையைக் குறிப்பிட்டும் கூறியுள்ளார்கள்.</p>
<p><img align="right" src="http://koothharangam.wordpress.com/files/2007/10/thevarasa-copy.jpg" alt="thevarasa-copy.jpg" /></p>
<p>தெய்வேந்திரம் அவர்கள் தனது நாடக அனுபவம் பற்றிக் குறிப்பிடுகையில் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் “கிளியப் பட்ரா” நாடகம் செய்தபோது தான் கைது செய்யப்பட்டமை பற்றியும் கூறியதோடு, கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திரு. கா.சிதம்பரநாதன் நடத்திய நாடகப் பட்டறையில் பங்கு கொண்டது பற்றியும் பசுமையான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். திரைப்படத்துறை தொடர்பாக அதிக நாட்டம் கொண்ட இவர் தற்போது இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றிய திரைப்படம் தயாரிப்பதற்கான முன்னெடுப்பிலும் ஈடுபட்டுள்ளார்.</p>
<p>தற்போது இந்நாடகப் பணிகளை முன்னின்று நடாத்துவதற்கு செல்வன் தே.செல்வக்குமார் என்பவர் உறுதுணையாக இருப்பதும் நம்பிக்கை தரும் விடயமாக அமைந்துள்ளது. அளிக்கை முறைகள், அரங்கு சார்ந்த கற்கை முறைகள் இவர்களை மேலும் வளம்படுத்தும் எனக் கருதுகின்றோம்.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[தனிமையில் ஒரு நாடகக் கலைஞர்]]></title>
<link>http://koothharangam.wordpress.com/2007/10/02/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88/</link>
<pubDate>Tue, 02 Oct 2007 15:42:46 +0000</pubDate>
<dc:creator>Theva</dc:creator>
<guid>http://koothharangam.wordpress.com/2007/10/02/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88/</guid>
<description><![CDATA[நீண்ட குர்த்தா, அகண்ட இடுப்புப் பட்டியால் வலிந்து கட்டிய வேஷ்டி, நெற்றியில் நீறு, சந்தணப்பொட்டு என ம]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p align="right"><img align="left" src="http://koothharangam.wordpress.com/files/2007/10/arasu-copy.jpg" alt="arasu-copy.jpg" /></p>
<p>நீண்ட குர்த்தா, அகண்ட இடுப்புப் பட்டியால் வலிந்து கட்டிய வேஷ்டி, நெற்றியில் நீறு, சந்தணப்பொட்டு என மலர்ந்த முகத்துடன் துவிச்சக்கர வண்டியில் வந்து இறங்கினார் அரசையா.</p>
<p>“கோயிலுக்குப் போயிட்டு வாறன். நீங்களும் சொன்ன நேரத்துக்கு வந்திட்டீங்கள்” என்றார். வீதியில் இருந்து அவரின் வீட்டினுள்ளே சென்றோம். அவருடைய வீட்டின் அத்திவார அமைப்புக்கள் மட்டும் கிடந்தன. இடிக்கப்பட்ட வீட்டின் எச்சங்கள் சிறு சிறு குவியல்களாகக் கிடந்தன.தற்போது இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீட்டில் அவரது வாழ்க்கை.</p>
<p>நாடக வாழ்க்கைக்காக எவற்றையெல்லாம் இழந்தாரோ அதே நிலையில் &#8211; தனிமையில் &#8211; கோயில் குளம், ஒரு சில உறவுகள், நண்பர்கள், ஒளிப்படப்பிடிப்பு என அவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. கலை உலக உறவுகள் தன்னை  அரவணைத்திருக்கும் என்ற தளராத நம்பிக்கையுடன் அவர் எல்லாச் சுமைகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்.</p>
