<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>kavithai-varigal &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://en.wordpress.com/tag/kavithai-varigal/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "kavithai-varigal"</description>
	<pubDate>Wed, 10 Feb 2010 13:34:26 +0000</pubDate>

	<generator>http://en.wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[அருள் புரிவாய் ஆதியே..]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/11/12/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/</link>
<pubDate>Thu, 12 Nov 2009 06:31:31 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/11/12/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/</guid>
<description><![CDATA[&nbsp; சுற்றிப் படர்கின்ற எண்ணமழித்து.. சூட்சுமப் பொருளின் அர்த்தம் உணர்த்தி.. அத்தனைக்கும் ஆதாரமான ]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p>&#160;</p>
<p>சுற்றிப் படர்கின்ற எண்ணமழித்து..<br />
சூட்சுமப் பொருளின் அர்த்தம் உணர்த்தி..</p>
<p>அத்தனைக்கும் ஆதாரமான  <br />
ஆனந்த மூலமதை <br />
அப்படியே அள்ளிப் பருகி..</p>
<p>அனைத்திலும் கலந்து.. அனைத்திலும் நிறைந்து..<br />
அனைத்தையும் கடந்து.. அனைத்துமாகி.. <br />
அழிவற்று இருக்க அருள் புரிவாய் ஆதியே..</p>
<p>&#160;</p>
<p>.</p>
<p>&#160;</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[காலை நேரச் சாலை...]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/11/05/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/</link>
<pubDate>Thu, 05 Nov 2009 09:47:07 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/11/05/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/</guid>
<description><![CDATA[&nbsp; வேலை நாளொன்றில் கண் விழித்த  அந்த பிரதான சாலையின் மத்தியில்..  முந்தைய இரவில்..  அடையாளம் தெர]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p>&#160;</p>
<p>வேலை நாளொன்றில் கண் விழித்த <br />
அந்த பிரதான சாலையின் மத்தியில்.. <br />
முந்தைய இரவில்.. </p>
<p>அடையாளம் தெரியாத வாகனத்தால் <br />
அடித்துக் கொல்லப்பட்டு.. <br />
பின் வரும் வாகனங்களால் <br />
பிய்த்து எறியப்பட்டு..  </p>
<p>சின்னா பின்னமாய் சிதைந்து கிடக்கிறது <br />
பெயர் தெரியாத ஒரு நாய்க்குட்டி !</p>
<p>&#160;</p>
<p>அது வீட்டு வளர்ப்போ.. <br />
அல்லது தெரு வளர்ப்போ.. <br />
கட்டி வைத்தக் கயிறை <br />
அவிழ்த்துக் கொண்டு வந்த அவலமோ.. <br />
வேறொரு நாயைக் கண்டு <br />
எல்லைத் தாண்டியதால் வந்த விபரீதமோ.. <br />
தெரியாது..</p>
<p>&#160;</p>
<p>ஆனால்.. <br />
அடிப்படை உடல் அமைப்புக் கூட <br />
அப்பளமாய் நொறுங்கிப் போக <br />
இங்கே நசுங்கிக் கிடக்கிறது அது !</p>
<p>&#160;</p>
<p>அந்த நேரத்தில்  <br />
சாலையோரத்தில் தேங்கிய நீரில் <br />
அவசரக் குளியல் போட வந்த <br />
அத்தனைக் காகங்களுக்கும் <br />
அடித்தது யோகம் !</p>
<p>&#160;</p>
<p>இன்று அவைகள் <br />
வேறெங்கும் அலைந்து திரிய வேண்டியது இல்லை <br />
காலை உணவுக்காய்..</p>
<p>&#160;</p>
<p>ஆனால் அவை ஒரு குட்டிச் சதையை <br />
சாலை மத்திக்குச் சென்று <br />
கொத்தித் தின்பதற்க்குள்.. <br />
விரைந்து வரும் இருபது வாகனங்களில் இருந்து <br />
தப்பித்து உயிர் பிழைக்க வேண்டி இருந்தது !</p>
<p>&#160;</p>
<p>தலைத் தெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களின் <br />
ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான இடைவெளிகளில் <br />
அவை பார்த்துப் பார்த்து பறந்து கொண்டிருந்தன <br />
தமக்கு கிடைத்த இரை மீதான இலக்குடன் !</p>
<p>&#160;</p>
<p>சட்டென ஒரு சத்தம்.. <br />
சின்னதாய் ஆனால் தெளிவாய்..<br />
பகிர்ந்துண்ண பறந்துக் கொண்டிருந்த <br />
காகங்களில் ஒன்று.. <br />
பார்வையற்ற பழைய வண்டியில் மோதி <br />
பரிதாபமாய் இறந்து கொண்டிருந்தது !</p>
<p>&#160;</p>
<p>வேலைநாள் காலை அவசரத்தில் <br />
சுழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு <br />
சக மனிதர்களே கண்ணுக்குத் தெரியாது.. <br />
பாவம் இந்தக் காகமும் நாயும் எம்மாத்திரம் !</p>
<p>&#160;</p>
<p>பசியோடு ஒவ்வொரு நொடியும் <br />
உயிரோடு போராடி <br />
அடுத்து வரும் வாகனங்களில் <br />
எந்த நொடியிலும் <br />
அடிபடலாம் என்ற சூழலிலும்.. </p>
<p>தன் உணவுக்காய் உயிரைப் பணயம் வைத்து <br />
பறந்து கொண்டிருக்கும் <br />
இந்தக் காகங்களைப் பார்த்தவுடன் <br />
ஒன்று தோன்றியது !</p>
<p>&#160;</p>
<p>ஒவ்வொரு நிமிடமும் <br />
செத்துச் செத்து பிழைக்கும் <br />
இந்தக் காகங்களை விட.. </p>
<p>ஒரே நிமிடத்தில் <br />
அடிபட்டுச் செத்துப் போன <br />
அந்த நாய்க்குட்டி அதிர்ஷ்டசாலி !</p>
<p>&#160;</p>
<p>&#160;</p>
<p>&#160;</p>
<p>இறுதியாய் எனக்கொரு கவிதையைத் தந்து விட்டு இறந்து போன அந்த  நாய்க்குட்டிக்கும் காகத்துக்கும் எனதுக் கவிதாஞ்சலி !</p>
<p>&#160;</p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மழைக்காலை வேளை..]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/10/28/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88/</link>
<pubDate>Wed, 28 Oct 2009 02:39:49 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/10/28/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88/</guid>
<description><![CDATA[&nbsp; இன்னும் வெயில் வராத இளம் அதிகாலை.. மெல்ல மெல்ல மொட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன வ]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p>&#160;</p>
<p>இன்னும் வெயில் வராத இளம் அதிகாலை..<br />
மெல்ல மெல்ல மொட்டவிழ்த்துக் கொண்டிருக்கும்<br />
சின்னச் சின்ன வண்ணப் பூக்கள்..</p>
<p>&#160;</p>
<p>முற்றிலும் அமைதியான சுற்றுச் சூழல்..<br />
ஏதுவாய் இதயத்தில் ஏகாந்தமான ஒரு நிலை..</p>
<p>&#160;</p>
<p>கண்களைச் சுற்றிப் படர்ந்திருக்கும் ஈரப் பச்சை..<br />
காதுக்கருகில் பாடும் பெயர் தெரியாத பறவை..</p>
<p>&#160;</p>
<p>மெல்லக் குளிர் தந்து உரசும் கந்தர்வக் காற்று..<br />
சுவாசத்தில் சுகமாய் நுழையும் மண் வாசனை..</p>
<p>&#160;</p>
<p>எதிரில் மெதுவாய் தூறிக்கொண்டிருக்கும் வெள்ளை மழை..<br />
அருகில் அடிக்கடி வந்து வருடிப் போகும் பிள்ளைச் சாரல்..</p>
<p>&#160;</p>
<p>தொலைவில் எங்கோ மெலிதாய் கேட்கும் <br />
மனதிற்குப் பிடித்தப் பாடல்..</p>
<p>&#160;</p>
<p>இவற்றோடு சேர்த்து சூடாய் <br />
காதலியவளின் சுந்தர நினைவு..</p>
<p>&#160;</p>
<p>அடடா.. இதை விட.. இந்த பொழுதை விட..<br />
இந்த இயற்கையை விட..<br />
அழகாய் யாரால் எழுதிவிட முடியும் <br />
ஒரு நல்லக் கவிதையை..</p>
<p>&#160;</p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[புத்தம்புது தீபாவளி…]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/10/17/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e2%80%a6/</link>
<pubDate>Fri, 16 Oct 2009 20:10:34 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/10/17/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e2%80%a6/</guid>
<description><![CDATA[  பிள்ளைப் பிராயத்து தீபாவளிகள்.. பள்ளிப் பருவத்து தீபாவளிகள்.. கல்லூரிக்கால தீபாவளிகள்.. இளமைக்குகந]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>பிள்ளைப் பிராயத்து தீபாவளிகள்..<br />
பள்ளிப் பருவத்து தீபாவளிகள்..<br />
கல்லூரிக்கால தீபாவளிகள்..<br />
இளமைக்குகந்த தீபாவளிகள்.. போல இல்லை<br />
இந்த வருட தீபாவளி !</p>
<p>இது கொஞ்சம் வித்தியாசமானது..<br />
நிறைய புதுமையானது !</p>
<p> </p>
<p>விடியற்காலையிலேயே எழுந்து குளித்து..<br />
ஈரத்தை துவட்டி..  நடு வகிடெடுத்து..<br />
பொட்டுக் குங்குமம் வைத்து..<br />
தழையத் தழைய பட்டுப் புடவை உடுத்தி..<br />
கூந்தல் நிறைய பூக்கள் சொருகி..</p>
<p>தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி..<br />
என்னங்க நான் இப்ப பாக்க எப்படி இருக்கேன் ?<br />
என வெட்கச் சிரிப்போடு கேட்கிறாள்  <br />
மனைவியானாலும் மாறாத என் காதலி !</p>
<p> </p>
<p>என்னை வேட்டிச் சட்டையில் பார்ப்பதில்தான்<br />
எவ்வளவு ஆசை அவளுக்கு !</p>
<p>எப்போதும் என் பக்கத்திலேயே<br />
என்னையேச் சுற்றி சுற்றி<br />
வந்து கொண்டிருந்தவள்..</p>
<p>நான் முதல்வெடி வெடிக்க வா.. என்றழைத்த <br />
அந்தப் பொழுதில் மட்டும்<br />
நிற்கிறாள் பயத்தோடு விலகி..</p>
<p>வீட்டு பூஜை முடித்து..<br />
பலகாரம் பகிர்ந்துண்டு..<br />
பக்கத்துக் கோவிலுக்கு ஜோடியாய் சென்று வந்து..</p>
<p>வீட்டு வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு <br />
வர மறுக்கும் அவள் கையைப் பிடித்திழுத்து<br />
அணைத்தபடி வெடி வெடிக்க வைத்து..</p>
<p>அவளுக்கு வெடிமீதான பயம் போயிருந்தாலும்<br />
நான் அணைத்து வெடிக்க வைப்பதற்காக<br />
இன்னும் பயப்படுவதாய் நடித்து..</p>
<p>மாலையில் குடும்பத்தோடு ஊர் சுற்றி..<br />
இருட்டியதும் வானவேடிக்கைகள் ரசித்து..</p>
<p>கம்பி மத்தாப்புகளின்.. புஷ்வானங்களின்..  <br />
சங்குச் சக்கரங்களின்.. வெளிச்சத்தில்<br />
அவள் குழந்தையாய் மாறிவிட்டதை ருசித்து..</p>
<p>இதோ இன்னும் இன்னும் எவ்வளவோ அழகான<br />
பரவசம் மிக்க பண்டிகை நிமிடங்கள்..</p>
<p> </p>
<p>கடல் பார்த்து தனிமையோடு <br />
அமர்ந்திருக்கும் பொழுதில்<br />
அலை கரை சேர்த்த அதிசயச் சிலை போல..<br />
எப்போதாவது கிடைக்கும்<br />
அரிய பொக்கிஷ தினம் இது..</p>
<p> </p>
<p>நான் இதுவரை கடந்த தீபாவளி எல்லாம்<br />
என்னை மட்டும் சார்ந்தது..</p>
<p>இது என்னோடு இணைந்த<br />
ஒரு பெண்ணையும் சேர்ந்தது..</p>
<p> </p>
<p>இது இதுவரை இல்லா தீபாவளி..<br />
நான் இதுவரைக் காணா தீபாவளி..</p>
<p>இதயத்தில் மழை தூறும் தீபாவளி..<br />
மனம் வானவில்லாய் மாறிப்போகும் தீபாவளி..</p>
<p>ஐந்தடி இனிப்பு கிடைத்த தீபாவளி..<br />
துள்ளிச் சிரிக்கின்ற மத்தாப்பு கிடைத்த தீபாவளி..</p>
<p>ஒவ்வொரு நாளுமே என் வாழ்வில் தீபாவளி..<br />
இருந்தும் இதுதான் எனக்கும் அவளுக்கும் <strong>தலை தீபாவளி..</strong></p>
<p> </p>
<p> </p>
<p>தலை தீபாவளி கொண்டாடும் அத்தனை புதுமணத் தம்பதியருக்கும்.. அத்தனை பிரியமானவர்களுகும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்களோடு&#8230;<br />
 </p>
<p>பிரியமுடன்&#8230;<br />
பிரியன்&#8230;</p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[தீபாவளி நினைவுகள்...]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/10/15/%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
<pubDate>Wed, 14 Oct 2009 21:00:39 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/10/15/%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</guid>
<description><![CDATA[  அடடா.. இந்த தீபாவளி வந்துவிட்டாலே எவ்வளவு பரவசம் ஊரிலும் நம்மிலும் !   துணிக்கடைகள்.. பட்டாசுக்கடை]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>அடடா.. இந்த தீபாவளி வந்துவிட்டாலே<br />
எவ்வளவு பரவசம் ஊரிலும் நம்மிலும் !</p>
<p> </p>
<p>துணிக்கடைகள்.. பட்டாசுக்கடைகள்..<br />
பலகாரக் கடைகள் என்று<br />
விதவிதமாய் வீதியெங்கும்<br />
நிறைந்திருக்கும் கடைகளும் மக்களும் !</p>
<p>காத்திருப்பது சுகமானது<br />
காதலுக்கு மட்டுமல்ல பண்டிகைக்கும்தான் !</p>
<p> </p>
<p>எதிர்பார்த்து எதிர்பார்த்து<br />
அந்த நாளின் முந்தைய இரவில்<br />
கூட்டாளிகளோடு சேர்ந்து<br />
விடிய விடிய கடைத்தெருக்களை<br />
ஒரு கலக்கு கலக்கிவிட்டு..</p>
<p>தீபாவளி விடியற்காலையில்<br />
வீட்டுக்கு வந்து..<br />
முதல் வெடி போட்டு<br />
ஊரை எழுப்பிவிட்டு..</p>
<p>எண்ணெய் வைத்துக் குளித்து..<br />
புத்தாடை உடுத்தி..<br />
அம்மா செய்த அத்தனை பலகாரங்களையும்<br />
ஒரு பிடி பிடித்து..</p>
<p>இடைவிடாது ஒரு மணிநேரத்திற்கு<br />
வெடி வெடித்து..<br />
மெல்ல நண்பர் கூட்டம் நோக்கி<br />
நடை போடும் கால்கள் !</p>
<p> </p>
<p>அனைவரும் ஒன்றாய் சேர்ந்து..<br />
அவனவன் புது உடை பற்றி கிண்டலடித்து..<br />
பலகாரங்கள் பண்டமாற்றம் செய்து ருசித்து..</p>
<p>எந்தெந்த வீட்டுப் பெண்கள்<br />
என்னென்ன புத்தாடை அணிந்திருக்கக்கூடும்<br />