<p><!--more-->இருள் பரவும் நேரம். எம்மை அழைத்து அமரச் செய்த பின்னர், தனது மேலங்கியை கழற்றி வைத்தவர், வீடெங்கும் குங்கிலியப் புகையிட்டார், விளக்கேற்றினார். கூடவே தனது வாழ்க்கை முறை பற்றி எமக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார். இவருடைய மகள் 2002ம் ஆண்டு திடீர் சுகயீனம் காரணமாக இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார். அப்பிரிவு இவரது மனதை விட்டு அகலவில்லை. நாடகப் பணிகளில் தற்போது ஈடுபடாததற்கும் அதுவே காரணம் எனக் கூறுகிறார்.</p>
<p>தனது நாடக ஈடுபாடுகள் பற்றி பசுமையான அனுபவங்களைத் தெரிவித்துக்கொண்டவர். “என்னைப் போல நடிக்கின்ற தோதான ஆட்கள் வரவில்லை. என்னுடைய சகாக்கள் வந்துகொண்டிருந்தவர்கள்தான். ஆனால் அவர்கள் அப்படியே எல்லாவற்றையும் கைவிட்டு விட்டார்கள்” என்றார்.</p>
<p>அரசையாவைப் பொறுத்தமட்டில், புராண இதிகாச நாடக, இயற்பண்பு வாத, யதார்த்தவாத நடிப்புக்கொண்ட ஆற்றுகைகளையே “நாடகம்”, “நடிப்பு” எனக்கருதுகிறார். தற்போது நடைபெற்றுவருகின்ற நாடக முயற்சிகள் தொடர்பாக தனது விசனங்களை தெரிவிப்பதிலும் அவர் பின்னடிக்கவில்லை. அரங்குகளில் காட்டாது தவிர்க்க வேண்டியவைகள் எல்லாம் அளிக்கை செய்யப்படுகின்றன எனவும் குறைப்பட்டுக்கொள்கின்றார்.</p>
<p>குறிப்பாக பல்கலைக்கழக மட்டத்தில் நடைபெறுகின்ற அரங்கியல் பரீட்ச்சாத்தங்களைப் பற்றி குறிப்பிட்டுக் கூறும் அரசையா, பரீட்சார்த்த நாடகங்களை எல்லா இடமும் மேடையேற்ற முடியாது எனவும் கூறுகிறார். ஆடல், பாடல் கொண்ட அளிக்கை முறைகளைத் தான் தற்போது அதிகம் அவதானிப்பதாகவும், அவை “பலே” வடிவம் <span style="font-size:11pt;font-family:'Times New Roman';">(Pallet Style)</span><span style="font-size:11pt;font-family:Bamini;"> </span> கொண்டதாகவும் எனினும் அவற்றுள் ஜதிகள், ஒழுங்குகள் காணப்படவில்லை எனவும் ஆதங்கப்பட்டுக் கொள்கின்றார்.</p>
<p><img align="right" src="http://koothharangam.wordpress.com/files/2007/10/arasu-1-copy.jpg" alt="arasu-1-copy.jpg" /></p>
<p>அரசையாவின் “தமிழன் கதை” எனும் நாடகம் அவரை ஓர் போற்றக் கூடிய கலைஞனாக வெளிக்காட்டி உள்ளது. அத்தோடு 95ன் முன் நாடக அரங்கக் கல்லூரியில் “வையத்துள் தெய்வம்”, “பாஞ்சாலி சபதம்” எனும் நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளார். அண்மைக் காலங்களில் கொழும்பில், வவுனியாவில் தங்கியிருந்த போது திரு.கந்தையா ஸ்ரீகணேசனோடு கூட்டாக நாடகப் பணிகளை மேற்கொண்டுள்ளார். “சைவப்பிரகாச” போன்ற பாடசாலைகளும் “சாயிசமித்தி” போன்ற இடங்களும் இவருக்கு நாடக வேலைகளில் ஈடுபடக் களமாகக் கிடைத்திருக்கின்றன.</p>
<p>உண்மையிலேயே நாடகம் மீதான பற்றுக் காரணமாக அரசையா இழந்தவை பல. எனினும் மேலும் மேலும் அரங்கத்துறை சார்ந்த வேலைகளில் ஈடுபட அவர் ஆர்வமாக உள்ளமை எமக்கெல்லாம் முன்னுதாரணம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.</p>
<p>சிறந்த நடிகனாக, நெறியாளனாக, வேட உடை ஒப்பனையாளனாக, சிற்பக் கலைஞனாக இருந்து வந்த அரசையா இன்றும் தன் ஜீவனோபாயத்திற்கான முயற்சிகளை விட்டு விடவில்லை. அதற்கு அவருக்கு கைகொடுத்திருப்பது ஒளிப்படக்கலை. நீண்ட காலமாகவே இக் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தவர். இன்றுள்ள நவீன, வியாபார முயற்சிகளுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் உள்ளார். அரசையா கலை இலக்கியத்துறை சார்ந்தவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து பேணி வருவதோடு இவர்களுடன் கலந்துரையாடுவதில் பெரும் திருப்தி கொள்கின்றார்.</p>