என்பதை தெரிந்துகொள்ளவும்<br />
கிண்டல் செய்யவும்<br />
மெதுவாய் தொடங்கும் நகர்வலம் !</p>
<p> </p>
<p>பலபேர் அவனவன் ஆள் வீடு முன் கூடி<br />
ஜாடை பேசி ரகளை கட்டி..</p>
<p>சேலை கட்டத் தெரியாமல் கட்டி நிற்கும்<br />
சுடிதார் சுந்தரிகளை வம்பிழுத்து..<br />
தொடரும் ஊர்வலம் !</p>
<p> </p>
<p>அது என்ன மாயமோ தெரியவில்லை<br />
பண்டிகை தினங்களில் எல்லாம்<br />
இன்னும் அழகாகிவிடுகிறார்கள்<br />
நம் பெண்கள் !</p>
<p>பின்.. இருக்கும் வெடிகள் வெடித்தது போதாதென<br />
சின்னப் பையன்களின் வெடிகள் பிடுங்கி<br />
வெடித்துக் கிளப்பி வீடுபோய் சேருவோம்..</p>
<p> </p>
<p>மாலை வந்ததும் மறுபடி கூடும்<br />
நண்பர்கள்.. நகர்வலம்..</p>
<p>வீதியையே ரெண்டாக்கிவிட்டு<br />
வீடுபோய் சேருவோம்<br />
ஆடித் திரிந்த அலுப்புடனும்..<br />
பண்டிகை முடிந்த களைப்புடனும் !</p>
<p> </p>
<p>அன்று முழுக்க பட்டாசு சத்தங்களையும்<br />
மத்தாப்பு வெளிச்சங்களையும் போல..<br />
சிரிப்பும் சந்தோஷமும் மட்டுமே<br />
நிறைந்திருக்கும் எங்கள் மனதில் ! <br />
 </p>
<p>இதையெல்லாம் மெதுவாய் அசைபோட்டபடி<br />
வாசலில் நின்றிருந்த என்னையும்<br />
என் வீட்டையும் ஏதோ ஒரு எதிர்ப்பார்போடு<br />
கண்டும் காணாதது மாதிரி<br />
கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்<br />
சில இள வயதுகள்..</p>
<p> </p>
<p>அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம்<br />
ஆவலோடு வரக்கூடும்..</p>
<p>எனக்கும் பருவ வயதில்<br />
ஒரு மகள் இருக்கிறாளே&#8230;</p>
<p> </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[?...]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/10/12/629/</link>
<pubDate>Mon, 12 Oct 2009 08:14:38 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/10/12/629/</guid>
<description><![CDATA[  மேலிருந்து கீழ் விழும் அருவி.. கீழிருந்து மேல் எழும் குருவி.. விழுவதால் சிறிதா அருவி.. எழுவதால் பெ]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>மேலிருந்து கீழ் விழும் அருவி..<br />
கீழிருந்து மேல் எழும் குருவி..</p>
<p>விழுவதால் சிறிதா அருவி..<br />
எழுவதால் பெரிதா குருவி..</p>
<p> </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[செல்லத் தொல்லை...]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/10/03/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/</link>
<pubDate>Fri, 02 Oct 2009 22:00:44 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/10/03/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/</guid>
<description><![CDATA[  ரத்த ஓட்டப் பாதை எல்லாம் சத்தம் போட வைச்சவளே.. கண்ணு முழிக்குள்ளார கனவ வைச்சு தைச்சவளே..   ஒத்த இத]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>ரத்த ஓட்டப் பாதை எல்லாம்<br />
சத்தம் போட வைச்சவளே..</p>
<p>கண்ணு முழிக்குள்ளார<br />
கனவ வைச்சு தைச்சவளே..</p>
<p> </p>
<p>ஒத்த இதயத்த தகர்க்கிறியே<br />
வெடிகுண்டுக் கண்ணால..</p>
<p>மூச்சுக் காத்து போகும் இடமெல்லாம்<br />
சாத்திக்கிச்சே உன்னால..</p>
<p> </p>
<p>ஒடம்பு துடிக்க ஒரசி நின்னு<br />
உச்சி முடி சிலுக்க வைப்ப..</p>
<p>சட்டுன்னுதான் தள்ளிப்போயி<br />
சத்தியமா துடிக்க வைப்ப..</p>
<p> </p>
<p>கொஞ்சிக் கொஞ்சிப் பேசி என்ன<br />
சொட்டுச் சொட்டா நனைய வைப்ப..</p>
<p>கோபத்தோட ஏசி என்ன<br />
கொத்துத் தீயா எரிய வைப்ப..<br />
 </p>
<p>நீ நல்லப் பிள்ளையா.. &#8211; இல்ல<br />
செல்லத் தொல்லையா&#8230;</p>
<p> </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[விழித்துக்கொள் வீணையாளே…]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/09/27/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%af%87/</link>
<pubDate>Sat, 26 Sep 2009 18:44:57 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/09/27/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%af%87/</guid>
<description><![CDATA[  ஞானத்தின் பிறப்பிடமாய் நாளும் உனைப் போற்றுகிறோம்.. கல்விக் கடவுள் நீ என கைக்கூப்பி வணங்குகிறோம்.. ]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>ஞானத்தின் பிறப்பிடமாய் நாளும் உனைப் போற்றுகிறோம்..<br />
கல்விக் கடவுள் நீ என கைக்கூப்பி வணங்குகிறோம்..<br />
சரஸ்வதி பூஜை என தனி நாள் கொடுத்துக் கொண்டாடுகிறோம்..<br />
இதெல்லாம் இருக்கட்டும்..</p>
<p> </p>
<p>கண் மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் உந்தன் கற்பை <br />
கண் முன்னே களவாடிக் கொண்டிருக்கிறார்களே..<br />
இதை நீ அறிவாயோ ?</p>
<p>ஆம்.. இன்றையக் கல்வியின் நிலை என்ன..</p>
<p> </p>
<p>வெள்ளைக்காரன் எழுத்தர் வேலைக்காய் <br />
பகுத்துக் கொடுத்த பாடத்திட்ட முறையை<br />
பழுது நீக்காமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் இன்று வரை !</p>
<p> </p>
<p><strong>மதிப்பெண்களின் பின்னால்  <br />
தலைதெறிக்க நம் பிள்ளைகளை ஓட வைப்பதில் <br />
நமக்கு எவ்வளவு பெருமை !</strong></p>
<p> </p>
<p><strong>ஒரு வருடம் காற்புள்ளி அரைப்புள்ளி கூட மாறாமல்<br />
அப்படியே மனப்பாடம் செய்து செய்து<br />
மூன்று மணி நேரத்திற்குள் முடிந்தவரை<br />
வாந்தி எடுக்கத் தெரிந்தவரைத்தான்<br />
அறிவாளிப் பிள்ளையென அரங்கேற்றுகிறோம் !</strong></p>
<p> </p>
<p>யதார்த்த உலகை ஏனோ அவர்களுக்கு <br />
எப்போதும் நாம் காட்டுவதே இல்லை !<br />
ஏறக்குறைய கல்லூரிப் படிப்பு முடியும் வரை<br />
அவர்கள் அந்த மாயவலைக்குள்தான் <br />
மயங்கிச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் !</p>
<p> </p>
<p>படிப்பு முடிந்து சுயமாய் உலகை<br />
அணுகும் பொழுதுதான்<br />
உண்மையில் அவர்களின் வாழ்க்கை தொடங்குகிறது !</p>
<p> </p>
<p>எவ்வளவு பெரிய வித்தியாசம்..<br />
இதுவரை படித்த அத்தனையும் <br />
வெறும் அடிப்படை..<br />
இனி இருப்பதை சமாளிப்பதுதான்<br />
இங்கு வெளிப்படை என <br />
மனம் காட்டிக்கொடுக்கையில்..<br />
அவர்கள் என்னமாய் குழம்பிப்போகிறார்கள் !</p>
<p> </p>
<p>அதனால்.. இனியாவது நமது<br />
வேட்டிக்கதைப் பேச்சுக்களை <br />
பாடத்திட்டத்தில் இருந்து வெட்டி எறிந்துவிட்டு..</p>
<p>அவரவர் விருப்பத்திற்க்கேற்ப <br />
அவர்கள் விரும்பும் திசையில் <br />
நாளைகளை அமைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்த<br />
தொழில்நிலை செயல்முறை நிறைந்த<br />
யதார்த்தம் தப்பாத <br />
பயனுள்ள பாடத்திட்டங்களை<br />
நம் வருங்காலத் தலைமுறைக்கு<br />
அறிமுகம் செய்வோம் !</p>
<p>பின்.. நம் வியாபார புத்தியை எல்லாம்<br />
வேறெங்காவது வைத்துக்கொள்ளலாம்..<br />
கல்வி பாவம் அதை விட்டுவிடலாம் !</p>
<p> </p>
<p>கடலைப் பொட்டலம்போல கல்வியையும்<br />
காசு கொடுத்து வாங்கும் நிலை போதும் !</p>
<p> </p>
<p>இவையெல்லாம் தேவியே<br />
நீ அறிந்தாயோ இல்லையோ என்றுதான்<br />
எடுத்துரைக்கிறேன் என்னால் முடிந்தவரை..</p>
<p> </p>
<p>நீயோ இன்னமும் உன்<br />
புன்னைகை தவழும் முகம் மாறாமல் <br />
வீணையை அணைத்துக்கொண்டு<br />
அமைதியாய் அமர்ந்திருக்கிறாய் !</p>
<p> </p>
<p>நன்றாய் கவனித்துப் பார்..<br />
உன் கையில் வீணை இருப்பது உண்மைதான்..</p>
<p>ஆனால் அதன் தந்திகளை எல்லாம் <br />
அறுத்து விற்று பல காலமாயிற்று !<br />
வேண்டுமென்றால் சோதித்துப் பார்த்துக்கொள்..</p>
<p> </p>
<p>செல்வியே உன் உன்னதக் கல்வியை<br />
விபச்சாரக் கலவிபோல எண்ணி<br />
விரசமாய் வியாபாரம் பேசி<br />
வெட்கமின்றி விற்றுக் கொண்டிருக்கிறார்கள்..</p>
<p> </p>
<p><strong>கலைமகள் நீ விலைமகளாகும் முன்<br />
விழித்துக்கொள் வாணியே.. விழித்துக்கொள்..</strong></p>
<p> </p>
<p> <br />
இன்றைய  கல்வியின் நிலை வருத்தத்திற்குரியது..  கண்டனத்திற்க்குரியது..  பால்வாடி தொடங்கி பாரீன் சென்று படிப்பது வரை அந்தந்த படிப்புக்கேற்ற பணம்..  அரசுப்பள்ளியில் தொடங்கி அமெரிக்கப்பள்ளியில் படிப்பது வரை  அந்தந்த பள்ளிக்கேற்ப பணம்..   இது தகுமா !</p>
<p> </p>
<p>இன்று நம் பிள்ளைகள் புத்தக மூட்டை சுமக்க..  அதற்க்கு இணையாய் நாம் பணமூட்டையை கொடுக்க வேண்டியிருக்கிறது.   இப்படியே போனால் மூட்டைத் தூக்குபவன் பிள்ளைக்கெல்லாம் கல்வி என்பது காணக்கூட  கிடைக்காத கனவாகிவிடும் போலிருக்கிறது.</p>
<p> </p>
<p>ஆகையால் கல்வி நிறுவனங்களே.. அதிபர்களே..  இனியாவது கல்வியை கண்டபடி கூறு போட்டு காசுக்கு விற்பதை விட்டு கண்ணியமாய் கற்றுத் தர முயலுங்கள். அனைவருக்கும் அதற்க்கு உதவுங்கள். தலைமுறைகள் பல வாழ்த்தும் உங்களை.. சரஸ்வதியும்தான் !</p>
<p> </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சுவாசமிழந்த காதல்…]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/09/20/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%80%a6/</link>
<pubDate>Sun, 20 Sep 2009 11:23:54 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/09/20/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%80%a6/</guid>
<description><![CDATA[  உயிர் மூச்சாய் நின்றவளே.. உடைத்து எனைத் தின்றவளே.. விழி நழுவிச் சென்றவளே.. விதவிதமாய் கொன்றவளே..  ]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>உயிர் மூச்சாய் நின்றவளே..<br />
உடைத்து எனைத் தின்றவளே..</p>
<p>விழி நழுவிச் சென்றவளே..<br />
விதவிதமாய் கொன்றவளே..</p>
<p> </p>
<p>ஆக்சிஜெனாய் உனை எண்ணி<br />
உள்ளிழுத்து உறைந்து விட்டேன்..</p>
<p>மாயமதை அறியாது<br />
மயங்கி மதி கலங்கி விட்டேன்..</p>
<p> </p>
<p>வற்றாது வழியுதெந்தன்  <br />
கண்ணிரெண்டில் நீரோடை..</p>
<p>நீ காதலுக்கு தந்துவிட்டாய்<br />
கார்பன்டை ஆக்சைடை&#8230;</p>
<p> </p>
<p> </p>
<p>காதல் தோல்விக் கவிதைகள் அதிகம் இல்லையென சொல்லி எழுத வேண்டுகோள் விடுத்த ஒவ்வொரு இதயதிற்க்காகவும்&#8230;</p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[வாழ்வின் சூட்சுமம்…]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/09/15/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d%e2%80%a6/</link>
<pubDate>Tue, 15 Sep 2009 09:05:07 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/09/15/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d%e2%80%a6/</guid>
<description><![CDATA[  எழுவதும் விழுவதும் கரைவதும்  கடலலையின் இயல்பு !   கரைவதற்க்காய் நிலை கலைவதற்க்காய்   கவலைப்பட்டு ஒ]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>எழுவதும் விழுவதும் கரைவதும் <br />
கடலலையின் இயல்பு !</p>
<p> </p>
<p>கரைவதற்க்காய் நிலை கலைவதற்க்காய்  <br />
கவலைப்பட்டு ஒரு போதும் <br />
மீண்டும் எழ மறுப்பதில்லை அவை !</p>
<p> </p>
<p>மீண்டு எழத் தெரிந்தவை மட்டும்தான் <br />
மீட்டெடுக்கும் தன் வாழ்வின் சூட்சுமத்தை !</p>
<p> </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பயணப்படுங்கள்...]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/09/10/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
<pubDate>Wed, 09 Sep 2009 14:26:55 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/09/10/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</guid>
<description><![CDATA[  ஒரு திசையில் இருந்து இன்னொரு திசைக்கு  ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு  பயணித்துக்கொண்டே இரு]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>ஒரு திசையில் இருந்து இன்னொரு திசைக்கு <br />
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு <br />
பயணித்துக்கொண்டே இருங்கள் !</p>
<p> </p>
<p>நகர்தலில்தான் இருக்கிறது காலம்.. <br />
சுற்றுதலில்தான் இயங்குகிறது பூமி.. </p>
<p> </p>
<p>நகர்தலற்ற மரம் கூட <br />
வேர்களாய் மண்ணுக்கடியில் <br />
பயணப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது..</p>
<p> </p>
<p>பயணமற்ற வாழ்க்கை <br />
பயனற்றுப் போகும் !</p>
<p> </p>
<p>தேடல்களின் முதல் படி <br />
பயணமாய் அமைகிறது..</p>
<p> </p>
<p>தெரிந்ததற்கும் தெரியாததற்கும் உள்ள இடைவெளியை <br />
பயணம்தான் நிரப்புகிறது..</p>
<p> </p>
<p>பயணப்படுகிறவர்களுக்கு <br />
அறிதல் விரிகிறது.. <br />
புரிதல் தெரிகிறது..<br />
வாழ்வின் அர்த்தம் புரிகிறது !</p>
<p>  </p>