<p>தற்போது எங்கு நாடகம் மேடையேறினாலும் அதனை அரசையா அறிந்தாராயின் அவர் அவ்விடத்தில் பிரசன்னமாகியிருப்பார்.</p>
<p>&#8216;கூத்தரங்கம்’ இவர் போன்றவரை ஒரு கணம் உரையாடி உறவு கொள்ள விரும்புகின்றது. அதற்காக அரங்க முதிய நண்பர்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மக்கள் மௌனமாகச் சொல்லியதை 'முடக்கம்' மேடையேறிக் கூறிவிட்டது.]]></title>
<link>http://koothharangam.wordpress.com/2007/10/02/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4/</link>
<pubDate>Tue, 02 Oct 2007 06:45:51 +0000</pubDate>
<dc:creator>Theva</dc:creator>
<guid>http://koothharangam.wordpress.com/2007/10/02/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4/</guid>
<description><![CDATA[தேவானந்தின் நாடகம் பற்றிய ஓர் அலசல் நீடித்து வந்த யுத்தம் ஒரு கணம் ஓய்ந்துள்ளது. ஆனால் குண்டுகள் துள]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p align="left"><strong>தேவானந்தின் நாடகம்<br />
பற்றிய ஓர் அலசல்</strong></p>
<p>நீடித்து வந்த யுத்தம் ஒரு கணம் ஓய்ந்துள்ளது. ஆனால் குண்டுகள் துளைக்காத மனித வடுக்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இழக்கப்பட்ட பெறுமதிகள் எவையெனப் புரியாமல் திணிக்கப்பட்டு வருகின்ற இன்னொரு வாழ்க்கைமுறை! இந்த இடைவெளிக்குள், உள்நுழைந்து, உருப்படியற்ற திட்டங்களை நிறைவேற்ற எத்தனையோ முதலீட்டாளர்கள்.  முடியவில்லை மக்களால் திரும்பிப்பார்ப்பதற்கு. எங்கோ ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்! ஆனால் எங்கிருந்தோ வருவார்கள். எம் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வாளர்கள், திட்டங்களை அமுல்படுத்துவார்கள்.  கோடிக்கணக்கான டொலர்கள் அள்ளியிறைக்கப்படும். ஆனால் மக்கள் வாழ்வு? &#8220;பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்&#8221;  என மக்களின் அவலம் தொடர்கதைதான்.  வறுமைக் கோட்டைக் கீறியவர்கள் இன்னமும் அதனை அழிக்க விரும்பாத பேரவலம்.</p>
<p>இவையொரு புறமிருக்க, படைநகர்த்தலின்றி முற்றுகைகள் இன்றி, கைதுகள் காணமால் போதல்கள் இன்றி &#8211; இன்னுமொரு யுத்த அவலம் தொடர்கிறது. அது புதைக்கப்பட்ட மிதிவெடிகளால் தொடர்ந்து வருகின்ற இழப்புக்கள்.  இதனால் யாருக்கென்ன கவலை.? பாதிக்கப்படுவது வறுமைக் கோடு கீறப்பட்டுவிட்ட குடும்பங்கள்தானே. யுத்தம் என்றாலும் அதன் வீச்சு இவர்களைத்தான் தாக்கும். இப்போ மட்டுமென்ன தப்பிவிட்டார்களா!  பொருளாதாரத் தடையில் யாழ் குடாநாடு முற்றுகையில் கிடந்த போது விறகு கட்டியிழுத்த துவிச்சக்கர வண்டிகள் என்ன ஓய்ந்து விட்டனவா? இன்னமும் அவர்களின் வாழ்க்கை அப்படியேதான்.  ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்யும் திட்டங்கள் எல்லாம் இவர்கள் மீதான தேவைப் பகுப்பாய்வின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன.  அவற்றிற்கு என்ன நடந்து விட்டது?</p>