<p>அதனால் வீட்டுக் கூண்டுக்குள் வட்டமடிக்காமல் <br />
இடம் கடந்து எல்லைகள் தாண்டி <br />
எல்லாப் பக்கமும் உள்ள அனுபவங்கள் சேகரித்து <br />
அழகியல்கள் பருகி.. </p>
<p>அன்றாட நாட்களுக்கு புதுமைகள் உணர்த்த <br />
சலிக்காமல் ஒவ்வொரு நொடியிலும் வாழ <br />
பயணப்படுங்கள்.. </p>
<p> </p>
<p>எப்போதும் எங்காவது <br />
பறவைகளைப் போல <br />
தூரம் பார்க்காமல் <br />
பல்வேறு திசைகள் நோக்கி <br />
பயணப்படுங்கள்..</p>
<p> </p>
<p>அப்போது பல கேள்விகளுக்கு  <br />
தானாய் பதில்கள் கிடைக்கும்..<br />
அனைத்தும் தெளிவாகும், அழகாகும்..</p>
<p> </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[எங்கிருக்கிறது காதல்…]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/08/05/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%80%a6/</link>
<pubDate>Wed, 05 Aug 2009 06:10:25 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/08/05/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%80%a6/</guid>
<description><![CDATA[  உன் பார்வையும் என் பார்வையும் சந்திக்கும் புள்ளியிலா.. உன் வார்த்தையும் என் வார்த்தையும்  மரணிக்கு]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>உன் பார்வையும் என் பார்வையும்<br />
சந்திக்கும் புள்ளியிலா..</p>
<p>உன் வார்த்தையும் என் வார்த்தையும் <br />
மரணிக்கும் மௌனத்திலா..</p>
<p>உன் இதயமும் என் இதயமும் <br />
இசை மீட்டும் நிமிடத்திலா..</p>
<p>உன் விரலும் என் விரலும்<br />
பிணையும் ஸ்பரிச்த்திலா..</p>
<p>உன் உதடும் என் உதடும்<br />
உரசி உருகும் தருணத்திலா..</p>
<p>என் உடலும் உன் உடலும்<br />
பற்றிக்கொள்ளும் நெருக்கத்திலா..</p>
<p>என் உயிரும் உன் உயிரும்<br />
ஒன்றெனத் தோன்றும் உணர்ச்சியிலா..</p>
<p>எங்கிருக்கிறது காதல்..<br />
இதற்குள் எங்கிருக்கிறது இந்தக் காதல்..</p>
<p> </p>
<p>உண்மையில் இதில் எல்லாம் இல்லை காதல்..</p>
<p>இடைவெளியில்தான் இருக்கிறது காதல்..<br />
இதன் இடைவெளியில்தான் இருக்கிறது காதல்..</p>
<p> </p>
<p>ஆம்..<br />
ஒரு பார்வைக்கும் மறு பார்வைக்கும் உள்ள<br />
அந்த இடைவெளியில்…</p>
<p>ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கும் உள்ள<br />
அந்த இடைவெளியில்…</p>
<p>இதயமும் இதயமும் பிணையும் நிமிடதிற்க்குள்ள<br />
அந்த இடைவெளியில்…</p>
<p>விரலும் விரலும் இணையும் ஸ்பரிச்துக்குள்ள <br />
அந்த இடைவெளியில்…</p>
<p>உதடும் உதடும் உருகும் தருணத்திற்க்குள்ள  <br />
அந்த இடைவெளியில்…</p>
<p>உடலும் உடலும் கொள்ளும் நெருக்கதிற்க்குள்ள <br />
அந்த இடைவெளியில்…</p>
<p>உயிரும் உயிரும் ஒன்றெனக் கருதும் உணர்சிக்குள்ள<br />
அந்த இடைவெளியில்…</p>
<p>சுகமாய் முழுதாய் நிறைந்திருக்கிறது காதல்..</p>
<p> </p>
<p>கைவிரல்களில் இருக்கும் இடைவெளிகளை<br />
இன்னொரு கையின் விரல்கள் வந்து நிரப்புவதைப் போல..</p>
<p>ஆணுக்கும் பெண்ணுக்கும்<br />
இயற்கையிலேயே விடப்பெற்றிருக்கும் விடுபட்டிருக்கும்<br />
ரகசிய இடைவெளிகளை இனிக்க இனிக்க நிரப்ப<br />
அந்த இடைவெளிகளின் மத்தியில்தான் <br />
காதலுடன் காத்திருக்கிறது காதல்…</p>
<p> </p>
<p>இந்த ரகசியம் தெரிந்தவருக்கு <br />
மிக எளிதாய் வசமாகிறது காதல்..</p>
<p>உண்மையில் இந்த சூட்சுமம் உணர்ந்தவரிடம்தான்<br />
கை கட்டி நிற்கிறது காதல்…</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சாகாது உன் நினைவு...]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/06/25/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/</link>
<pubDate>Wed, 24 Jun 2009 14:47:16 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/06/25/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/</guid>
<description><![CDATA[  நெஞ்சுக் குழிக்குள்ளார நெருப்பக் கொட்டி ரசிச்சவளே.. மனசுக் குளமதிர கல்லெறிஞ்சு சிரிச்சவளே..   நாடி]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>நெஞ்சுக் குழிக்குள்ளார<br />
நெருப்பக் கொட்டி ரசிச்சவளே..</p>
<p>மனசுக் குளமதிர<br />
கல்லெறிஞ்சு சிரிச்சவளே..</p>
<p> </p>
<p>நாடி நரம்புக்குள்<br />
ஓடியாடி திரிஞ்சவளே..</p>
<p>இதயத்து மத்தியில<br />
இடம் வாங்கி அமர்ந்தவளே..</p>
<p> </p>
<p>கண்ணு முழிக்குள்ளார<br />
கண்டபடி நெளிபவளே..</p>
<p>கன்னத்தோட பாதையில<br />
கண்ணீரா வழிபவளே..</p>
<p> </p>
<p>கசக்கி எரிஞ்சாலும்<br />
கலங்காது என் மனசு..</p>
<p>நீ வெறுத்து மறுத்தாலும்<br />
மறக்காது என் உசுரு..</p>
<p> </p>
<p>மூச்சு எதுக்கையிலும்<br />
மூழ்காது என் கனவு..</p>
<p>என் சாவுப் படுக்கையிலும்<br />
சாகாது உன் நினைவு&#8230;<br />
 </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[புது வரவு..]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/06/20/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81/</link>
<pubDate>Fri, 19 Jun 2009 17:01:29 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/06/20/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81/</guid>
<description><![CDATA[    என்ன செய்வது.. எடை குறைவுதான்.. இருந்தாலும் அதை சரி கட்டத்தான்  நிறைவாய் நிரம்பி இருக்கிறதே அழகு]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> <img class="size-full wp-image-850     alignnone" title="10" src="http://piriyan.wordpress.com/files/2009/07/10.jpg" alt="10" width="450" height="337" /></p>
<p> </p>
<p>என்ன செய்வது..<br />
எடை குறைவுதான்..<br />
இருந்தாலும் அதை சரி கட்டத்தான் <br />
நிறைவாய் நிரம்பி இருக்கிறதே அழகு..</p>
<p> </p>
<p>நிறம் கொஞ்சம் கம்மிதான் என  <br />
யாரோ சொன்னது காதில் விழுந்துவிட்டதைப் போல்..<br />
உடனே பிஞ்சுக் கை கால்களை ஆட்டி ஆட்டி <br />
நீ சத்தமாய் அழ ஆரம்பித்த பொழுதில்.. </p>
<p>சிவந்து போன முகம் <br />
கோபத்தோடு சொல்வதாய் தோன்றியது<br />
&#8220;பாத்தியா என் நிறத்தை என்று..&#8221;</p>
<p> </p>
<p>நிர்வாணத்தின் கூச்சம் தெரியாத தெளிவே..<br />
உறக்கத்தில் உருகிச் சிரிக்கும் நிலவே..</p>
<p> </p>
<p>நகர்ந்து செல்லும் நாள் வராத சூரியனே..<br />
அதனாலென்ன..<br />
எப்போதும் உன்னை சுற்றித்தான் திரிகின்றன <br />
என் குடும்பத்து மனிதக் கோள்கள் அத்தனையும்..</p>
<p> </p>
<p>ஒன்றரை அடி கவிதையே..<br />
ஒப்பில்லா உவமையே..<br />
மென் தாமரை தேகம்..<br />
கரு வண்டுக் கண்கள்..<br />
சிவப்பு ரோஜாத்துண்டு உதடுகள்..<br />
பனித்துளி கால் விரல்கள்..<br />
மழைத்துளி கை நகங்கள்..<br />
செம்பருத்தி பாத மத்தி..<br />
நீ இரண்டரை கிலோ புனித சக்தி..</p>
<p>அமைதி.. அழுகை..<br />
ஆட்டம்.. தூக்கம்.. மட்டும் தெரிந்த மகத்துவமே..<br />
 <br />
உன்னால் தினம் தினம் <br />
திருவிழாக் காலம் போலானது வீடு..</p>
<p> </p>
<p>பிறந்து சில நாட்களே ஆன <br />
செல்ல மழலையே..<br />
குட்டிக் கடவுளே..</p>
<p>சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது..<br />
புது வரவே உனக்கு நல்வரவு <br />
என்ற ஒன்றைத் தவிர&#8230;</p>
<p> </p>
<p> </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஞானம்...]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/06/12/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</link>
<pubDate>Thu, 11 Jun 2009 17:39:49 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/06/12/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</guid>
<description><![CDATA[  வழக்கமாய் சென்றமரும் பழக்கமான குளத்துக் கரையில் நெடுநேரம் மௌனமாய் அமர்ந்திருந்த அந்தக் கணத்தில்.. ]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>வழக்கமாய் சென்றமரும்<br />
பழக்கமான குளத்துக் கரையில்<br />
நெடுநேரம் மௌனமாய்<br />
அமர்ந்திருந்த அந்தக் கணத்தில்..</p>
<p> </p>
<p>நீருக்கும் எனக்கும் இடையில்<br />
யாருமில்லை என்று<br />
மனதுக்குள் எண்ணிக் கொண்டிருந்த பொழுது..</p>
<p> </p>
<p>சட்டென வளைந்து நெளிந்து வந்த<br />
அந்த அழகிய அலைகள் <br />
புத்திக்கு உணர்த்திச் சென்றது..</p>
<p> </p>
<p>நீருக்கும் எனக்கும் இடையில்<br />
காற்று இருக்கும் உண்மையை&#8230;</p>
<p> </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[அம்மா சுட்ட சூயம்...]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/06/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%af%82%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/</link>
<pubDate>Fri, 05 Jun 2009 07:42:05 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/06/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%af%82%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/</guid>
<description><![CDATA[  எத்தனையோ நாளாச்சு அம்மா நீ சூயம் சுட்டுத் தந்து.. ஆயிரந்தான் தின்பண்டம் கடைக்கடையா நிறைச்சிருந்தால]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>எத்தனையோ நாளாச்சு<br />
அம்மா நீ சூயம் சுட்டுத் தந்து..</p>
<p>ஆயிரந்தான் தின்பண்டம்<br />
கடைக்கடையா நிறைச்சிருந்தாலும்..</p>
<p> </p>
<p>அரிசிமாவும் மைதாமாவும்<br />
கடலைப்பருப்பும் வெல்லப்பாகும்<br />
பக்குவமா கலந்துருட்டி..</p>
<p>கொதிக்க வைச்ச எண்ணையில<br />
முக்கி முக்கி மூழ்கடிச்சு..</p>
<p>இனிக்க இனிக்க சூயத்த<br />
சுடச்சுட எடுத்து வைக்கும்<br />
அம்மா கைய பாத்ததுமே..</p>
<p> </p>
<p>பசி வந்து பச போல<br />
உக்காந்துக்கும் வயித்துக்குள்ள&#8230;</p>
<p>உண்மையில அது வந்தது<br />
பசிக்கு இல்ல ருசிக்கு&#8230;</p>
<p> </p>
<p>மழ வந்து தல மேல<br />
நட போடும் நாளுலயும்..</p>
<p>சில்லுன்னுதான் குளிர்காத்து<br />
காதுரசும் நாளுலயும்..</p>
<p>மனசு வாய் திறந்து<br />
வேணுமின்னு கேட்கும் முன்ன..</p>
<p>பாசத்தோட என் தாயி<br />
பத்துப் பத்தா சுட்டு வைப்பா&#8230;</p>
<p> </p>
<p>கொட்டும் மழ சொட்டுரத<br />
எட்டி நின்னு பாத்தபடி..</p>
<p>சூடா ஒரு சூயத்த<br />
எடுத்து கடி கடிக்கயில..</p>
<p>உடம்பெல்லாம் இனிக்கும்..<br />
உசுரெல்லாம் இனிக்கும்..</p>
<p> </p>
<p>அத்தனையும் அலுங்காம<br />
நாங்க எடுத்து திங்க திங்க..</p>
<p>வைச்ச கண்ணு வாங்காம<br />
ஆசையோட பாத்திருப்பா எங்கம்மா..</p>
<p> </p>
<p>பத்தாம போகுமுன்னு<br />
நெனச்சாளோ  என்னவோ..</p>
<p>ஒருபோதும் அவ ஒன்ன<br />
எடுத்துத் தின்னு பாத்ததில்ல..</p>
<p> </p>
<p>காத்தெல்லாம் அழுக்கான<br />
நகரத்து வாழ்கையில..</p>
<p>ஓயாம நாங்க தினம்<br />
நசுங்கி திரியும் வேளையில..</p>
<p> </p>
<p>வயக்காத்தும் புல்நாத்தும்<br />
சுவையான சுன ஊத்தும்..</p>
<p>சுத்தி சுத்தி சொகம் கொடுக்கும்<br />
எதமான கிராமத்த..</p>
<p> </p>
<p>அப்பப்போ சூயம் தந்து<br />
புத்திக்கு நெனப்பூட்டும்<br />
என்ன பெத்த சத்தியமே..<br />
தாயான தத்துவமே..</p>
<p>வயசாகிப் போனாலும்<br />
வாடாத மல்லிகையே..</p>
<p> </p>
<p>மாசம் ஏழு கடந்திருச்சு..<br />
மழைக்காலம் நெருங்கிருச்சு..</p>
<p>மனசோட மத்தியில<br />
ஒரு ஏக்கம் உறுத்திருச்சு.. </p>
<p> </p>
<p>எத்தனையோ நாளாச்சே<br />
நம்மூரு நெனப்பு வந்து..</p>
<p>என் தாயே..<br />
எத்தனையோ நாளாச்சே<br />
நீ சூயம் சுட்டுத் தந்து&#8230;</p>
<p> </p>
<p> </p>
<p>எத்தனையோ கவிதைகளில்.. இது போன்ற ஒன்று.. அத்திப்பூ போல்.. குறிஞ்சிப்பூ போல்.. பூப்பதுண்டு எண்ணத்தில்&#8230;</p>
<p> </p>
<p>என் அன்னையோடு சேர்த்து.. தன் பிள்ளைகளுக்காய் வாழும் எல்லா அன்னைகளுக்கும்.. தன் பசி மறந்து குடும்ப பசி தீர்க்கும் எல்லா வீட்டுச்சாமிகளுக்கும்.. இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்&#8230;&#8230;..</p>
<p style="text-align:right;"> </p>
<p style="text-align:right;">பிரியமுடன்..<br />
பிரியன்&#8230;</p>
<p> </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நிலவின் மனம்...]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/06/01/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</link>
<pubDate>Mon, 01 Jun 2009 06:39:20 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/06/01/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</guid>