<p><!--more-->மேற்குறித்த சிந்தனா வேகத்தின் ஒரு பகுதியை குறுக்கு வெட்டுமுகமாகக் காட்ட விளைகிறது &#8216;முடக்கம்&#8217; எனும் நாடகம்.  செயல்திறன் அரங்க இயக்கத்தினால் மிதிவெடி அபாயக் கல்விச் செயற்பாட்டிற்காக ஆற்றுகை செய்யப்பட்டு வருகிறது இந்நாடகம்.  பாடசாலைகள், கிராமங்கள் என பல தடவைகள் மேடையேறி மிதி வெடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த முடக்கம் நாடகம் சில தடவைகள் நாவலர் கலாசார மண்டபத்திலும் மேடையேற்றப்ப்ட்டமை இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.</p>
<p>மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பாடசாலைகள் கிராமங்களில் களம் தேடிய ஆற்றுகையாளர்கள் ஏன் நகர மத்தியில் நாவலர் கலாசார மண்டபத்தைக் களமாகத் தேடினார்கள். காரணம் பல இருக்கலாம்.  ஆயினும் குறிப்பாக ஒன்றைக்  கருதவேண்டியிருந்தது. மிதிவெடி அபாயக் கல்விய+ட்டலில் இருந்து சற்றே விலகி எமது சமூகத்தின், தேசத்தின் சமாதான முற்றுகைக்குள் புகுந்து விட்டிருக்கின்ற மறைக்க முடியாத, மறுக்க முடியாத அவலங்களை அளிக்கை செய்து காட்டுதல் என்பது ஓர் நோக்காகக் கருதமுடியும்.  அங்கே பிரசன்னமாகின்ற அல்லது அழைக்கப்படுகின்ற பார்வையாளர்களும் மிதிவெடிகள் வெடிபொருட்கள் பற்றி அறியப்பட வேண்டியவர்கள் அல்லர். பொதுவாகவே சமூகம் மீதான பிரக்ஞை கொண்டவர்களின் முகங்களே அங்கு தெரிந்து கொள்வது உண்மை தான்.  இவர்கள் மத்தியில் &#8216;நல்ல நாடகம்&#8217; போட்டோம் என ஆற்றுகையாளர்கள் திருப்திப்படலாம். ஆனால் உண்மை அதுவல்ல. ஏற்பட வேண்டிய திருப்தியும் அதுவல்ல.</p>
<p>சுமார் நாற்பது நிமிடங்கள் ஆற்றுகை செய்யப்பட்ட இந்நாடகத்துள் பெரும்பகுதி மகிழ் நெறியாகவே (கோமாளித்தனத்துடன்) கழிந்ததாகவே பலர் கருதலாம். அங்கே ஆற்றுகையாளர்களின் அதீத திறன்கள் இந்நிலமையை ஏற்படுத்தியிருக்கலாம்.  ஆனால் அந்த மகிழ்நெறி/நகைச்சுவைச் செயலியக்கங்களிற்குள் புதைந்து போய்க் கிடந்த அவலங்களே மிகப் பேரவலங்கள்.  நாம் எம்மைப் பார்த்தே வாய்விட்டு நகைக்கப் பழகிவிட்டோம்.  நாம் சுமந்து விட்ட அவலங்கள் எல்லாமே இப்போ சிரிப்புக்கிடமாகிவிட்டன. பல இடங்களில் மேடை யேற்றப்படுகின்ற நாடகங்களில் யாழ் குடாநாட்டின் பாரிய இடப்பெயர்வு காட்சிப் படுத்தப்பட்டு வரும.; அவ்வேளையிலும் வாய்விட்டுச் சிரிக்கத் தயாராக இருந்தார்கள் பார்வையாளர்கள்.  இதற்கும் உளவியலாளர்கள் பல பாடவிதானங்களை முன்வைப்பார்கள். எல்லாம் நல்ல விளைச்சலும் அறுவடையும் உடையவைதான்.</p>
<p>&#8216;முடக்கம்&#8217; ஒரு இளம் குடுமபத்தின் வாழ்வியல் முரண் நிலைகளை சிறுகதைப் பின்னலூடாக விளக்குவதோடு தொடங்குகிறது, தொடர்கிறது. அந்த அப்பாவிக் குடும்பத்தின் மீதான யுத்தத்தின் தொடர் வடுக்களாக கால் ஒன்றை இழக்கிறான் குடும்பத்தலைவன்.  தொடர்ந்து வருபவை மிதிவெடி வெடிபொருட்கள் தொடர்பான ஓர் பிரச்சாரப் பாணியிலான காட்சிப்படுத்தல்கள். ஆனால் இந்த நிஜ/யதார்த்தப் பாங்கிலான காட்சிகளின் தொடர் வருகையாக விமர்சனப் பாங்கிலான காட்சிகள் அமைந்து கொள்கின்றன.  இதற்கு கைகொடுப்பது நகைச்சுவை நடிப்பின் தேர்ச்சிகள். மக்களின் மன நிலைகளை, அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்த இதுவும் ஒரு தகுதியான வடிவம்.</p>