<description><![CDATA[எட்டடுக்கு மாளிகை கட்டி வைத்த மாடி தாண்டி  வட்டமிட வராத வானத்து வெண்ணிலவு..  கூறு போட்ட குடிசை வீட்ட]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p>எட்டடுக்கு மாளிகை<br />
கட்டி வைத்த மாடி தாண்டி <br />
வட்டமிட வராத<br />
வானத்து வெண்ணிலவு.. </p>
<p>கூறு போட்ட குடிசை வீட்டு<br />
குட்டிக் குட்டி கிழிசல் வழியே<br />
இஷ்டத்தோடு நுழைந்து வந்து <br />
கட்டாந்தரையில் படுத்துறங்கும்&#8230;</p>
<p> </p>
<p>கொஞ்சம் குறுந்தொகையை ஞாபகப்படுத்தும் என் பிரியத்திற்குரிய எனது கவிதை இது !!!</p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[காற்றுப் பூசாரி...]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/05/25/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf/</link>
<pubDate>Mon, 25 May 2009 06:29:02 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/05/25/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf/</guid>
<description><![CDATA[யாருக்கும் அடங்காத  பேய் பிடித்த பெண் போல  தலை விரித்தாடும் தென்னை மரம்.. காற்றுப் பூசாரியிடம் மட்டு]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p>யாருக்கும் அடங்காத <br />
பேய் பிடித்த பெண் போல <br />
தலை விரித்தாடும் தென்னை மரம்..</p>
<p>காற்றுப் பூசாரியிடம் மட்டும்<br />
கைக்கட்டி நிற்கும் பவ்வியமாய்…</p>
<p> </p>
<p> .</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[கடல் சார்ந்த கவிதைகள்..]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/05/20/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
<pubDate>Wed, 20 May 2009 06:04:56 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/05/20/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</guid>
<description><![CDATA[  1. கடற்கரையின் மணல்வெளியில் நண்டு பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாள் கலைந்த முடி சிறுமி ஒருத்தி.. ச]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>1.</p>
<p>கடற்கரையின் மணல்வெளியில்<br />
நண்டு பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாள்<br />
கலைந்த முடி சிறுமி ஒருத்தி..</p>
<p>சட்டென தனது பணி நியாபகம் வந்தவளாய்<br />
நண்டுகளை விட்டு<br />
சோகத்தோடு எழுந்து சென்றாள்<br />
வழக்கம்போல் பிச்சை எடுக்க&#8230;.</p>
<p>  </p>
<p> </p>
<p>2.</p>
<p>உனக்கென நான் கடற்கரையில்<br />
காத்திருக்கும் வேளையில்..</p>
<p>ஒவ்வொரு அலையும் ஓடி வந்து<br />
அப்படியே காட்டிச் செல்கிறது<br />
அடிக்கடி உன் முகத்தை..</p>
<p>கரையில் இருக்கும் எனக்கு<br />
நுரையில் முத்தங்கள்<br />
அனுப்பி வைத்தாயோ நீ&#8230;</p>
<p>ஈரம் காய்வதற்குள்<br />
இன்னும் வேண்டும் ஒன்று&#8230;</p>
<p> </p>
<p> </p>
<p> 3.</p>
<p>எத்தனை நாளாயிற்று<br />
உன்னைப் பார்த்தென<br />
ஆசையோடு நான் சென்று நின்ற வேளை..</p>
<p>சுடச்சுட சூரியனை<br />
தின்றுகொண்டிருந்தது கடல்..</p>
<p>ஆனாலும் மறக்கவில்லை <br />
என் கால்களை வருடிக் கொஞ்ச&#8230;.</p>
<p> </p>
<p> </p>
<p> 4.</p>
<p>உடைந்த மரத்துண்டு ஒன்றை<br />
உருட்டி விளையாடியபடி வந்த அலைகள்..</p>
<p>சட்டென பாய்ந்து என் கால்களுக்கடியில்<br />
மண்ணைக் கரைத்து விழ வைக்க முயன்று<br />
ஆட்டம் போட்டு விலகிச் செல்கின்றன<br />
கூட்டமாய் நிற்கும் பெண்களைப் பார்த்து<br />
சத்தமாய் சிரித்துக்கொண்டே..</p>
<p> </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[என்ன செய்வதாய் உத்தேசம்….]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/05/15/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e2%80%a6/</link>
<pubDate>Fri, 15 May 2009 05:34:43 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/05/15/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e2%80%a6/</guid>
<description><![CDATA[  அமைதியாய் வாழ்ந்த எம் மக்களை.. நடுக்கடலில் பசிப்பட்டினியோடு  கள்ளத் தோணியேறி திக்குத் தெரியாது திண]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>அமைதியாய் வாழ்ந்த எம் மக்களை..<br />
நடுக்கடலில் பசிப்பட்டினியோடு <br />
கள்ளத் தோணியேறி திக்குத் தெரியாது<br />
திணறித் தத்தளிக்க வைத்தாயிற்று…</p>
<p> </p>
<p>பரம்பரைகள் பல கண்ட வீடுகளை<br />
சல்லிச் சல்லியாய் நொறுக்கி எறிந்தாயிற்று..</p>
<p> </p>
<p>பயந்துபோய் பதுங்கு குழிகளுக்குள்<br />
ஒளிந்துகொண்டிருக்கும் ஜீவன்களையும்<br />
தேடிக் கொன்று அதற்குள்ளேயே புதைத்தாயிற்று..</p>
<p> </p>
<p>அடுத்த தலைமுறைகள்<br />
தளைத்தால்தானே இனமென கருதி<br />
பதின்ம வயதுகளை குறி வைத்து குலைத்தாயிற்று..</p>
<p> </p>
<p>கட்டெறும்பு கூட்டங்களை நசுக்குவதைப்போல<br />
கதறக் கதற கூட்டம் கூட்டமாய் சிதைத்து வீசியாயிற்று..</p>
<p> </p>
<p>உம் வீட்டுச் செடிகள் செழித்துப் பூக்க<br />
எம் பிஞ்சுப் பிள்ளைகளின் பிணங்களை<br />
உரமாய் போட்டாயிற்று..</p>
<p> </p>
<p>மீசை முளைத்தும் முளைக்காத <br />
வாலிப சடலங்களின் கரங்களில்<br />
துப்பாக்கிகளைத் திணித்து தீவிரவாதிகளாக்கியாயிற்று..</p>
<p> </p>
<p>வயதுக்கு வராத சின்னஞ்சிறு பெண்களையும்<br />
சிதைத்து சீரழித்து மகிழ்ந்தாயிற்று..</p>
<p> </p>
<p>பொழுதுபோய் பொழுது வந்தால்<br />
உயிர் வாழ்தல் நிச்சயமற்று<br />
கலங்கித் தவிக்கும் நிலைக்கு<br />
எம்மைக் கொண்டு வந்து விட்டாயிற்று..</p>
<p> </p>
<p>அகிலத்துக்கே முன்னோடியாய் வாழ்ந்த<br />
அரும் பெரும் இனத்தை<br />
அகதிகளாக்கி அங்கும் இங்கும் அலையவிட்டாயிற்று ..</p>
<p> </p>
<p>எல்லாமும் செய்தாயிற்று..</p>
<p>நாதியற்று நடை பிணங்களாய்<br />
வாழ வழி தெரியாது <br />
வீடிழந்து நாடிழந்து <br />
சொந்த பந்தங்கள் இழந்து<br />
மானமிழந்து இனமழிந்து<br />
அனாதைகளாய் நிற்க வைத்தாயிற்று..</p>
<p> </p>
<p>சரி…<br />
இன்னும் என்ன செய்வதாய் உத்தேசம்..</p>
<p>மிச்சம் மீதி ஒட்டிக்கொண்டிருக்கும்<br />
உயிர்களையும் உடல்களையும்<br />
சுக்கு நூறாய் கிழித்தெறிய வேண்டுமா..</p>
<p> </p>
<p>செய்யுங்கள்.. அதையும் செய்யுங்கள்..<br />
அப்படியே செய்யுங்கள்…</p>
<p>ஒன்று மட்டும் நிச்சயம்&#8230;<br />
இன்று எம்மினம் சிந்துகின்ற <br />
ஒவ்வொருத்துளி கண்ணீருக்கும் குருதிக்கும்..</p>
<p>நாளை வட்டியும் முதலுமாய் சேர்த்து <br />
உமக்குத் திருப்பித் தருமடா காலம்……</p>
<p> <br />
.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சாவு பெரிதில்லை..]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/05/14/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/</link>
<pubDate>Thu, 14 May 2009 05:15:57 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/05/14/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/</guid>
<description><![CDATA[  ஊரெங்கும் சிதறிக் கிடக்கும் உடல்கள்.. பரிதாபமாய் பறிபோகும் உயிர்கள்.. இறந்த தாய் மார்பிழுக்கும்  ப]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>ஊரெங்கும் சிதறிக் கிடக்கும் உடல்கள்..<br />
பரிதாபமாய் பறிபோகும் உயிர்கள்..</p>
<p>இறந்த தாய் மார்பிழுக்கும் <br />
பசித்த பிள்ளைகள்..</p>
<p>அச்சத்தில் கற்பிழக்கும்<br />
இளவயது பெண்கள்..</p>
<p>மலையென குவிந்து கிடக்கும்<br />
மனிதப் பிணங்கள்..</p>
<p>சுடச்சுட நிரம்பிக் கிடக்கும்<br />
குருதிக் குளங்கள்..</p>
<p>அழத் திராணியற்று வற்றிப்போன<br />
கண்ணீர்த் துளிகள்..</p>
<p>அவமானம் அடித்த வலி தாங்கா<br />
ஊமை மனங்கள்..</p>
<p><strong>கூடிக்களித்த உறவுகள் இல்லை..<br />
தாங்கிப் பிடித்த வீடுகள் இல்லை..<br />
ஆடித் திரிந்த நாடின்று இல்லை..<br />
ஆறுதல் சொல்ல யாருமே இல்லை..</strong></p>
<p><strong>அடப்போங்கடா..<br />
இனி சாவதற்கு<br />
எங்களிடம் ஒன்றுமே இல்லை…</strong></p>
<p> </p>
<p> </p>
<p><strong>.</strong></p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[கடவுளைய்யா வாருமைய்யா…]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/05/12/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e2%80%a6/</link>
<pubDate>Tue, 12 May 2009 04:59:41 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/05/12/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e2%80%a6/</guid>
<description><![CDATA[  சரம் சரமா மனித இனம் செத்து செத்து விழுது இங்க.. காப்பாத்துவாயாமே சாமியே நீ எங்க..   வாழ வந்த எல்லா]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>சரம் சரமா மனித இனம்<br />
செத்து செத்து விழுது இங்க..</p>
<p>காப்பாத்துவாயாமே<br />
சாமியே நீ எங்க..</p>
<p> </p>
<p>வாழ வந்த எல்லாருக்கும் <br />
சாவு வரும் மாற்றமில்ல..</p>
<p>அந்த சாவக்கூட நிம்மதியா <br />
எங்க இனம் காணவில்ல..</p>
<p> </p>
<p>கருவறையிலேயே கல்லறையா புதைஞ்சு போன <br />
பச்சப்பிள்ள பண்ண தப்பு என்னன்னே தெரியலையே..</p>
<p> </p>
<p>கண்ணுக்கு முன்னாடி சுக்கு நூறா உடல் சிதறி<br />
சாகும் ஜனம் பாக்க என்ன பாவம் செஞ்சேன் புரியலையே..</p>
<p> </p>
<p>கடவுளைய்யா.. கடவுளைய்யா..<br />
அத்தனையும் பாத்துகிட்டு<br />
அமைதியா இருக்குற நீ..</p>
<p>இப்ப என் முன்னால<br />
காட்சி தர வாருமைய்யா….</p>
<p>சத்தியமா உன் மூஞ்சியில<br />
காறித் துப்ப வேணும் நானு…</p>
<p> </p>
<p> </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[வலிகளின் முனகல்கள்…]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/05/09/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%a6/</link>
<pubDate>Sat, 09 May 2009 04:47:28 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/05/09/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%a6/</guid>
<description><![CDATA[  எம்மினம் கூட்டம் கூட்டமாய் அழியக் கண்டு கதறிக் கூக்குரலிட்டு  கோபத்தோடு எதிர்ப்பை தெரிவிக்கிறது  ஒ]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>எம்மினம் கூட்டம் கூட்டமாய் அழியக் கண்டு<br />
கதறிக் கூக்குரலிட்டு <br />
கோபத்தோடு எதிர்ப்பை தெரிவிக்கிறது <br />
ஒட்டுமொத்த மனித இனமும்…</p>
<p> </p>
<p>நீங்களோ அவை எதுவும்<br />
உங்கள் செவிகளில் விழாததைப் போல<br />
விரட்டி விரட்டிக் கொல்வதிலேயே<br />
குறியாய் இருக்கிறீர்களே எப்படி ?</p>
<p> </p>
<p>உண்மையிலேயே எங்கள் அழுகுரல்களும் அவஸ்தைகளும்<br />
உங்கள் காதுகளில் விழவில்லையோ..</p>
<p>ஆம்.. அப்படித்தான் இருக்கும்…</p>
<p>எப்போதும் உங்கள் காதுகளைத்தான் <br />
துப்பாக்கிகளின்.. பீரங்கிகளின் ராட்சச சத்தங்கள்<br />
நிரப்பிக் கொண்டு இருக்கின்றதே..</p>
<p>பின் எப்படி உங்களுக்குக் கேட்குமெங்கள் <br />
வலிகளின் முனகல்கள்…</p>
<p> </p>
<p>.</p>
</div>]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மானப் பசி..]]></title>
<link>http://piriyan.wordpress.com/2009/04/29/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf/</link>
<pubDate>Wed, 29 Apr 2009 04:18:17 +0000</pubDate>
<dc:creator>piriyan</dc:creator>
<guid>http://piriyan.wordpress.com/2009/04/29/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf/</guid>
<description><![CDATA[  நாங்கள் மானம் கெட்டு வீடுகள் விட்டு உறவுகள் கண்முன் சாவது கண்டு துடிதுடித்து உங்கள் துணை வேண்டி கர]]></description>
<content:encoded><![CDATA[<div class='snap_preview'><p> </p>
<p>நாங்கள் மானம் கெட்டு<br />
வீடுகள் விட்டு<br />
உறவுகள் கண்முன் சாவது கண்டு துடிதுடித்து<br />
உங்கள் துணை வேண்டி கரங்கள் நீட்டுகிறோம்…</p>
<p> </p>
<p>நீங்களோ ஐயோ பாவம் என உச்சுக் கொட்டி<br />
எங்கள் கைகளில் திணிக்கிறீர்கள் சோத்து மூட்டைகளை..</p>
<p> </p>
<p>எங்களுக்கு வயிற்றுப் பசி பெரிதில்லை சகோதரா..<br />
மானப்பசி..  இனப்பசி..  இதயப்பசி பெரிது..</p>
<p> </p>
<p>ஊடகங்களில் எங்கள் நிலை பார்த்து<br />
நிவாரண நிதியும் சோத்து மூட்டையும் <br />
தருவது போதும்..</p>
<p> </p>
<p>எம் கண்களில் கசிகிற<br />
உரிமைகளுக்கான பசியைப் பார்..</p>
<p> </p>
<p>இனம் அழியும் கோபமும் வெறுமையும் பொங்கும்<br />
கொடும் பசியைப் பார்..</p>
<p> </p>
<p>நம்மினம் காக்க வலிமை தா தமிழா..<br />
தமிழினம் தரணியாளும் நாள் வரும் தமிழா&#8230;</p>
</div>]]></content:encoded>
</item>

</channel>
</rss>