<p>இங்கேதான் நாடகம் இன்னொரு பரிமாணம் எடுக்கின்றது.  தெட்டத்தெளிவாக, புண்பட்ட மக்களின் குரலாக நாடகம் சிலவற்றையாதல் பேச முனைவது கவனிக்கப்பட வேண்டியது. அதிகாரமுடைய மேலதிகாரிகளின் (ஐயாமணி ஐயா, நல்ல மேய்ப்பன் என நாடகத்தில் குறிப்பிடப்படுபவை) செயற்பாடுகளில் அமுலாக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களும், அவற்றின் அமையச் செலவுகள் தொடர்பான மக்களின் பார்வைகளும் &#8211; வயிறு குலுங்கும் சிரிப்புடன் பார்த்து ரசிக்கப்படும்.  அரங்கியற் தொழில் நுட்பங்களே மிஞ்சிவிட்டிருக்கின்ற இந்நெறியாளரின் ஏனைய நாடகங்கள் போலல்லாது சற்றே விலகி நடிகர்களின் நடிப்பில் நம்பிக்கை வைத்து தயாரிக்கப் பட்ட நாடகம் என்பது போல் தோற்றமளிக்கிறது. அவர்கள் நன்றாக நடிப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.</p>
<p align="left"><img align="left" src="http://koothharangam.wordpress.com/files/2007/10/mudakkam.jpg" alt="mudakkam.jpg" /></p>
<p>பொதுவாகவே மக்கள் மத்தியில் மேற்படி நாடகம் கூறிய/விமர்சித்த கருத்துக்கள் தொடர்பான ஒரு கொதிப்பு நிலமையை பரவலாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அரசியலில் இருந்து வியாபாரம் வரை மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.  நாடகத்தில் மிதிவெடி அகற்றல் தொடர்பான திட்டம் பற்றி அலசி ஆராயப்பட்டிருப்பினும், அது குடாநாட்டின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அலசி ஆராய்தலாகவே இருக்க வேண்டுமெனக் கருதலாம்.  அதில் தவறுமில்லை.  மேற்குறித்த நிலை தொடர்பாக படித்தவர் முதல் பாமரர் வரை அலசுகிறார்கள், ஆராய்கிறார்கள், வாய்க்கு வாய் வந்த படியெல்லாம் கதைக்கிறார்கள்.  இப்போது காதோடு காதில்லாமல் மேடையேறியும் பேசியாயிற்று.  அதனை &#8216;முடக்கம்&#8217; செய்து விட்டது.  இனியென்ன!</p>
<p>வாய்கிளியப் பிதற்றுகின்றோம். ஆனால் தட்டிக் கேட்டு, உரசிப்பார்த்து, உப்புப்புளி பார்க்குமளவிற்கு மக்களைக் கொண்டு வராதவிடத்து என்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது.  கைகளை உயர்த்திக் காட்டி மக்கள் பங்களிப்பு என அறிக்கைகள் விடும் திட்டமிடல்களிற்கு எல்லாம், இன்னமும் நாற்று மேடையாக எமது சமூகம் இருப்பதா? இதனை, சமாதானச் சூழலைச் சங்கு ஊதிக் கெடுப்பது எனப் பொருள் கொள்ளத்தேவையில்லை.</p>
<p>எமது இருப்பிடங்களையும் எமது தேசத்தின் வளங்களையும் எமது கைக்குள் நாம் பெறாதவரையில் எமக்கு உலைவைக்க இன்னொருத்தர் இருக்கும் நிலை மாறி விடாது.  முடங்கிக் கிடக்கின்ற மக்களின் முனகல் ஒலி தன்னும் வெளியே கேட்க இன்னொரு கட்ட நகர்வை செயலாளிகள் மேற்கொள்ள வேண்டும்.  ஏனெனில் இந்த நாடகம் கூட &#8216;நல்ல ஒரு திட்டம்&#8217; என்ற அவலத்துக்குள் மூழ்கிவிடாமல் இருத்தல் வேண்டும்.  இல்லையேல் இன்னொரு திட்டம் வகுக்க பல்லாயிரம் ஐயாமணிகள் இங்கே அலை மோதுவார்கள். எம்மிற் பலர் மக்களின் பிரச்சினையை அலசி ஆராய்ந்து கொண்டேயிருப்பார்கள்.  மீண்டும்&#8230;&#8230;&#8230;&#8230;. மீண்டும்&#8230;&#8230;&#8230;&#8230;</p>
</div>]]></content:encoded>
</item>

</channel>
</rss>
